Sunday, September 27, 2009

ஆதவன் தீட்சன்யா என்னும் ஆள்காட்டி

தனி ஈழத்தை ராஜபக்ஷேயிடம் இருந்து வாங்கினாலும் வாங்க முடியும் , ஆனால் ஆதவன் தீட்சன்யாவிடம் இருந்து வாங்க முடியாது போலிருக்கிறது.

மே 17 –ல் ஈழப்போராட்டம் ஒரு நெருக்கடியை சந்தித்த நாளில் இருந்து அவருடைய ஆட்டமும் பாட்டமும் ஆனந்தத் தாண்டவமும் சகித்துக் கொள்ள முடியாத படி இருக்கிறது.

தான் சார்ந்திருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உள் பார்பன கட்டமைப்பை மகிழ்ச்சி செய்யும் விதத்தில் ஈழப்போராட்டத்திற்கு எதிராக பேசியும் எழுதியும் வருகிறார்.

சமீபமாக அவர் சிறப்பு ஆசிரியராக செயல் படும் புதுவிசையில்
இலங்கையில் இருந்து வருகை தந்திருக்கும் இஸ்லாமியப் பேராசிரியர் சிராஜ் மசூர் அவர்களின் – நேர்காணலைப் பிரசுரித்திருக்கிறார்.

இன்று ஈழம் குறித்து கேட்க ஆயிரம் விஷயங்கள் இருக்கின்றன.

அங்கு சிங்களப் பேரினவாதம் தன்னுடைய பேயாட்சியை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது.

மூன்று லட்சத்திற்கும் அதிகமான மக்கள் திறந்த வெளி கொட்ட்டிகளில் அடைக்கப் பட்டிருக்கிறார்கள்.

தினசரி நூற்றுக்கணக்கில்இளைஞர்கள் கண்களை கட்டி அழைத்துச் செல்லப்பட்டு சுட்டு கொலை செய்யப்படுகிறார்கள்.

மனித உரிமையும் மனிதாபிமானமும் இதுவரை உலகம் சந்தித்திராத வகையில் மிகவும் நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறது.

தமிழர்கள் வாழும் பகுதிகள் என்று மட்டுமில்லாமல் சிங்களர்களும் வாழும் பகுதிகளிலும் ஜனநாயகத்தின் குரல்வளை நெறிக்கப்பட்டிருக்கிறது.

இவைகள் எவைகள் பற்றியும் கேள்வி கேட்காமல், என்னென்ன கேள்விகளைக் கேட்டால் விடுதலைப் புலிகள் இய்க்கத்தின் மீதான கசப்புணர்வை உண்டாக்கும் பதில்கள் வருமோ அது போன்ற கேள்விகளாக கவனமாக கேட்டிருக்கிறார்கள்.

இதில் ஆச்சர்யப் படுகிற விதமாக நான் மேற் சொல்லும் விஷயங்கள் குறித்து ஒரு கேள்வியும் இல்லை.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது ஒருவருக்கு அல்லது ஒரு கட்சிக்கு விமர்சனம் இருப்பது தவறில்லை.

இன்று அங்கே நெருக்கடிக்குள்ளாகி இருப்பது விடுதலைப் புலிகள் இயக்கம் மட்டுமல்ல.விடுதலைப் புலிகளை எதிர்ப்பவர்கள் அதனை வெறுமனே கொண்டாடுவதற்கு.

சில லட்சம் தமிழர்கள் இறந்து போயிருக்கிறார்கள். மிகவும் அநீதியான போர்க்குற்றங்கள் நிகழ்த்தப் பட்டிருக்கிறது. உலக வரலாற்றில் ஒரு இனம் மிகவும் வஞ்சிக்கப்பட்டிருக்கிறது.

ஈழமே ஒரு பெரிய இழவு வீடு போல் இருக்கிறது.

இத்தனை பெரிய துயர சமயத்தையும், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது வெறுப்புணர்வை வளர்க்கும் விதமாக பயன்படுத்திக்கொள்வதற்கு ஒருவருக்கு அல்லது ஒரு கட்சிக்கு மிகவும் குரூரமான மனம் இருக்க வேண்டும்.

இந்த புதியவிசை பத்திரிக்கைக்கு மனிதாபிமானத்தை பிதுக்கிப் பிதுக்கி கதை எழுதும் காமராஜ், ஷாஜகான் போன்றோர் ஆசிரியர் குழுவினர் வேறு.

அந்தப் பத்திரிக்கை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பார்வையில் இயங்கும் பத்திரிக்கை என்றே அறிகிறேன். அவர்களின் இலக்கியப் பிரிவான தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தமிழ்ச்செல்வன் அவர்களின் நேரடி கண்காணிப்பில் உருவாகும் பத்திரிக்கை என்றும் அறிகிறேன்.

அந்த நேர்காணலை, அதில் கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளை , ஈழ விசயத்தில் கட்டற்று செயல்படும் ஆதவன் தீட்சன்யாவின் செயல்பாட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மனசாட்சியாகவே நான் பார்க்கிறேன்.

வரலாற்றில் கருணா,அப்துல் கலாம் , ஆதவன் தீட்சன்யா போன்றோருக்கு எப்போதுமே ஒரு தனி இடம் இருக்கிறது.

இவர்கள் தன்னுடைய இனத்தை அழிப்பவர்கள், வேறருப்பவர்கள், தன்னுடைய இனத்திற்கு எதிரானவர்கள் இவர்களோடு மிகுந்த உவப்புடன் கை கோர்த்துக் கொள்வார்கள். அதன் மூலம் தனக்கு கிடைக்கும் அங்கீகாரங்களை ஆனந்தமாக பெற்றுக்கொள்வார்கள். தன் இனத்திற்கு எதிரான செயல்பாடுகளை மிகுந்த ஈடுபாட்டுடன் செய்வார்கள். தன் இனத்திற்கு எதிரான செயல்பாடுகள் குறித்து மிகுந்த மௌனம் காப்பார்கள். இது அவர்களுக்கு அந்தஸ்த்துள்ள வாழ்க்கையை உண்டாக்கிக் கொடுக்கும்.

ஆதவன் தீட்சன்யாவிற்கும் அவருடைய இந்த நிலைப்பாடு நல்ல ஸ்தானத்தை உண்டாக்கிக் கொடுத்திருக்கிறது. கட்சி விரும்பும் பணியை சிறப்புடன் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்.

பண்ணையார்கள் வீட்டில் நிறைய வேட்டை நாய் வளர்ப்பார்கள். பண்ணை அடிமைகள் ஏதாவது கலகம் செய்தால் அந்த வேட்டை நாயை அவர்கள் மீது ஏவுவார்கள். அந்த வேட்டைநாயும் தனக்கே உரிய மிருக குணம் காரணமாகவும் விசுவாசத்தின் காரணமாகவும் பண்ணை அடிமைகளை விரட்டி விரட்டி கடிக்கும். ஆதவன் தீட்சன்யாவும் அப்படி ஒரு விசுவாசமான வேட்டை நாயகச் செயல்படுகிறார். அவர் கண்களிலும் பற்களிலும் ஒரு மிருகத்திற்கான குரோதம் இருக்கிறது.இத்தனைக்கும் அவருக்கு யாரும் கட்டளையிடவில்லை. வெறுமனே அவிழ்த்து மட்டுமே விட்டிருக்கிறார்கள். அதிலிருந்தே குறிப்பறிந்து செயல் படுகிறார்.


உலக வரலாற்றில் எனக்குப் புரியாத ஒரு விஷயம் இந்தியாவில் இருக்கிற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதும் ஈழப்போராட்டத்தின் மீதும் இருக்கிற பகை உணர்வு தான்.

முப்பத்தியேழு ஆண்டுகள் அங்கே ஒரு போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது . அது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோவில் இருந்து ஒரு அறிக்கை வந்தது இல்லை நண்பர்களே.

கடந்த ஐம்பது ஆண்டுகளாக ஈழத்தமிழர்கள் அகதிகளாக அலைந்து கொண்டிருக்கிறார்கள், அவர்களுக்காக இவர்கள் ஒரு பிடி அரிசி சேகரித்து தந்த தில்லை நண்பர்களே.

மே’17க்கு முன்பாக போர் உச்சக்கட்டத்தை அடைந்து தினசரி சில ஆயிரம் தமிழர்கள் இறந்து போய் கொண்டிருந்தார்கள் அந்த இறப்பு குறித்து அவர்களின் எந்த சஞ்சிகைகளிலும் ஒரு செய்தி இருந்ததில்லை நண்பர்களே.

மொத்த த்தில் அவர்கள் தமிழ் அரசியலுக்கு எதிராக யோசிக்கிற செயல்படுகிற சில லட்சம் மூளைகளை தமிழகத்தில் உருவாக்கியிருக்கிறார்கள்.

இவ்வளவு பெரிய பகை இவர்களுக்கு ஏன் என்று யோசித்துப் பார்க்கிறேன்.

விடுதலைப் புலிகள் இயக்கம் கடந்த 37 ஆண்டுகளாக வீரம் சொறிந்த போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இங்கே சிபிஎம் தோழர்கள் பணம் வசூலித்து அதை மாத சம்பளமாக பிரித்துக் கொண்டு ஒரு சுகபோக வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இது ஒரு கேள்வியாக தமது தோழர்களிடையே எழுந்து விடக்கூடாது என்று நினைத்து இப்படி ஒரு துவேஷத்தை அவர்கள் மீது பரப்பி விடுகிறார்களோ என்று தோன்றுகிறது.

அல்லது ஹிந்து என்.ராம்தான் இவர்களின் ஞானகுருவாக அரசியல் வழிகாட்டியாக இருந்து வருகிறார்.அவருடைய வழிகாட்டுதலால் இவ்வாறு செயல்படுகிறார்களா என்றும் தெரியவில்லை.

அல்லது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிராமன மலையாள பெரும்பான்மைத் தலைமை காரணமா என்று யோசிக்கிறேன்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து ஈழப்போராட்டம் குறித்துப் பேசாமல் கள்ள மௌனம் சாதித்து வருகிறது. அதனுடைய கள்ள மௌனம் சில ரகசிய சமிஞ்கைகளை உண்டாக்க தமிழகத்தின் சிபிஎம் தோழர்கள் ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக தான்தோன்றித் தனமாகவும் தற்குறித்தனமாகவும் எழுதவும் பேசவும் துவங்கி விட்டார்கள்.

ஆதவன் தீட்சன்யா போன்ற சில்லரைகள் அல்லாமல் சிபிஎம்மின் தமிழ் மாநிலக் குழுவின் யாரோ ஒருவரோ அல்லது சிபிஎம்மின் அறிவின் ஊற்றுக்கண் என்று சொல்லப்படுகிற பொலிட்பீரோவின் யாரோ ஒருவரோ ஈழம் குறித்து வெளிப்படையான விவாத த்திற்குத் வருவார்களே யானால் அவர்களின் விவாத த்தை எதிர்கொள்ளலாம். ஆனால் சிபிஎம் ஒரு போதும் அதை செய்வதில்லை. அப்படிச் செய்தால் சிபிஎம் கடந்து ஐம்பது ஆண்டுகளாக உள்ளே சேகரித்து வைத்திருக்கிற தமிழ் குரோத அரசியல் வெளிப்பட்டு விடும். கட்சியில் மீதமும் இருக்கிற தமிழ் உணர்வாளர்களை அது இழக்க நேரிடம்.

அதனால் தான் கட்சி மௌனமாக இருந்து விட்டு ஆதவன் தீட்சன்யா போன்ற சில்லரை அரசியல் வாசிப்பாளர்களை அது ஏவி விடுகிறது.

ஆதவன் தீட்சன்யாவும் பாய்ந்து பாய்ந்து குரைத்து தன் விசுவாசத்தைக் காட்டுகிறார்.

நாளை ஆதவன் தீட்சன்யாவின் காதில் கட்சி முனுமுனுத்தால் அவர் திருமாவளவன் கிருஸ்ணசாமி போன்ற தலித் இயக்கத் தலைவர்களை கத்தியால் குத்தி விட்டு வந்து நின்றாலும் நிற்பார்.

ஆதவன் தீட்சன்யாவிற்கான நல்ல எஜமான் சிபிஎம். சிபிஎம்மிற்கான நல்ல வேட்டை நாய் ஆதவன் தீட்சன்யா.

Made for each other.

Tuesday, September 22, 2009

ஈழம்-என்ன செய்ய வேண்டும்? ஆலோசனைகள் வரத்துவங்கி விட்டன!

ஈழத்தமிழர்களுக்காக வருந்துகிற, கண்ணீர், விடுகிற பதறுகிற, எதுவும் செய்யத் தயாராக இருக்கிற சில கோடி பேர்கள் உலகெங்கிலும் இருக்கவே செய்கிறார்கள்.

யாரோ ஒரு மனிதன் அல்லது ஒரு தேவ தூதன் இங்கே நின்று ஈழத்தமிழர்களை விடுவிக்கும் , அவர்களின் இன்னலைப் போக்கும் ஒரு ஆலோசனையைச் சொன்னால் இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நின்று அந்த ஆலோசனையை செயல் படுத்தி அந்த மக்களை உடனடியாக விடுவிக்க விருப்பமாகவே இருக்கிறார்கள்.

ஆனால் இப்போது பிரச்சனை யார் அந்த மனிதன் அல்லது தேவதூதன் என்பதும் எது அந்த ஆலோசனை என்பதும் தான்.

யார் அந்த மனிதன் என்பதற்கு நம்மிடம் பதில் இல்லை.

அப்படி ஒரு மனிதன் வெளிப்படுவதும் சமீபத்தில் சாத்தியமில்லை .

ஆனால் எது அந்த ஆலோசனை என்பதை யோசிப்பதற்கும் அதை சொல்வதற்கும் சாத்தியமற்றுப் போய் விட்டது என்று நான் நினைக்கவில்லை.

ஈழத்தமிழர்களுக்காக நடக்கிற பல கூட்டங்களுக்கும் நான் செல்கிறேன்.
அந்தக் கூட்டங்களில் எல்லாம் நான் பொதுவாக சந்திக்கிற கேள்வியும் இன்று எல்லோருக்கும் இருக்கிற கேள்வியும் ‘’ யார் என்ன செய்ய வேண்டும்?’’ என்பதாகவே இருக்கிறது.

இதில் முக்கியமான இன்னொரு விஷயம். அப்படிக் கூட்டங்களுக்கு வருகிற ஒவ்வொருவரும் ஆளுக்கு சில ஆலோசனைகளுடன் வருகிறார்கள் என்பதே.

அவர்களின் பலருடைய ஆலோசனைகள் பரவசப் படுத்துவதை நான் உணர்ந்திருக்கிறேன்.

இன்று ஈழ மக்களுக்காக வருந்துகிற எல்லோரிடமும் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான சில அல்லது பல பதில்கள் இருப்பதை நான் பார்க்கிறேன்.

இன்று இந்த சமயத்தில் நான் செய்ய விரும்புவது அப்படியான ஆலோசனைகளை எல்லாம் ஓரிடத்தில் ஒன்று சேர்ப்பதும் அதை ஈழ உணர்வாளர்கள் எல்லோரையும் பார்க்கும் படி வைப்பதும் தான்.

எந்த சிறு பொறி பெரு நெருப்பாகி ஈழத்தில் நடக்கிற அநீதியை அழிக்கும் என்பதை யாரும் யூகிக்க முடியாது.

அந்த சிறு பொறி யாரிடமிருந்து வரலாம்.
உங்களிடமிருந்தும் வரலாம்.

எனவே ஈழ உணர்வாளர்களே !

இன்று யார் என்ன செய்ய வேண்டும் ?

ஆட்டுத் தொட்டிக்குள் சிக்கிய ஆடுகளென மூன்று லட்சம் மக்கள் முள்வேளி முகாம்களுக்குள் இருக்கிறார்கள். அவர்கள் என்ன செய்ய வேண்டும்?

இலங்கையின் மற்ற பகுதிகளில் வாழ்கிற தமிழர்கள் என்ன செய்ய வேண்டும்?

ராஜபக்ஷேயின் குரூரம் புரிந்த , தமிழர்களின் நிலை குறித்து அக்கறை கொண்ட சிங்களர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் என்ன செய்ய வேண்டும்?

தற்சமயம் மௌனித்திருக்கும் விடுதலைப்புலிகள் என்ன செய்ய வேண்டும்?

தமிழ் கட்சி கூட்டமைப்பினர் என்ன செய்ய வேண்டும்?

இலங்கையின் எதிர்க்கட்சிகளும் தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட கட்சியினரும் என்ன செய்ய வேண்டும்?

தமிழகத்தில் இருக்கிற அரசியல் கட்சிகள் மற்றும் ஈழ உணர்வாளர்களின் செயல்பாடுகள் என்னவாக இருக்க வேண்டும்?

இந்தியாவின் இரண்டு பெறும் எதிர்க்கட்சிகளாக இருக்கிற இடதுசாரிகளும் பிஜேபி கட்சியனரும் என்ன செய்ய வேண்டும்?

உலகம் முழுவதும் இருக்கிற புலம்பெயர்ந்த தமிழர்கள் என்ன செய்ய வேண்டும்?

நாடுகடந்த அரசு என்ன செய்ய வேண்டும் அல்லது நாடு கடந்த அரசுக்கு நாம் என்ன செய்ய வேண்டும்?

இவர்கள் தான் ஈழத்தமிழர்களை காப்பாற்ற முடிந்த சக்திகள் என்பது என் எண்ணம். இவர்களைத் தாண்டியும் யாரேனும் இருக்கலாம். அல்லது இவர்களில் யாரேனும் இல்லாமலும் இருக்கலாம்.

இவர்கள் எல்லோருமே ஈழத்தமிழர்களுக்காக உண்மையில் கண்ணீர் சிந்துகிறவர்களாக இருக்கிறார்கள்.என்ன செய்வது என்பது குறித்து தெளிவான முடிவுக்கு வரமுடியாமல் ஆளுக்கு ஒன்றாக ஏதோ செய்து கொண்டிருக்கிறார்கள்.

எனவே உங்களுடைய சிந்தனைகளை முன் வையுங்கள்.

எங்கே முன் வைக்கலாம் என்ற கேள்வி வரலாம்.யாரும் யாரையும் சார்ந்திருக்க வேண்டியதில்லை. யாரும் யாரையும் நம்ப வேண்டியதும் இல்லை.இன்று எல்லோரும் பிளாக் வைத்துக் கொள்ளலாம். அல்லது நம் நண்பர்கள் பிளாக் வைத்திருக்கிறார்கள். அந்த பிளாக்கில் பதிவு செய்யுங்கள். அதை தமிழ் மணத்தில் அளித்தால் தமிழ் மணம் உலகத்தின் முன் அதை வைக்கும்.

இன்று ஈழ உணர்வாளர்கள் உலாவுகிற இடமாக தமிழ்மணம் இருக்கிறது அதை நாம் நம் ஆக்கபூர்வமான யோசனைகளை பதிவு செய்ய பயன்படுத்திக் கொள்ள முடியும்.

தலைப்பு மட்டும் ஈழம்-என்ன செய்ய வேண்டும்? என்ற பொதுவான தலைப்பாக இருக்க வேண்டும். அதன் மூலமே தமிழ் மனத்தில் அந்த சிந்தனையை மற்றவர் தேடிப் படிக்க முடியும்.

முடிந்தால் ஒரு பொறியை அல்லது பல பொறிகளை ஒன்றிணைத்து ஒரு பெரும் நெருப்பை உண்டாக்குவோம்.
ஈழத்தில் நடக்கும் ஆநீதியை பொசுக்குவோம்.

யார் வேண்டுமானாலும் ஆலோசனை வழங்குவதில் கலந்து கொள்ளலாம்.

குறைந்த பட்ச நிபந்தனையாக ஒரு நிபந்தனை மட்டும் வைக்கலாம் என்று நினைக்கிறேன்.

ஈழத்தமிழர்கள் பெரும் அவலத்தில் இருக்கிறார்கள் என்ற ஒரு பொது உண்மையை மட்டும் அவர்கள் உணர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.

இதை ஒரு சுற்ற றிக்கையென கருதி தங்களுடைய நண்பர்கள் சிந்தனையாளர்கள் எல்லோருக்கும் அனுப்பி வையுங்கள்.

அவர்களிடம் தொடர்ந்து பேசி அவர்களுடைய சிந்தனைகளை பதிவு செய்ய வையுங்கள். ஒரு பெரும் உரையாடல் வெளியை உண்டாக்குவோம்.

இன்று ஈழம் உங்கள் கையில் என்ற தீவிரம் கொள்ளுங்கள். உங்கள் சிந்தனை ஈழமக்களை விடுவிக்கும் என்று நம்புங்கள்.

விடிவு பிறக்கும்.

ஈழம்-என்ன செய்ய வேண்டும்? சிந்திக்கத் துவங்கிவிட்டீர்களா நண்பர்களே!

ஈழத்தமிழர்களுக்காக வருந்துகிற, கண்ணீர், விடுகிற பதறுகிற, எதுவும் செய்யத் தயாராக இருக்கிற சில கோடி பேர்கள் உலகெங்கிலும் இருக்கவே செய்கிறார்கள்.

யாரோ ஒரு மனிதன் அல்லது ஒரு தேவ தூதன் இங்கே நின்று ஈழத்தமிழர்களை விடுவிக்கும் , அவர்களின் இன்னலைப் போக்கும் ஒரு ஆலோசனையைச் சொன்னால் இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நின்று அந்த ஆலோசனையை செயல் படுத்தி அந்த மக்களை உடனடியாக விடுவிக்க விருப்பமாகவே இருக்கிறார்கள்.

ஆனால் இப்போது பிரச்சனை யார் அந்த மனிதன் அல்லது தேவதூதன் என்பதும் எது அந்த ஆலோசனை என்பதும் தான்.

யார் அந்த மனிதன் என்பதற்கு நம்மிடம் பதில் இல்லை.

அப்படி ஒரு மனிதன் வெளிப்படுவதும் சமீபத்தில் சாத்தியமில்லை .

ஆனால் எது அந்த ஆலோசனை என்பதை யோசிப்பதற்கும் அதை சொல்வதற்கும் சாத்தியமற்றுப் போய் விட்டது என்று நான் நினைக்கவில்லை.

ஈழத்தமிழர்களுக்காக நடக்கிற பல கூட்டங்களுக்கும் நான் செல்கிறேன்.
அந்தக் கூட்டங்களில் எல்லாம் நான் பொதுவாக சந்திக்கிற கேள்வியும் இன்று எல்லோருக்கும் இருக்கிற கேள்வியும் ‘’ யார் என்ன செய்ய வேண்டும்?’’ என்பதாகவே இருக்கிறது.

இதில் முக்கியமான இன்னொரு விஷயம். அப்படிக் கூட்டங்களுக்கு வருகிற ஒவ்வொருவரும் ஆளுக்கு சில ஆலோசனைகளுடன் வருகிறார்கள் என்பதே.

அவர்களின் பலருடைய ஆலோசனைகள் பரவசப் படுத்துவதை நான் உணர்ந்திருக்கிறேன்.

இன்று ஈழ மக்களுக்காக வருந்துகிற எல்லோரிடமும் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான சில அல்லது பல பதில்கள் இருப்பதை நான் பார்க்கிறேன்.

இன்று இந்த சமயத்தில் நான் செய்ய விரும்புவது அப்படியான ஆலோசனைகளை எல்லாம் ஓரிடத்தில் ஒன்று சேர்ப்பதும் அதை ஈழ உணர்வாளர்கள் எல்லோரையும் பார்க்கும் படி வைப்பதும் தான்.

எந்த சிறு பொறி பெரு நெருப்பாகி ஈழத்தில் நடக்கிற அநீதியை அழிக்கும் என்பதை யாரும் யூகிக்க முடியாது.

அந்த சிறு பொறி யாரிடமிருந்து வரலாம்.
உங்களிடமிருந்தும் வரலாம்.

எனவே ஈழ உணர்வாளர்களே !

இன்று யார் என்ன செய்ய வேண்டும் ?

ஆட்டுத் தொட்டிக்குள் சிக்கிய ஆடுகளென மூன்று லட்சம் மக்கள் முள்வேளி முகாம்களுக்குள் இருக்கிறார்கள். அவர்கள் என்ன செய்ய வேண்டும்?

இலங்கையின் மற்ற பகுதிகளில் வாழ்கிற தமிழர்கள் என்ன செய்ய வேண்டும்?

ராஜபக்ஷேயின் குரூரம் புரிந்த , தமிழர்களின் நிலை குறித்து அக்கறை கொண்ட சிங்களர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் என்ன செய்ய வேண்டும்?

தற்சமயம் மௌனித்திருக்கும் விடுதலைப்புலிகள் என்ன செய்ய வேண்டும்?

தமிழ் கட்சி கூட்டமைப்பினர் என்ன செய்ய வேண்டும்?

இலங்கையின் எதிர்க்கட்சிகளும் தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட கட்சியினரும் என்ன செய்ய வேண்டும்?

தமிழகத்தில் இருக்கிற அரசியல் கட்சிகள் மற்றும் ஈழ உணர்வாளர்களின் செயல்பாடுகள் என்னவாக இருக்க வேண்டும்?

இந்தியாவின் இரண்டு பெறும் எதிர்க்கட்சிகளாக இருக்கிற இடதுசாரிகளும் பிஜேபி கட்சியனரும் என்ன செய்ய வேண்டும்?

உலகம் முழுவதும் இருக்கிற புலம்பெயர்ந்த தமிழர்கள் என்ன செய்ய வேண்டும்?

நாடுகடந்த அரசு என்ன செய்ய வேண்டும் அல்லது நாடு கடந்த அரசுக்கு நாம் என்ன செய்ய வேண்டும்?

இவர்கள் தான் ஈழத்தமிழர்களை காப்பாற்ற முடிந்த சக்திகள் என்பது என் எண்ணம். இவர்களைத் தாண்டியும் யாரேனும் இருக்கலாம். அல்லது இவர்களில் யாரேனும் இல்லாமலும் இருக்கலாம்.

இவர்கள் எல்லோருமே ஈழத்தமிழர்களுக்காக உண்மையில் கண்ணீர் சிந்துகிறவர்களாக இருக்கிறார்கள்.என்ன செய்வது என்பது குறித்து தெளிவான முடிவுக்கு வரமுடியாமல் ஆளுக்கு ஒன்றாக ஏதோ செய்து கொண்டிருக்கிறார்கள்.

எனவே உங்களுடைய சிந்தனைகளை முன் வையுங்கள்.

எங்கே முன் வைக்கலாம் என்ற கேள்வி வரலாம்.யாரும் யாரையும் சார்ந்திருக்க வேண்டியதில்லை. யாரும் யாரையும் நம்ப வேண்டியதும் இல்லை.இன்று எல்லோரும் பிளாக் வைத்துக் கொள்ளலாம். அல்லது நம் நண்பர்கள் பிளாக் வைத்திருக்கிறார்கள். அந்த பிளாக்கில் பதிவு செய்யுங்கள். அதை தமிழ் மணத்தில் அளித்தால் தமிழ் மணம் உலகத்தின் முன் அதை வைக்கும்.

இன்று ஈழ உணர்வாளர்கள் உலாவுகிற இடமாக தமிழ்மணம் இருக்கிறது அதை நாம் நம் ஆக்கபூர்வமான யோசனைகளை பதிவு செய்ய பயன்படுத்திக் கொள்ள முடியும்.

தலைப்பு மட்டும் ஈழம்-என்ன செய்ய வேண்டும்? என்ற பொதுவான தலைப்பாக இருக்க வேண்டும். அதன் மூலமே தமிழ் மனத்தில் அந்த சிந்தனையை மற்றவர் தேடிப் படிக்க முடியும்.

முடிந்தால் ஒரு பொறியை அல்லது பல பொறிகளை ஒன்றிணைத்து ஒரு பெரும் நெருப்பை உண்டாக்குவோம்.
ஈழத்தில் நடக்கும் ஆநீதியை பொசுக்குவோம்.

யார் வேண்டுமானாலும் ஆலோசனை வழங்குவதில் கலந்து கொள்ளலாம்.

குறைந்த பட்ச நிபந்தனையாக ஒரு நிபந்தனை மட்டும் வைக்கலாம் என்று நினைக்கிறேன்.

ஈழத்தமிழர்கள் பெரும் அவலத்தில் இருக்கிறார்கள் என்ற ஒரு பொது உண்மையை மட்டும் அவர்கள் உணர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.

இதை ஒரு சுற்ற றிக்கையென கருதி தங்களுடைய நண்பர்கள் சிந்தனையாளர்கள் எல்லோருக்கும் அனுப்பி வையுங்கள்.

அவர்களிடம் தொடர்ந்து பேசி அவர்களுடைய சிந்தனைகளை பதிவு செய்ய வையுங்கள். ஒரு பெரும் உரையாடல் வெளியை உண்டாக்குவோம்.

இன்று ஈழம் உங்கள் கையில் என்ற தீவிரம் கொள்ளுங்கள். உங்கள் சிந்தனை ஈழமக்களை விடுவிக்கும் என்று நம்புங்கள்.

விடிவு பிறக்கும்.

Sunday, September 20, 2009

ஈழம்-என்ன செய்ய வேண்டும்?

ஈழத்தமிழர்களுக்காக வருந்துகிற, கண்ணீர், விடுகிற பதறுகிற, எதுவும் செய்யத் தயாராக இருக்கிற சில கோடி பேர்கள் உலகெங்கிலும் இருக்கவே செய்கிறார்கள்.

யாரோ ஒரு மனிதன் அல்லது ஒரு தேவ தூதன் இங்கே நின்று ஈழத்தமிழர்களை விடுவிக்கும் , அவர்களின் இன்னலைப் போக்கும் ஒரு ஆலோசனையைச் சொன்னால் இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நின்று அந்த ஆலோசனையை செயல் படுத்தி அந்த மக்களை உடனடியாக விடுவிக்க விருப்பமாகவே இருக்கிறார்கள்.

ஆனால் இப்போது பிரச்சனை யார் அந்த மனிதன் அல்லது தேவதூதன் என்பதும் எது அந்த ஆலோசனை என்பதும் தான்.

யார் அந்த மனிதன் என்பதற்கு நம்மிடம் பதில் இல்லை.

அப்படி ஒரு மனிதன் வெளிப்படுவதும் சமீபத்தில் சாத்தியமில்லை .

ஆனால் எது அந்த ஆலோசனை என்பதை யோசிப்பதற்கும் அதை சொல்வதற்கும் சாத்தியமற்றுப் போய் விட்டது என்று நான் நினைக்கவில்லை.

ஈழத்தமிழர்களுக்காக நடக்கிற பல கூட்டங்களுக்கும் நான் செல்கிறேன்.
அந்தக் கூட்டங்களில் எல்லாம் நான் பொதுவாக சந்திக்கிற கேள்வியும் இன்று எல்லோருக்கும் இருக்கிற கேள்வியும் ‘’ யார் என்ன செய்ய வேண்டும்?’’ என்பதாகவே இருக்கிறது.

இதில் முக்கியமான இன்னொரு விஷயம். அப்படிக் கூட்டங்களுக்கு வருகிற ஒவ்வொருவரும் ஆளுக்கு சில ஆலோசனைகளுடன் வருகிறார்கள் என்பதே.

அவர்களின் பலருடைய ஆலோசனைகள் பரவசப் படுத்துவதை நான் உணர்ந்திருக்கிறேன்.

இன்று ஈழ மக்களுக்காக வருந்துகிற எல்லோரிடமும் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான சில அல்லது பல பதில்கள் இருப்பதை நான் பார்க்கிறேன்.

இன்று இந்த சமயத்தில் நான் செய்ய விரும்புவது அப்படியான ஆலோசனைகளை எல்லாம் ஓரிடத்தில் ஒன்று சேர்ப்பதும் அதை ஈழ உணர்வாளர்கள் எல்லோரையும் பார்க்கும் படி வைப்பதும் தான்.

எந்த சிறு பொறி பெரு நெருப்பாகி ஈழத்தில் நடக்கிற அநீதியை அழிக்கும் என்பதை யாரும் யூகிக்க முடியாது.

அந்த சிறு பொறி யாரிடமிருந்து வரலாம்.
உங்களிடமிருந்தும் வரலாம்.

எனவே ஈழ உணர்வாளர்களே !

இன்று யார் என்ன செய்ய வேண்டும் ?

ஆட்டுத் தொட்டிக்குள் சிக்கிய ஆடுகளென மூன்று லட்சம் மக்கள் முள்வேளி முகாம்களுக்குள் இருக்கிறார்கள். அவர்கள் என்ன செய்ய வேண்டும்?

இலங்கையின் மற்ற பகுதிகளில் வாழ்கிற தமிழர்கள் என்ன செய்ய வேண்டும்?

ராஜபக்ஷேயின் குரூரம் புரிந்த , தமிழர்களின் நிலை குறித்து அக்கறை கொண்ட சிங்களர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் என்ன செய்ய வேண்டும்?

தற்சமயம் மௌனித்திருக்கும் விடுதலைப்புலிகள் என்ன செய்ய வேண்டும்?

தமிழ் கட்சி கூட்டமைப்பினர் என்ன செய்ய வேண்டும்?

இலங்கையின் எதிர்க்கட்சிகளும் தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட கட்சியினரும் என்ன செய்ய வேண்டும்?

தமிழகத்தில் இருக்கிற அரசியல் கட்சிகள் மற்றும் ஈழ உணர்வாளர்களின் செயல்பாடுகள் என்னவாக இருக்க வேண்டும்?

இந்தியாவின் இரண்டு பெறும் எதிர்க்கட்சிகளாக இருக்கிற இடதுசாரிகளும் பிஜேபி கட்சியனரும் என்ன செய்ய வேண்டும்?

உலகம் முழுவதும் இருக்கிற புலம்பெயர்ந்த தமிழர்கள் என்ன செய்ய வேண்டும்?

நாடுகடந்த அரசு என்ன செய்ய வேண்டும் அல்லது நாடு கடந்த அரசுக்கு நாம் என்ன செய்ய வேண்டும்?

இவர்கள் தான் ஈழத்தமிழர்களை காப்பாற்ற முடிந்த சக்திகள் என்பது என் எண்ணம். இவர்களைத் தாண்டியும் யாரேனும் இருக்கலாம். அல்லது இவர்களில் யாரேனும் இல்லாமலும் இருக்கலாம்.

இவர்கள் எல்லோருமே ஈழத்தமிழர்களுக்காக உண்மையில் கண்ணீர் சிந்துகிறவர்களாக இருக்கிறார்கள்.என்ன செய்வது என்பது குறித்து தெளிவான முடிவுக்கு வரமுடியாமல் ஆளுக்கு ஒன்றாக ஏதோ செய்து கொண்டிருக்கிறார்கள்.

எனவே உங்களுடைய சிந்தனைகளை முன் வையுங்கள்.

எங்கே முன் வைக்கலாம் என்ற கேள்வி வரலாம்.யாரும் யாரையும் சார்ந்திருக்க வேண்டியதில்லை. யாரும் யாரையும் நம்ப வேண்டியதும் இல்லை.இன்று எல்லோரும் பிளாக் வைத்துக் கொள்ளலாம். அல்லது நம் நண்பர்கள் பிளாக் வைத்திருக்கிறார்கள். அந்த பிளாக்கில் பதிவு செய்யுங்கள். அதை தமிழ் மணத்தில் அளித்தால் தமிழ் மணம் உலகத்தின் முன் அதை வைக்கும்.

இன்று ஈழ உணர்வாளர்கள் உலாவுகிற இடமாக தமிழ்மணம் இருக்கிறது அதை நாம் நம் ஆக்கபூர்வமான யோசனைகளை பதிவு செய்ய பயன்படுத்திக் கொள்ள முடியும்.

தலைப்பு மட்டும் ஈழம்-என்ன செய்ய வேண்டும்? என்ற பொதுவான தலைப்பாக இருக்க வேண்டும். அதன் மூலமே தமிழ் மனத்தில் அந்த சிந்தனையை மற்றவர் தேடிப் படிக்க முடியும்.

முடிந்தால் ஒரு பொறியை அல்லது பல பொறிகளை ஒன்றிணைத்து ஒரு பெரும் நெருப்பை உண்டாக்குவோம்.
ஈழத்தில் நடக்கும் ஆநீதியை பொசுக்குவோம்.

யார் வேண்டுமானாலும் ஆலோசனை வழங்குவதில் கலந்து கொள்ளலாம்.

குறைந்த பட்ச நிபந்தனையாக ஒரு நிபந்தனை மட்டும் வைக்கலாம் என்று நினைக்கிறேன்.

ஈழத்தமிழர்கள் பெரும் அவலத்தில் இருக்கிறார்கள் என்ற ஒரு பொது உண்மையை மட்டும் அவர்கள் உணர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.

இதை ஒரு சுற்ற றிக்கையென கருதி தங்களுடைய நண்பர்கள் சிந்தனையாளர்கள் எல்லோருக்கும் அனுப்பி வையுங்கள்.

அவர்களிடம் தொடர்ந்து பேசி அவர்களுடைய சிந்தனைகளை பதிவு செய்ய வையுங்கள். ஒரு பெரும் உரையாடல் வெளியை உண்டாக்குவோம்.

இன்று ஈழம் உங்கள் கையில் என்ற தீவிரம் கொள்ளுங்கள். உங்கள் சிந்தனை ஈழமக்களை விடுவிக்கும் என்று நம்புங்கள்.

விடிவு பிறக்கும்.

(எழுத்தாளர்களே , சிந்தனையாளர்களே, இந்தப் பொது விவாத த்தைத் தவிர்க்கிற கோழைகளாக இருந்து விடாதீர்கள்)

உன்னைப் போல் ஒருவன் - ஏமாற்றமே!


இந்தப் படத்திற்குப் பின்னும் கமல் எனக்கு திரையுலகின் குருதான்.

இந்தப் படத்திற்குப் பின்னும் கமல் திரைக்கதை என்னும் கலை வடிவத்தின் வாத்தியார் தான்.

ஆனால் உன்னைப் போல் ஒருவன் ஒரு திரைப்படமாக கமல்ஜிக்கே தோல்வியடைந்த படமே.வர்த்த க ரீதியில் இந்தப் படம் வெற்றிப் பெற்றாலும் கூட.

தசாவரம் வரை அவர் அடைந்திருந்த கலைநுட்ப தேர்ச்சிகள் சிலவற்றை இந்தப் படத்தில் அவர் இழந்திருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது.

இவைகளுக்கெல்லாம் காரணமாக அந்தப் படத்தின் இயக்குனரும் இருக்க முடியும் என்றாலும் இது போன்ற படத்தில் கமல்தான் காரணமாகிறார்.

இந்தப் படத்தின் முதல் தோல்வி காஸ்டிங் எனப்படும் நடிகர்கள் தேர்வில் துவங்குகிறது.

மிக முக்கியமாக திரு கமல் அவர்கள் இந்தக் கதையின் முக்கியக் கதாபாத்திரமான அந்தப் பொது மனிதன் கதாபாத்திற்குப் பொருத்தமானவராக இல்லை. அவர் தனிப்பட்ட முறையில் செழுமையும் பணக்காரத்தன்மையும் கொண்டவர். ஆனால் இதற்கு முந்தைய படங்களில் எல்லாம் தான் மேற்கொள்ளும் கதாபாத்திரத்திற்கு ஏற்றார் போல் தன் தோற்றத்தை மாற்றிக் கொள்வார். இந்தப் படத்தில் அவர் அந்தக் காரியத்தையும் செய்யவில்லை. விளைவு ‘ என்னை நீங்கள் எல்லா இடங்களிலும் பார்த்திருப்பீர்கள் கமிஷனர் , ரேஷன் கடையில் புழுத்துப் போன அரிசியை வாங்குவதற்காக வரிசையில் கடைசியாக நிற்கும் பொது மனிதன் நான் என்று கமல்ஜி சொல்லும் போது அது பொருத்தமில்லாமல் இருக்கிறது. எனக்கென்னவோ சாருஹாசனைப் போன்ற ஒருவரே தமிழில் இந்தக் கதைக்குப் பொருததமானவர் என்று நினைக்கிறேன். கமல் மோகன்லால் செய்த கமிஷனர் கதாபாத்திரத்தை செய்திருக்கலாம்.

நஷ்ருதின் ஷா இடத்தில் கமலை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை என்று சிலர் எழுதுகிறார்கள். அது உண்மைதான். அதற்கு அர்த்தம் நஷ்ருதின் ஷா தான் பெரிய நடிகர் என்பதல்ல. நஷ்ருதின் ஷா அவரளவில் பெரிய நடிகர். கமல் அவரளவில் பெரிய நடிகர். எப்படி குணா படத்தில் நஷ்ருதின் ஷா நடித்திருந்தால் அது பொருத்தமில்லாமல் இருந்திருக்குமோ அது போலத்தான் இதுவும்.

இரண்டாவதாக கமல் அந்தக் கதாபாத்திரத்தின் மேல் ஏற்றி வைத்திருக்கும் அறிவு அளவுக்கதிகமான அறிவு. அது ஒரு பொதுமனிதனுக்கான அறிவு அல்ல. சர்வதேசம் , உலக ஒழுங்கு , அதற்குப்பின்னால் இயங்குகிற அரசியல் இவைகளையெல்லாம் அந்தக்கதாபாத்திரம் பேசுவது அவர் ஏதோ சென்னைப் பல்கலைக்கழகத்தின் அரசியல் துறையின் பேராசிரியர் என்ற எண்ணத்தை உண்டாக்குகிறது. அவர் பேசுகிற ஆங்கில உச்சரிப்பு அந்த இடத்தில் அந்தக் கதாபாத்திரத்தை காலி செய்து விட்டு கமலைக் கொண்டு வந்து உட்கார வைத்து விடுகிறது.

இரண்டாவது தவறான நபர் மோகன்லால்.

மோகன்லால் தலையில் பேட்ச் செய்த முடியுடன் நடித்திருக்கிறார். ஒரு வெறும் வர்த்தக சினிமாவிற்கு இதுபோல் பேட்ச் முடி , விக் போன்றவைகள் சரியாக இருக்கும். இது உள்ளே ஒரு நேர்மை இருக்க வேண்டிய திரைப்படும். மோகன்லாலின் பாட்ச்சும் அவருடைய மலயாள உச்சரிப்புடனான செயற்கையான தமிழ்பேச்சும் அந்தக் கதாபாத்திரத்தின் கம்பீரத்தை ஒழித்து விட்டது என்பேன்.

ராம்கோபால் வர்மாவின் கம்பெனியில் இதே போல் ஒரு கமிஷனராக வந்து நடிப்பின் உச்சத்தை த் தொட்டவர் மோகன்லால் என்பதை நான் மறக்கவில்லை.

இந்தப் படத்தில் அவரிடம் அப்படி ஒரு சிறப்பான நடிப்பைப் பெற இயக்குனர் தவறி விட்டார் என்பதே என் எண்ணம்.

இதில் லஷ்மி வேறு. அவர் ஒரு விக்கோடு கதையில் ஏன் வருகிறார் என்றே தெரியாமல் வருகிறார். ஒரு அறிவற்ற கதாபாத்திரமாக வருகிறார். நிஜத்தில் அவர்கள் இவ்வளவு அறிவற்றவர்கள் இல்லை. இது அபத்தமான கதாபாத்திர வடிவமைப்பு.

மிகவும் வருத்த த்தை உண்டாக்கிய தேர்வாக தீவிரவாதிளில் சந்தான பாரதியையும் , அந்த வீரப்பன் நடிகரையும் போட்டு இதை ஒரு காமெடிப்படமாக்கியதை சொல்ல வேண்டும்.

இவைகள் தவிர படத்தில் ஆங்காங்கே சிவாஜி , எம். எஸ் . பாஸ்கர் போன்ற வழக்கமான அவருடைய கம்பெனியின் காமெடி நடிகர்களை நடிக்க வைத்த தையும் தவறு என்றே சொல்ல வேண்டும்.

பிரதான கதாபாத்திரங்களைத் தவிர மற்றவர்களை புதியவர்களாக தேர்வு செய்திருந்தால் wednesday ‘யில் இருந்த நேர்மை தமிழுக்கு வந்திருக்கும்.

அந்த இரண்டு அதிகாரிகளான பரத் ரெட்டி, கணேஷ் வெங்கட்ராமன் சரியான தேர்வு.

இந்தப் படத்தின் அடுத்தப் பிறள்வு , மூலக் கதையில் அங்காங்கே சில மாற்றங்களைச் செய்ததில் ஏற்பட்டிருக்கிறது.

அதிலும் முக்கியமாக அந்த நான்கு தீவிரவாதிகளில் ஒருவன் தான் ஏன் தீவிரவாதியானேன் என்று விளக்கம் சொல்வான். குஜராத்தில் மதக்கலவரத்தில் தன் குடும்பத்தினரை ஒரு பேக்கரியில் வைத்து வேக வைத்து விட்டார்கள் என்பான். அப்படிப்பார்த்தால் அவன் ஒரு நல்லவனே..அவனைப் பழி வாங்க கமல் எதற்கு இத்தனை மெனக்கெட வேண்டும்.. ஒரு பிஜேபி காரன்தான் அவனை பழிவாங்க வேண்டும் என்று ஆசைப் படுவான். ஆனால் மூலக்கதையில் அதாவது வெட்னஸ்டேயில் , அவர்கள் நால்வரும் குரூரமான தீவிரவாதிகளாக இருப்பார்கள். அவர்களுக்கு யாருடைய மரணமும் கவலையில்லை. அவர்களை நஷ்ருதீன் ஷா வரவழைத்துக் கொள்ளும் போது நஷ்ருதின் ஷா ஒரு ஹீரோவாக்த தெரிவார். இதில் கமல் குழப்பமானவராகத் தெரிகிறார்.

இந்தக் படத்தின் முக்கியமான பிறள்வு கதையில் கமல் பேசும் அரசியல் வசனங்கள்.

கமல்ஜி அரசியலற்ற படம் எடுக்கும் போது மிக அழகாக நேர்த்தியாக ஜ்வலிக்கும் விதமாக எடுத்து விடுகிறார். ஆனால் அரசியல் சார்ந்த படம் எடுக்கும் பொழுது அதில் நிறைய குழப்பம் ஏற்பட்டு விடுகிறது.

இதற்கு முக்கியக் காரணம் கமல்ஜிக்கு போதிய தத்துவ வாசிப்பும் அதனடிப்படையில் சிந்திக்கும் பயிற்ச்சியும் இல்லாத தே.

கிராமத்தில் சில நல்ல பெரிய மனிதர்கள் இருப்பார்கள். யாராவது பெற்ற தாய் தந்தைக்கு சாப்பாடு போடாமல் துரத்தி விட்டால் அவனை கூப்பிட்டு அவனுக்கு அறிவுரை சொல்லி பெற்றோரை வைத்து காப்ப்பாற்றச் சொல்வார்கள்.

அதே நபர், அந்த ஊரில் ஒரு விதவைப் பெண் யாரோ ஒருவருடன் சின்ன தொடர்பில் இருப்பாள். அவளை பஞ்சாயத்திற்கு வரவைத்து அவளுடைய குடுமியை அறுத்து அவள் தலையில் சாணியை கரைத்து ஊற்றி செருப்பால் அடித்து ஊரை விட்டு வெளியேற்றுவார்..

அவர் நல்லவரா கெட்டவரா என்று நமக்கு குழப்பம் ஏற்படும்.

அதே விஷயம்தான் கமல்ஜி விஷயத்திலும் நடக்கிறது.

அவர் அரசியல் படங்களில் பேசும் சில வசனங்கள் இந்த நாட்டின் இடது சாரிகளும் , முற்போக்காளர்களும் , சிந்தனையாளர்களும் இவரல்லவோ நமது கலைஞர் என்று பெருமைப்படும்படி இருக்கும்..

அதே படங்களில் சில வசனங்கள் அதே முற்போக்காளர்களும் சிந்தனையாளர்களும் இடதுசாரிகளும் தலை குனிந்து நெளியும் அளவிற்கு இருக்கும். இந்தப் படத்தில் அப்படி நெளியும் வசனங்கள் நிறைய.

தீவிரவாத த்திற்கு தீவிரவாதம்தான் பதில் என்கிறார்.( அப்படிப் பார்த்தால் கமல் கதாபாத்திரத்தையும்¢ யாரேனும் வெடிகுண்டு வைத்து சிதறச்செய்யலாம்) இது அவருடைய முந்தைய படங்களில் அவர் சொல்லி வந்து செய்திகளிலிருந்தே முரண்பட்டது.

எனக்கு இடதுக்கும்¢ வலதுக்கும் பேதமில்லை என்கிறார்.

இந்த வசனத்தை அஜித்தோ விஜய்யோ சொன்னால் அவர்கள் கைகளைப் பற்றித்தான் பேசுகிறார்கள் என்று ஒருவர் புரிந்து கொள்ள முடியும் . ஆனால் கமல் பேசும்போது அவர் அரசியலைப் பற்றித்தான் பேசுகிறார் என்று தான் அர்த்தம். அரசியலில் ஒருவர் எனக்கு இடதிற்கும் வலதிற்கும் பேதமில்லை என்பது அவருடைய குதர்க்கமான மனநிலையையே காட்டும்.

மூன்றாவதாக தமிழர்கள் வடநாட்டில் நடக்கிற குண்டு வெடிப்புகளைப் பற்றி கவலையில்லாமல் கன்னியாகுமரியில் கால் ஊன்றி அமைதிப் பூங்காவாக நிற்கிறார்கள்.அந்த குண்டு வெடிப்பைப் பற்றி இங்கே தொலைக்காட்சிகள் காட்டுவதில்லை.. என்பது போல வருகிறது.

இந்த வசனம் இன்றைய அரசியல் சூழலில் மிகவும் விஷம் தோய்ந்த வசனம்.

ஈழம் பற்றி எரிகிறது.. அங்கே சொல்ல ஒண்ணாத் துயரம் நிரம்பி வழிகிறது.. அது குறித்து வடநாட்டில் பத்திரிக்கைகளில் தொலைக்காட்சிகளில் ஒரு செய்தி கூட வருவதில்லை என்று தமிழ் சிந்தனையாளர்கள் எல்லாம் கொதித்துக் கொண்டிருக்கிற சமயத்தில.. இங்கே சுடப்படும் மீனவர்களுக்காக கூட அங்கே ஒரு குரல் எழுவதில்லை என்று நாம் கவலைப்படும் சமயத்தில் அதை திசை திருப்பும் விதமாக கமல் இப்படி பேசுவது தமிழ் சமூகத்திற்கு அவர் செய்யும் துரோகம்.

இது போன்ற அபத்த வசனங்கள் எதுவும் மூலப்படமான வெட்னஸ்டேயில் இல்லை. தீவிரவாத த்தின் மீதான ஒரு சாமன்யனின் கோபம் மட்டுமே பதிவாகியிருக்கும். கமல் ஏன் அந்த மூலக்கதையில் விஷம் தோய்த்து எடுத்தார் என்பது புரியவில்லை.

இத்தனைக்கும் அவருடன் தொ.ம.பரமசிவம் போன்ற சில சிந்தனையாளர்களும் இருக்கிறார்கள்.அவர்கள் இந்தத் திரைக் கதையை வாசித்தார்களா கமலுக்கு எதுவும் சொன்னார்களா என்று தெரியவில்ல. ஏனென்றால் இங்கு பல எழுத்தாளர்கள் பிரபலங்களைப் பார்த்த உடன் அவர்களை வெறுமனே வியக்கிறவர்களாகவும் அவர்களுக்கு ஜால்ரா போடுகிறவர்களாகவும் மாறிவிடுகிறார்கள்.

வசனமும் பல இடங்களில் சவசவவென்றிருக்கிறது. ஒரு வரியாக இரண்டு வரியாக இருக்க வேண்டிய வசனங்கள் வளவளவென்றிருந்து படத்தின் க்ரிஸ்ப்பை காலி செய்கிறது.

இதற்காக நான் வசனகர்த்தா இரா.முருகனை குறை சொல்ல மாட்டேன். அவரைப் பாராட்டவும் மாட்டேன். தமிழில் இது போல் எழுத்தாளர்கள் வசனகர்த்தாக்களாக வரும்போது அவர்கள் என்னதான் செய்கிறவர்களாக இங்கே இருக்கிறார்கள் என்பதை நான் பார்த்திருக்கிறேன்..

மொத்த த்தில் உன்னைப்போல் ஒருவன் உருவாக்கத்தில், வசனத்தில் , நடிப்பில் , மூலப்படமான வெட்னஸ்டேயிடம் தோல்வி யடைந்த படம்.

Wednesday, September 16, 2009

உத்தப்புரம் எனும் நாடகம்

வீதி நாடகத்தில் புகழ் பெற்ற நடிகர்களைக் கொண்ட மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சமீபத்தில் தன் கட்சியில் இருக்கிற பிரமுகர்களை அமெச்சூர் நடிகர்களாகக் கொண்டு ஒரு அரசியல் நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறது.

நாடகத்தின் பெயர் உத்தப்புரம்.

அதில் சிறப்புப் பாத்திரத்தில் பிரகாஷ் காரட் , பிருந்தா காரட் எனும் பல பிறமாநில நடிகர்களும் நடிக்கிறார்கள்.

சிபிஎம்மின் தமிழ் மாநிலக்குழுவினரும் தமுஎச சவின் முக்கியத்தலைவர்களும் அந்த நாடகத்திற்கான ஒப்பனை ஒளி ஒலி அமைப்பு போன்றவற்றை கவனித்துக் கொள்கிறார்கள் ..
நாடகம் சிறப்புற பல காட்சிகளைத் தாண்டி ஒராண்டுக்கு மேல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் இந்தியாவில் நடைபெற்ற பல நாடகங்களை கண்டு மகிழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் இந்த நாடகத்தையும் மகிழ்ச்சியாகப் பார்க்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

ஆனால் எனக்குத்தான் ஆச்சர்யமாக இருக்கிறது.. இவர்களுக்கு ஏன் இந்த திடீர் நாடக ஆசை என்று..

ஒருவேளை எல்லா அரசியல் கட்சிகளும் நாடகங்கள் நடத்துகின்றன, பிரபலமாக இருக்கின்றன அதனால் நாமும் நடத்தலாம் பிரபலமாகலாம் என்று பொதுக்குழுவை கூட்டி யோசித்து முடிவு எடுத்து விட்டார்களா என்று தெரியவில்லை.

தீண்டாமை தமிழகத்தின் எல்லா கிராமங்களிலும்தான் இருக்கிறது.. மற்ற கிராமங்களை எல்லாம் விட்டு விட்டு ஏன் உத்தப்புரத்தை தேர்ந்தெடுத்தார்கள் என்று தெரியவில்லை.

அங்கே தான் இடிப்பதற்கு சுவர் இருக்கிறது என்பதாலா?. ஒருவேளை இடித்தால் பிரபலமாகலாம் என்ற பாடத்தை இவர்கள் பிஜேபி கட்சியிடம் இருந்து சமீபத்தில் கற்றுக் கொண்டிருக்கலாம்

இந்த சுவர் இன்று நேற்று அங்கு இருக்கவில்லை. கடந்த 20 ஆண்டுகளாக இருக்கிறது. தீண்டாமையும் கடந்த 2000 ஆண்டுகளாக இருக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சி கடந்த 75 ஆண்டுகளாக இந்தியாவில் இருக்கிறது.( சிலருக்கு அப்படியா என்று ஆச்சர்யமாக இருக்கலாம். ஆம் 75 ஆண்டுகளா இருக்கிறது.)அப்பொழுதெல்லாம் தூங்கிக் கொண்டிருந்த மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திடீரென்று ஏன் இப்படி வீறு கொண்டு எழுந்திருக்கிறது என்று ஆச்சர்யமாக இருக்கிறது.

யாரை ஏமாற்றுவதற்கு இந்த நாடகம் ? ஊரையா? உலகையா அல்லது தன் கட்சியில் இருக்கிற தலித்துகளையூம் தலித் சிந்தனை உள்ளவர்களையுமா?.

முன்பெல்லாம் தலித்களில் அரசியல் சிந்தனை கொண்டவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்வார்கள். தொல்.திருமாவளவனும் கிருஷ்ணசாமியும் அரசியல் சக்தியாக எழுந்த பின் அவர்கள் எல்லோரும் இவர்கள் இருவரின் பின்னால் திரள ஆரம்பித்தார்கள். இதனால் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு பின்னடைவு ஏற்பட்டது. அதைத் தடுப்பதற்கும் கட்சியில் இருக்கும் தலித்களை பாதுகாத்துக் கொள்வதற்கும் அவர்களுக்கு சில செயல்பாடுகள் தேவைப் பட்டது. அதற்காக இந்த நாடகத்தைத் தேர்ந்தெடுத்தார்களோ என்று யோசிக்கத் தோன்றுகிறது.

இதில் காமெடி என்னவென்றால் தமிழகத்தின் தன்னெழுச்சியான புரட்சியாளரான தந்தைப் பெரியார் இது போன்ற சமூக அநீதிகளுக்கு எதிராக கடுமையாகப் போராடினார். இயக்கம் நடத்தினார். அப்போதெல்லாம் அவரை புரிந்து கொள்ளக் கூட முடியாத படி அமெச்சூர் தத்துவவாதிகளாக இருந்தனர் இவர்களின் முன்னோர்களான பி(ராமனர்). ராம மூர்த்தி போன்றோர். ஆனால் இன்று வரிக்கு வரி தந்தை பெரியாரை மேற்கோள் காட்டி இது போன்ற இயக்கங்களை நடத்திக் கொண்டிருக்கின்றனர். ஆனால் ராம மூர்த்தியிடமிருந்து மேற்கோள் காட்டத்தான் இவர்களுக்கு எதுவுமில்லமல் போய்விட்டது.

தீண்டாமைக்கு எதிராக திராவிட இயக்கத்தவரைத் தவிர மற்றோர் போராடக்கூடாது என்றில்லை. அதை நாடகமாக இல்லாமல் ஆத்ம சுத்தியோடு செய்ய வேண்டும். வெறும் கட்சியை, அதில் இருக்கிற தலித் தோழர்களை காப்பாற்றிக் கொள்ளும் முயற்ச்சியாக இந்தப் போராட்டங்களை பயன்படுத்தக் கூடாது.

தலித் இயக்கங்கள் எல்லாம் பெரிய இயக்கங்களாக வளர்ந்த சமயத்தில் திருமாவளவன் தலித் இளைஞர்களின் தலைவராக சுடர்விடத் துவங்கிய சமயத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு நாள் அது குறித்து ஆராய்ச்சி செய்த து. அப்பொழுதுதான் அந்தக் கட்சிக்கு தன்னுடைய தவறு புரிந்த து. எழுபத்தைந்து ஆண்டுகாலம் தமிழகத்தில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் அந்தக் கட்சியின் மாநிலக்குழுவில் ஒருவர் கூட தலித் இல்லை. இன்றளவும் அதன் பொலிட்பீரோவில் ஒருவரும் தலித் இல்லை என்பது வேறு விஷயம்.
தமிழகத்தைப் பொறுத்தவரை சிபிஎம் கட்சி நாயக்கர்கள் மற்றும் முக்குலத்தோர் தலைவர்களாக வரும் விதமாக வடிவமைந்த கட்சி. நன்றாக கவனிக்கவும் வடிவமைக்கப்பட்ட கட்சி என்று நான் சொல்ல வில்லை. கட்சியின் பெரும்பாலான தலைவர்களைப் பாருங்கள் நாயக்கர்களாக அல்லது முக்குலத்தோர்களாக இருப்பார்கள். அல்லது இதர உயர்த்தப் பட்ட மேல் ஜாதிக்கார ர்களாக இருப்பார்கள். அப்படி தற்செயலாக நடந்து விட்ட வரலாற்றுத் தவறை சரிசெய்வதற்காக உடனடியாக கீழ் மட்டத்தில் இருந்த சில தலித் தோழர்களை வேக வேகமாக சில பதவிகளுக்கு கொண்டு வந்தார்கள். சில தலித் இஸ்யூக்களை கையில் எடுத்து போராடினால் தான் தலித் இளைஞர்களை ஈர்க்க முடியும் என்றும் முடிவு செய்தார்கள் . உத்தபுரம் போன்ற நாடகங்களை நடத்த ஆரம்பித்தார்கள்.

இவர்களின் இந்த தந்திரம்தான் வேதனை கொள்ளச் செய்கிறது.

அதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஜாதி உணர்வு உள்ள கட்சி என்று நான் சொல்ல வில்லை. தலித்களை கீழ் ஜாதிக்கார ர்களாக நடத்துகிற கட்சி என்று சொல்ல வில்லை. இன்று தமிழகத்தில் இருக்கிற மற்ற உயர்த்தப்பட்ட ஜாதிக்காரர்கள் நிறைந்த கட்சிகளோடு ஒப்பிட்டால் கம்யூனிஸ்ட் கட்சி தலித்களோடு ஜாதிய சிந்தனை இல்லாமலே பழகுகிறது என்று என்னால் உறுதி பட சொல்ல முடியும்.

ஆனால் தலித் இயக்கங்களின் மீது பகை உணர்வு கொண்ட கட்சியாகவே அது இருந்து வருகிறது. அது ஏன் என்று புரியவில்லை.

கம்யூனிஸ்ட் கட்சி தன் கட்சித் தோழர்களுக்கு தலித் இயக்கங்களின் குரல்வளையை அறுப்பதற்கான கத்தியை பரிமாறிக்கொண்டே இருக்கிறது என்பதை அந்தக் கட்சியின் தோழர்களோடு விவாதிக்கும் போது உணர முடிகிறது.


அவர்களுடனான உரையாடலில் இன்னொரு விஷயமும் புரிந்து கொள்ள முடிகிறது. உத்தப்புரம் உட்பட தீண்டாமைக்கு எதிரான அவர்களின் எல்லாப் போராட்டங்களும் தலித் இயக்கங்க ளெல்லாம் மோசடியான இயக்கங்கள் ; நாங்கள்தான் தலித்களுக்கான உண்மையான இயக்கங்கள் என்று பறைசாற்றிக் கொள்ளவே நடத்தப்படுகின்றனவே அன்றி தலித் மக்களின் மீதான அக்கறையால் நடத்தப்படுவன அல்ல.

இந்த இடத்தில்தான் சிபிஎம் அபாயம் நிறைந்த கட்சியாகிறது. இந்த இடத்தில் தான் உத்தப்புரம் நாடகமாகிறது.

ஒருவேளை தலித் இயக்கங்கள் கம்யூனிஸ்ட் கட்சிக்குப் பின்னால் தோன்றி , கம்யூனிஸ்ட் கட்சியைக் காட்டிலும் பிரபலமாக வளர்ந்தது அவர்களின் பொறாரைக்குக் காரணமாக இருக்கலாம் என்று இதை பொதுவாக நினைக்க முடியாது.

அவர்களுக்குப் பின்னால் தோன்றி பிரபலாமாக வளரும் மற்ற கட்சிகளின் மீது பொறாமையோ போட்டியோ அவர்களுக்கு ஏற்படுவதில்லை. வெட்கமில்லாமல் அவர்களோடு எல்லா சமரசங்களுக்கும் உட்படுகிறார்கள். இராப்பிச்சைக்காரர்கள் போல தோழர் ராமகிருஷ்ணனும் தோழர் வரதராஜனும் விஜயகாந்த் வீட்டின் முன் போய் நிற்கிற காட்சிகளெல்லாம் நடைபெறுகிறது.

ஆனால் தலித் இயக்கங்கள் வளர்வது மட்டும் அவர்களுக்கு ஆகாது. தொல்.திருமாவளவனை வெண்மணிக்குள் வரவிடாமல் தடுப்பார்கள். தலித் இயக்கங்களின் மீதும் அதன் தலைவர்கள் மீதும் பகை உணர்வை உண்டாக்கும் விதமாக தன் தோழர்களை மூளைச்சலவை செய்வார்கள். அவர்கள் கையில் தலித் இயக்கங்களின் குரல்வளையை அறுக்கும் கத்திகளை கொடுப்பார்கள்.

இந்த நாடகத்தில் கௌரவத் தோற்றத்தில் நடிப்பதற்கு பிரகாஷ்காரட்டை வேறு அழைத்து வந்தார்கள். அது ஏன் என்று புரியவில்லை. தமிழகத்தில் அவருக்கு அரசியல் அந்தஸ்த்து உண்டாக்க வேண்டும் என்று நினைத்தார்களா? கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக இருக்கிறார்; ஆனால் யாருக்கும் அவரைத் தெரியவில்லை, இந்த நாடகத்தில் முன்னனிப் பாத்திரத்தில் நடிக்க வைத்தால் தமிழ்நாட்டு மக்களுக்கு அவர் பெயர் போயச் சேரும் என்று யோசித்தார்களோ என்னவோ?

அவரும் ஏதோ இந்தியாவிலேயே உத்தப்புரத்தில்தான் தீண்டாமை இருக்கிறது என்பது போல வேகவேகமாக வந்தார்.ஆனால் பாவம் பயிற்சி போதவில்லை. ஏமாந்து போய் விட்டார்.

கலைஞர் அவரைக் காமடிப் பாத்திரமாக்கி விட்டார்.

கலைஞர் எவ்வளவு நாடகங்களை நடத்தியவர். அவருக்குப் புரியாதா இந்த நாடகத்தின் தாத்பர்யம்? உடனடியாக எதிர்பாராத விதமாக அந்த நாடகத்திற்குள் நுழைந்து உத்தபுரத்தில் கட்டப் பட்டிருந்த சுவரை இடித்து விட்டார். பாவம் பிரகாஷ்காரட் அங்கு போய் தேமே என்று நின்றார்.

பாஞ்சாலி சபதம் நாடகத்தில் துச்சாதனன் பாஞ்சாலியை துயில் உறியப் போகும் சமயத்தில் கிருஷ்ண நடிகர் மேலேயிருந்து சேலையை இறக்குவதற்கு தயாராகும் முன் பார்வையாளர் வரிசையில் இருந்த ஒரு நபர் மேடை ஏறி பாஞ்சாலிக்கு சேலை கொடுத்து தன்னுடன் கூட்டிச்சென்றது போல் ஆகி விட்டது.

கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் , பாராளுமன்ற உறுப்பினர், அவருக்கும் அவருடைய கட்சிக்கும் தலித்களின் நிலை குறித்து அக்கறை இருக்குமானால் பாராளுமன்றத்தில் பேச வேண்டியது தானே. டெல்லியில் ஒரு போராட்டம் நடத்த வேண்டியது தானே.

அதை செய்ய அவர்களின் பொலிட்பீரோ அனுமதிக்காது . பொலிட்பீரோ வடிவமைக்கப் பட்டிருக்கும் விதம் அப்படி.

கம்யூனிஸ்ட் கட்சி தோன்றிய காலத்திலிருந்து இந்த ஆண்டு வரை அது அரசியலில் மிகவும் பிரகாசமாகவும் சக்தியுள்ளதாகவும் இருந்த கால கட்டம் என்று சென்ற 5 ஆண்டுகளைச் சொல்ல லாம். அறுபத்தி ஐந்து எம்பிக்களைக் கொண்டு மத்திய அரசாங்கத்தில் எந்தக் காரியத்தையும் சாதிக்க முடியும் என்றிருந்த கால கட்டம்.அந்தக் கட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியால் ஒரு பொது வேலைத் திட்டம் வைக்கப் படுகிறது. அந்த பொது வேலைத்திட்டத்தில் அறுபது எழுபது வேலைத் திட்டங்கள் வைக்கப் படுகின்றன. அதில் ஒன்று கூட தலித்கள் பற்றியது இல்லை. அது தான் சிபிஎம். அதுதான் பொலிட்பீரோ வடிவமைக்கப் பட்டிருக்கும் விதம்.

இந்த இடத்தில் தான் தலித் இயக்கங்களின் தேவை இருக்கிறது .
இந்தியாவில் தலித் இயக்கங்கள் அப்படி சக்தியாக வளர்ந்து பாராளுமன்றத்தை தீர்மானிக்கிறவர்களாக இருந்தால் அன்று ஒரு தலித் கூட அடிமையாய் இருக்க வேண்டிய அவசியமில்லாத வேலைத் திட்டத்தை அவர்கள் முன் வைப்பார்கள். அவர்களுக்கு ஒரே கோரிக்கை வைக்கிற வாய்ப்பு மட்டுமே கொடுக்கப் பட்டாலும் அது தலித் மக்கள் பற்றிய கோரிகைகையாகத் தான் இருக்கும்.

தலித்களுக்காக செயல் பட வேண்டிய இடங்களிலெல்லாம் கபடத்துடன் நடந்து கொண்ட கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் திடீர் என்று தலித் மக்களின் மீது அக்கறை கொண்ட நபராக வந்த போதுதான் அவர் நடிகராகிறார், உத்தப்புரம் நாடகம் ஆகிறது.

அவருடைய கவர்ச்சி போதவில்லை என்பதாலோ என்னவோ தெரியவில்லை. தற்போது பிருந்தா காரட் அங்கு வந்து அந்த தொடர் நாடகத்தின் மற்றொரு காட்சியை சிறப்பித்து விட்டுப் போயிருக்கிறார்.

உத்தப்புரத்தில் தீண்டாமை கொடுமைக்கு எதிராக இவ்வளவு தீவிரமாகப் போராடும் சிபிஎம், முக்குலத்தோர் நிறைந்திருக்கும் பகுதிகளில் இந்தப் போராட்டத்தை நடத்த வேண்டியது தானே. ஏன் வன்மம் குறைந்த மக்களான பிள்ளைமார் மக்கள் நிறைந்த ஒரு பகுதியை தேர்ந்தெடுக்க வேண்டும்.

அப்படி ஒரு முடிவை சிபிஎம் எடுத்தால் அவ்வளவுதான் கட்சியில் இருக்கிற முக்குலத்தோர்களே சொல்லி விடுவார்கள்; இந்த ஜோலியெல்லாம் எங்களிடம் வைத்துக் கொள்ளாதீர்கள் என்று.

இந்த இடத்தில்தான் வரலாற்றில் தொல்.திருமாவளவனின் இடம் இருக்கிறது. இன்று தமிழகத்தில் சேரிகள் என்று எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் ஒரு கொடி பறக்கிறது. ஒரு அம்பேத்கர் சிலை இருக்கிறது. அங்கு ஒரு தலைவர் செயலாளர் இருக்கிறார். திருமாவளவன் காலடியே வைத்திராத சேரிகளில் கூட அவரின் கட்சிக் கொடி இருக்கிறது. அங்கே ஆதிக்க ஜாதியினர் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிரான போராட்டம் நடக்கிறது. தமிழகத்தில் திருமாவளவனின் எழுச்சிக்குப் பின்னால் இருக்கிற விஞ்ஞானமும் மெய்ஞானமும் கம்யூனிஸ்ட்கள் ஒருகாலும் புரிந்து கொள்ள முடியாத ஒன்று.

இதோ நமக்கு அருகே இருக்கிற ஈழத்தில் மூன்று லட்சம் தமிழர்கள் திறந்த வெளி கொட்டடியில் வைக்கப் பட்டிருக்கிறார்கள். இதுவரையிலான உலகம் சந்தித்திராத இன அழிப்பு அங்கே நடந்து கொண்டிருக்கிறது. அது பற்றி தொடர்ந்து குரூரமான கள்ள மௌனம் சாதிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மனிதாபிமானம் நிறைந்த பாவனையோடு உத்தப்புரத்திற்கு வருவது வேடிக்கையாக இருக்கிறது.

அன்பார்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்களே. உத்தபுரத்தை மட்டுமல்ல , தமிழகத்தில் தலித் மக்களின் விடுதலையைப் பார்த்துக் கொள்ள தலித் இயக்கங்கள் இருக்கின்றன. நீங்கள் உங்கள் மேக் அப்களை களைத்து விட்டு உத்தபுரத்தை விட்டு வெளியேறுங்கள். உங்களுக்கு நேர்மை இருந்தால் தலித் சமூகத்தினர் இருக்க வேண்டிய இடம் தலித் இயக்கங்களே என்பதை உங்கள் இயக்க்த்தினருக்கு எடுத்துச் சொல்லுங்கள்.