Monday, May 31, 2010

இலங்கைத்தமிழர் பிரச்சினைக்கு 15 நிமிடத்தில் தீர்வு; பிரகாஷ் காரட்டின் சாகசம்

கடந்த நான்கு ஐந்து தினங்களாக சென்னை அரசியல் ஆர்வலர்களிடையே பெரும் பரபரப்பு நிலவிக் கொண்டிருந்தது.எஸ் எம் எஸ்களும் இமெயில்களும் பறந்த வண்ணம் இருந்தன.
சிபிஎம்மின் தமிழ் மாநிலக்குழு ‘ இலங்கைத்தமிழர் பிரச்சினைக்கு தீர்வு’ என்ற தலைப்பில் ஒரு கருந்தரங்கம் நடத்த இருப்பதாக அறிவித்தது தான் இந்த பரப்பிற்கு காரணம். அதிலும் அவர்களுடைய பொதுச்செயலாளர் பிரகாஷ்காரட்டே நேரடியாக வந்து அந்தத் தீர்வை உரையாக வழங்கப் போகிறார் என்ற தகவலும் பரபரப்பிற்கு கூடுதல் காரணம்.

என்னையும் இந்த பரபரப்பு தொற்றிக் கொண்டது.

ஏனென்றால் இதுவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை ஈழத்தமிழர் பிரச்சினை சம்பந்தமாக எதையும் தெளிவாக பதிவு செயததில்லை. ஆங்காங்கே கிடைக்கிற பதிவுகள் எல்லாம் மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியதர வர்க்க தொழிற்சங்கத் தலைவர்கள் கட்சித் தலைமையின் விருப்பத்திற்கேற்ப தான்தோன்றிகளாக தனக்குத் தோன்றும் எல்லாவற்றையும் பதிவு செய்ததுதான். அவர்களில் பலர் சிங்கள அரசு உலகின் புனிதமான அரசுகளில் ஒன்று , இந்த விடுதலைப் புலிகள்தான் அங்கிருக்கிற அனைத்துப் பிரச்சினைகளுக்கும் காரணம் என்ற ரீதியிலேயே தங்களுடைய பதிவுகளை செய்திருக்கிறார்கள்.

அவர்களை குறை சொல்லி ஒன்றும் பயனில்லை. அவர்கள் அப்படியே வளர்ந்து விட்டார்கள்.

கட்சி ஒரு முடிவை தீர்க்கமாக சொல்லி விட்டால் அதையே கிளிப்பிள்ளைப் போல சொல்லிக் கொண்டிருப்பார்கள். கட்சி எதையும் திட்டவட்டமாக சொல்லாத கால கட்டத்தில் கட்சியின் உள் மனதை புரிந்து கொண்டு ஆளுக்கொன்றாக கத்திக் கொண்டிருப்பார்கள். ஈழப் பிரச்சினையிலும் அவர்கள் அவ்வாறுதான் ஒரு கையறு நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். பாவம் சிங்கள அரசை ஒரு இனவாத அரசு என்றாவது சொல்லலாமா என்பது கூட அவர்களுக்குத் தெரியவில்லை. விடுதலைப் புலிகளை எதிர்க்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் ராஜபக்ஷேவை இயேசு கிறிஸ்த்து என்று சொல்லும் இடம் வரை சென்றார்கள். இரயாகரனையும் ஷோபாசக்தியையும் மார்க்ஸ் ஏங்கெல்ஸ் இடத்தில் வைத்துப் பார்த்தார்கள்.
முதன்முறையாக மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமை ஒரு விஷயத்தை பதிவு செய்கிறது. அது என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலில் நானும் எனது நண்பர்களும் சென்றிருந்தோம்.

மிகவும் கசப்பான அனுபவமாக இருந்தது அந்தக் கூட்டம். தமிழர்கள் மீதான துரோக அரசியலை அவர்கள் ஒரு போதும் மாற்றிக் கொள்ள மாட்டார்கள் என்ற முடிவிற்கே நாங்கள் மறுபடியும் வர நேர்ந்தது.

முதலில் டி.கே.ரங்கராஜன் பேசினார். அவர் ஏன் இந்த சமயத்தில்இந்தக் கூட்டம் நடத்தப் படுகிறது என்பதற்கு சொன்ன காரணம் ஆச்சர்யமாக இருந்தது. போர் முடிந்து ஒரு வருடம் ஆகி விட்டது. போர் முடிந்தப் பின் ராஜபக்ஷே செய்வதாக சொன்ன வாக்குறுதிகள் எதையும் இந்த ஒரு வருட காலத்தில் நிறைவேற்ற வில்லை. அதனால் தான் அது குறித்து என்ன செய்யலாம் என்று கலந்து பேசி இங்கே வந்திருக்கிறோம் என்றார். அவர் பேச்சையே இப்படித்தான் துவங்கினார்.

அவருக்கு அங்கே நடந்த போர் ஒரு விஷயமாக இல்லை. அந்தப் போரில் லட்சம் பேர் வரை கொல்லப்பட்டது அவருக்கு விஷயமாக இல்லை. அவர்கள் மீது தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள் எல்லாம் பயன்படுத்தப் பட்டது அவருக்கு விஷயமாக இல்லை. ராஜபக்ஷே புரிந்த போர்க்குற்றங்கள் விஷயமாக இல்லை. நிகழ்ந்த கற்பழிப்புகள், கருகிய குழந்தைகள், இடிந்த வீடுகள், எரிந்த வாழ்வுகள் என்று எதுவும் விஷயமாக இல்லை.

அங்கு நடந்த போர் சரியான போரே. போர் என்றால் அப்படித்தான் இருக்கும் அதை நாம் குறை சொல்ல முடியாது. அதிலெல்லாம் எங்களுக்கும் ராஜபக்ஷேக்கும் ஒரு கருத்து வேறுபாடும் இல்லை. ஆனால் போர் முடிந்தப் பின் அவர் தமிழ் மக்களுக்கு செய்வதாக சொன்ன வாக்குறுதிகள் எதையும் அவர் பின்பற்ற வில்லை. அந்த ஒரு விஷயத்தில் தான் எங்களுக்கும் அவருக்கும் சிறு மன வேறுபாடு ஏறபட்டிருக்கிறது என்பதாக இருந்தது அந்தத் தொனி.

பேச்சின் இடையே மிகவும் சாமர்த்தியமாக கவனமாக விஷமாக டி.கே ரங்கராஜன் ஒரு வாக்கியத்தைச் சொன்னார். ‘ எனக்குக் கிடைத்த தகவலின் படி பத்தாயிரம் பொதுமக்கள் போரின் போது கொல்லப் பட்டிருக்கிறார்கள் ‘ என்றார். இந்த பத்தாயிரம் என்ற எண்ணிக்கை ராஜபக்க்ஷே, பொன்சேகா சொல்லும் எண்ணிக்கையைக் காட்டிலும் குறைவான எண்ணிக்கை.

உலகெங்கும் ஈழ ஆதரவாளர்கள் போரில் 1 லட்சம் பேர் இறந்து போனதாக ஆதாரங்கள் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். கவிஞர் மனுஷ்யபுத்திரன் அந்த எண்ணிக்கையைப் பற்றி எழுதும் போது, ‘’இன்றுவரை முள்ளிவாய்க்கால் படுகொலை தினங்களில் அழிக்கப்பட்டவருக்குக் குறைந்த பட்ச நியாயம் கூட வழங்கப்படவில்லை என்பது மட்டுமல்ல, அவர்களுக்கு ஒரு சரியான எண்ணிக்கை கூட இல்லை. அவர்கள் இந்த உலகத்தின் கண்களிலிருந்து முழுமையாக மறைக்கப்பட்டு விட்டார்கள். அவர்களது சடலங்கள் எங்கே இருக்கின்றன என்று யாருக்கும் தெரியாது. இன்றும் ஹிட்லரின் மரண முகாம்களைப் பற்றி நாம் நெஞ்சுருகப் படிக்கிறோம். ஆனால் நம் கண்ணெதிரே இந்த யுத்தத்துடன் தொடர்பில்லாத பல்லாயிரக்கணக்கான மக்கள் மிகக் கொடூரமாக, எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்க அழிக்கப்பட்டதைப் பற்றி யாருக்கும் எந்த மன அதிர்ச்சியும் இல்லை. மாறாக, பட்டப்பகலில் இவ்வளவு வெளிச்சத்தில் இந்தக் கொலைகளை நிகழ்த்தியவர்கள், அவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்கள் எந்தக் கேள்விக்கும் பதில் சொல்ல அவசியம் இல்லாதவர்களாக அமர்ந்திருக்கிறார்கள். அவர்களது அரியணைகள் மேலும் பொலிவு பெற்றுள்ளன.’’ என்று எழுதுகிறார்.

தமிழர் எதிரிகளில் கடைந்தெடுத்த எதிரிகளான ராஜபக்ஷேவும் பொன்சேகாவும் எண்ணிக்கையை சொல்லாமல் குறைந்த உயிர்களைப் பலி கொண்டு இந்த போரில் வென்றோம் என்கிறார்கள். டிகே ரங்கராஜன் போரில் நடுவில் நின்று பிணங்களை எண்ணியவர் போல பத்தாயிரம் என்று ஒரு எண்ணிக்கை சொல்கிறார்.

ஈழ ஆதரவாளர்கள் இறந்தவர்களின் எண்ணிக்கையை கூட்டிச் சொல்லலாம். நீங்கள் விரும்பிய படி நாங்கள் சொல்ல முடியுமா என்று ச.தமிழ்செல்வன் போன்றவர்கள் அடிக்கடி கேட்கிறார்கள்.

ஈழ ஆதரவாளர்கள் இந்த எண்ணிக்கையை கூடுதலாகச் சொல்லாம். உலக கவனத்தை ஈழத்தின் பால் ஈர்ப்பதற்காக. ராஜபக்ஷே மற்றும் அவரின் ஆதரவாளர்கள் இந்த எண்ணிக்கையை குறைத்துத்தான் சொல்வார்கள்.போர்க்குற்றங்களிலிருந்து தப்பிப்பதற்காக.
ஆனால் நடுநிலையாளர்களும் மனிதாபிமானிகளும் கவிஞர் மனுஷ்யபுத்திரன் சொன்ன வாக்கியத்தைத்தான் சொல்வார்கள். ’இன்றுவரை முள்ளிவாய்க்கால் படுகொலை தினங்களில் அழிக்கப்பட்டவருக்குக் குறைந்த பட்ச நியாயம் கூட வழங்கப்படவில்லை என்பது மட்டுமல்ல, அவர்களுக்கு ஒரு சரியான எண்ணிக்கை கூட இல்லை. அவர்கள் இந்த உலகத்தின் கண்களிலிருந்து முழுமையாக மறைக்கப்பட்டு விட்டார்கள். அவர்களது சடலங்கள் எங்கே இருக்கின்றன என்று யாருக்கும் தெரியாது.’

டிகே ரங்கராஜனைப் போல சிங்கள இனவாத அரசின் மனம் குளிரும்படியான பத்தாயிரம் என்ற எண்ணிக்கையை சொல்ல மாட்டார்கள்.

உலகந்தழுவிய மனித நேயம் பேசுகிற இவர்களுக்கு ஈழ விஷயம் குறித்து மட்டும் இப்படி விஷப்பிரச்சாரம் செய்யும்படி எங்கிருந்து யாரால் நஞ்சூட்டப்படுகிறது என்பதுதான் புரியாத மர்மமாக இருக்கிறது.

கடைசியாக பிரகாஷ் காரட் பேச வந்தார். அவர் இலங்கைத்தமிழர் பிரச்சினைக்கு என்ன தீர்வு சொல்லப் போகிறார் என்று எல்லோரும் பதைபதைப்பில் இருந்தார்கள்.
அவருக்கும் அங்க நடந்த போர் பற்றி கவலை இல்லை. போர்க்குற்றங்கள் பற்றி கவலை இல்லை. இடிந்த வீடுகள், கருகிய குழந்தைகள், எரிந்த வாழ்வுகள் என்று எது பற்றியும் கவலை இல்லை. அவைகள் எல்லாம் நடக்க வேண்டியவையே என்பது போலவே பேச்சைத் துவங்கினார்

அரசியல் தீர்வு தான் சரியான தீர்வு, ஆயுதந் தாங்கிய போராட்டம் அல்ல என்றார். மணி முத்தான வாசகம் அது. இரண்டாவதாக முகாம்களில் அடைக்கப் பட்டிருக்கிற தமிழர்களை அவர்களின் சொந்த வாழ்விடங்களுக்கு அனுப்ப வேண்டும் என்றார். வெறுமனே அனுப்பக் கூடாது அவர்களுக்கு மறுவாழ்விற்கான வழிவகைகளச் செய்து அனுப்ப வேண்டும் என்றார். மூன்றாவதாக இரண்டு இனங்களிலும் இருக்கிற ஜனநாயக சக்திகள் பேசி தீர்வு காண வேண்டும் என்றார்.

இதை பேசுவதற்கு அவர் எடுத்துக் கொண்ட நேரம் சரியாக பதினைந்து நிமிடம்.அது சரி அறுபது ஆண்டுகள் நடைபெற்று வருகிற இனப்படுகொலை வரலாற்றை அறுபது ஆண்டுகளா பேச முடியும்?

இவர் சொல்லி விட்டார். பிறகென்ன உலகம் அவர் சொல்படி நடக்கப் போகிறது. தன்கடமை முடிந்து விட்டதாக காரில் ஏறி சென்று விட்டார்.

இனிமேல் சிபிஎம் கட்சி ஈழப்பிரச்சினை குறித்து என்னென்ன செய்ய வேண்டும் என்று அறிவிப்பார் என்று எதிர்பார்த்தேன். எதுவும் செய்ய வேண்டாம் வழக்கம் போல் அமைதியாக இருங்கள். நாம் கடந்த காலத்தில் அமைதியாக இருக்க வேண்டும் என்று எடுத்த முடிவுதான் இப்பொழுதும் சரியான முடிவாக இருக்கிறது. எனவே தொடரந்து அந்தப் பணியை செய்யுங்கள் என்று சொல்லாமல் சொல்லி விட்டு சென்று விட்டார்.

இது போல உலகில் நடக்கிற எல்லா பிரச்சினைகள் குறித்தும் தீர்வுகளை சொல்லி விட்டு வீட்டிலிருக்க வேண்டியது தானே எதற்கு தினசரி கட்சி அலுவலகத்திற்கு வந்து உண்டக் கட்டி தின்று கொண்டிருக்கிறார்கள் என்று என் மனதில் கேள்வி எழுந்தது.

யாரை ஏமாற்ற இந்த நாடகம். எதற்காக அவசர அவசரமாக இந்த நாடகத்தின் அரங்கேற்றம். எதற்காக இந்த நாடகத்திற்கு ‘ இலங்கைத் தமிழர்கள் பிரச்சினைக்குத் தீர்வு ‘ என்றொரு பொய்த்தலைப்பு என்று எதுவும் புரியவில்லை.

நாங்கள் இதுவரை எதுவும் செய்யாமல் இருந்ததுதான் இப்பொழுதும் சரியான காரியமாக இருக்கிறது என்று மார்தட்டிக்கொள்வதற்காகவே நடத்தப்பட்டக் கூட்டமாக இருந்தது.

Saturday, May 29, 2010

இலங்கைத்தமிழர் பிரச்சினைக்கு 15 நிமிடத்தில் தீர்வு;மோடிமஸ்தான் பிரகாஷ் காரட்டின் சாகசம்

கடந்த நான்கு ஐந்து தினங்களாக சென்னை அரசியல் ஆர்வலர்களிடையே பெரும் பரபரப்பு நிலவிக் கொண்டிருந்தது.எஸ் எம் எஸ்களும் இமெயில்களும் பறந்த வண்ணம் இருந்தன.
சிபிஎம்மின் தமிழ் மாநிலக்குழு ‘ இலங்கைத்தமிழர் பிரச்சினைக்கு தீர்வு’ என்ற தலைப்பில் ஒரு கருந்தரங்கம் நடத்த இருப்பதாக அறிவித்தது தான் இந்த பரப்பிற்கு காரணம். அதிலும் அவர்களுடைய பொதுச்செயலாளர் பிரகாஷ்காரட்டே நேரடியாக வந்து அந்தத் தீர்வை உரையாக வழங்கப் போகிறார் என்ற தகவலும் பரபரப்பிற்கு கூடுதல் காரணம்.

என்னையும் இந்த பரபரப்பு தொற்றிக் கொண்டது.

ஏனென்றால் இதுவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை ஈழத்தமிழர் பிரச்சினை சம்பந்தமாக எதையும் தெளிவாக பதிவு செயததில்லை. ஆங்காங்கே கிடைக்கிற பதிவுகள் எல்லாம் மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியதர வர்க்க தொழிற்சங்கத் தலைவர்கள் கட்சித் தலைமையின் விருப்பத்திற்கேற்ப தான்தோன்றிகளாக தனக்குத் தோன்றும் எல்லாவற்றையும் பதிவு செய்ததுதான். அவர்களில் பலர் சிங்கள அரசு உலகின் புனிதமான அரசுகளில் ஒன்று , இந்த விடுதலைப் புலிகள்தான் அங்கிருக்கிற அனைத்துப் பிரச்சினைகளுக்கும் காரணம் என்ற ரீதியிலேயே தங்களுடைய பதிவுகளை செய்திருக்கிறார்கள்.

அவர்களை குறை சொல்லி ஒன்றும் பயனில்லை. அவர்கள் அப்படியே வளர்ந்து விட்டார்கள்.

கட்சி ஒரு முடிவை தீர்க்கமாக சொல்லி விட்டால் அதையே கிளிப்பிள்ளைப் போல சொல்லிக் கொண்டிருப்பார்கள். கட்சி எதையும் திட்டவட்டமாக சொல்லாத கால கட்டத்தில் கட்சியின் உள் மனதை புரிந்து கொண்டு ஆளுக்கொன்றாக கத்திக் கொண்டிருப்பார்கள். ஈழப் பிரச்சினையிலும் அவர்கள் அவ்வாறுதான் ஒரு கையறு நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். பாவம் சிங்கள அரசை ஒரு இனவாத அரசு என்றாவது சொல்லலாமா என்பது கூட அவர்களுக்குத் தெரியவில்லை. விடுதலைப் புலிகளை எதிர்க்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் ராஜபக்ஷேவை இயேசு கிறிஸ்த்து என்று சொல்லும் இடம் வரை சென்றார்கள். இரயாகரனையும் ஷோபாசக்தியையும் மார்க்ஸ் ஏங்கெல்ஸ் இடத்தில் வைத்துப் பார்த்தார்கள்.
முதன்முறையாக மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமை ஒரு விஷயத்தை பதிவு செய்கிறது. அது என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலில் நானும் எனது நண்பர்களும் சென்றிருந்தோம்.

மிகவும் கசப்பான அனுபவமாக இருந்தது அந்தக் கூட்டம். தமிழர்கள் மீதான துரோக அரசியலை அவர்கள் ஒரு போதும் மாற்றிக் கொள்ள மாட்டார்கள் என்ற முடிவிற்கே நாங்கள் மறுபடியும் வர நேர்ந்தது.

முதலில் டி.கே.ரங்கராஜன் பேசினார். அவர் ஏன் இந்த சமயத்தில்இந்தக் கூட்டம் நடத்தப் படுகிறது என்பதற்கு சொன்ன காரணம் ஆச்சர்யமாக இருந்தது. போர் முடிந்து ஒரு வருடம் ஆகி விட்டது. போர் முடிந்தப் பின் ராஜபக்ஷே செய்வதாக சொன்ன வாக்குறுதிகள் எதையும் இந்த ஒரு வருட காலத்தில் நிறைவேற்ற வில்லை. அதனால் தான் அது குறித்து என்ன செய்யலாம் என்று கலந்து பேசி இங்கே வந்திருக்கிறோம் என்றார். அவர் பேச்சையே இப்படித்தான் துவங்கினார்.

அவருக்கு அங்கே நடந்த போர் ஒரு விஷயமாக இல்லை. அந்தப் போரில் லட்சம் பேர் வரை கொல்லப்பட்டது அவருக்கு விஷயமாக இல்லை. அவர்கள் மீது தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள் எல்லாம் பயன்படுத்தப் பட்டது அவருக்கு விஷயமாக இல்லை. ராஜபக்ஷே புரிந்த போர்க்குற்றங்கள் விஷயமாக இல்லை. நிகழ்ந்த கற்பழிப்புகள், கருகிய குழந்தைகள், இடிந்த வீடுகள், எரிந்த வாழ்வுகள் என்று எதுவும் விஷயமாக இல்லை.

அங்கு நடந்த போர் சரியான போரே. போர் என்றால் அப்படித்தான் இருக்கும் அதை நாம் குறை சொல்ல முடியாது. அதிலெல்லாம் எங்களுக்கும் ராஜபக்ஷேக்கும் ஒரு கருத்து வேறுபாடும் இல்லை. ஆனால் போர் முடிந்தப் பின் அவர் தமிழ் மக்களுக்கு செய்வதாக சொன்ன வாக்குறுதிகள் எதையும் அவர் பின்பற்ற வில்லை. அந்த ஒரு விஷயத்தில் தான் எங்களுக்கும் அவருக்கும் சிறு மன வேறுபாடு ஏறபட்டிருக்கிறது என்பதாக இருந்தது அந்தத் தொனி.

பேச்சின் இடையே மிகவும் சாமர்த்தியமாக கவனமாக விஷமாக டி.கே ரங்கராஜன் ஒரு வாக்கியத்தைச் சொன்னார். ‘ எனக்குக் கிடைத்த தகவலின் படி பத்தாயிரம் பொதுமக்கள் போரின் போது கொல்லப் பட்டிருக்கிறார்கள் ‘ என்றார். இந்த பத்தாயிரம் என்ற எண்ணிக்கை ராஜபக்க்ஷே, பொன்சேகா சொல்லும் எண்ணிக்கையைக் காட்டிலும் குறைவான எண்ணிக்கை.

உலகெங்கும் ஈழ ஆதரவாளர்கள் போரில் 1 லட்சம் பேர் இறந்து போனதாக ஆதாரங்கள் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். கவிஞர் மனுஷ்யபுத்திரன் அந்த எண்ணிக்கையைப் பற்றி எழுதும் போது, ‘’இன்றுவரை முள்ளிவாய்க்கால் படுகொலை தினங்களில் அழிக்கப்பட்டவருக்குக் குறைந்த பட்ச நியாயம் கூட வழங்கப்படவில்லை என்பது மட்டுமல்ல, அவர்களுக்கு ஒரு சரியான எண்ணிக்கை கூட இல்லை. அவர்கள் இந்த உலகத்தின் கண்களிலிருந்து முழுமையாக மறைக்கப்பட்டு விட்டார்கள். அவர்களது சடலங்கள் எங்கே இருக்கின்றன என்று யாருக்கும் தெரியாது. இன்றும் ஹிட்லரின் மரண முகாம்களைப் பற்றி நாம் நெஞ்சுருகப் படிக்கிறோம். ஆனால் நம் கண்ணெதிரே இந்த யுத்தத்துடன் தொடர்பில்லாத பல்லாயிரக்கணக்கான மக்கள் மிகக் கொடூரமாக, எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்க அழிக்கப்பட்டதைப் பற்றி யாருக்கும் எந்த மன அதிர்ச்சியும் இல்லை. மாறாக, பட்டப்பகலில் இவ்வளவு வெளிச்சத்தில் இந்தக் கொலைகளை நிகழ்த்தியவர்கள், அவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்கள் எந்தக் கேள்விக்கும் பதில் சொல்ல அவசியம் இல்லாதவர்களாக அமர்ந்திருக்கிறார்கள். அவர்களது அரியணைகள் மேலும் பொலிவு பெற்றுள்ளன.’’ என்று எழுதுகிறார்.

தமிழர் எதிரிகளில் கடைந்தெடுத்த எதிரிகளான ராஜபக்ஷேவும் பொன்சேகாவும் எண்ணிக்கையை சொல்லாமல் குறைந்த உயிர்களைப் பலி கொண்டு இந்த போரில் வென்றோம் என்கிறார்கள். டிகே ரங்கராஜன் போரில் நடுவில் நின்று பிணங்களை எண்ணியவர் போல பத்தாயிரம் என்று ஒரு எண்ணிக்கை சொல்கிறார்.

ஈழ ஆதரவாளர்கள் இறந்தவர்களின் எண்ணிக்கையை கூட்டிச் சொல்லலாம். நீங்கள் விரும்பிய படி நாங்கள் சொல்ல முடியுமா என்று ச.தமிழ்செல்வன் போன்றவர்கள் அடிக்கடி கேட்கிறார்கள்.

ஈழ ஆதரவாளர்கள் இந்த எண்ணிக்கையை கூடுதலாகச் சொல்லாம். உலக கவனத்தை ஈழத்தின் பால் ஈர்ப்பதற்காக. ராஜபக்ஷே மற்றும் அவரின் ஆதரவாளர்கள் இந்த எண்ணிக்கையை குறைத்துத்தான் சொல்வார்கள்.போர்க்குற்றங்களிலிருந்து தப்பிப்பதற்காக.
ஆனால் நடுநிலையாளர்களும் மனிதாபிமானிகளும் கவிஞர் மனுஷ்யபுத்திரன் சொன்ன வாக்கியத்தைத்தான் சொல்வார்கள். ’இன்றுவரை முள்ளிவாய்க்கால் படுகொலை தினங்களில் அழிக்கப்பட்டவருக்குக் குறைந்த பட்ச நியாயம் கூட வழங்கப்படவில்லை என்பது மட்டுமல்ல, அவர்களுக்கு ஒரு சரியான எண்ணிக்கை கூட இல்லை. அவர்கள் இந்த உலகத்தின் கண்களிலிருந்து முழுமையாக மறைக்கப்பட்டு விட்டார்கள். அவர்களது சடலங்கள் எங்கே இருக்கின்றன என்று யாருக்கும் தெரியாது.’

டிகே ரங்கராஜனைப் போல சிங்கள இனவாத அரசின் மனம் குளிரும்படியான பத்தாயிரம் என்ற எண்ணிக்கையை சொல்ல மாட்டார்கள்.

உலகந்தழுவிய மனித நேயம் பேசுகிற இவர்களுக்கு ஈழ விஷயம் குறித்து மட்டும் இப்படி விஷப்பிரச்சாரம் செய்யும்படி எங்கிருந்து யாரால் நஞ்சூட்டப்படுகிறது என்பதுதான் புரியாத மர்மமாக இருக்கிறது.

கடைசியாக பிரகாஷ் காரட் பேச வந்தார். அவர் இலங்கைத்தமிழர் பிரச்சினைக்கு என்ன தீர்வு சொல்லப் போகிறார் என்று எல்லோரும் பதைபதைப்பில் இருந்தார்கள்.
அவருக்கும் அங்க நடந்த போர் பற்றி கவலை இல்லை. போர்க்குற்றங்கள் பற்றி கவலை இல்லை. இடிந்த வீடுகள், கருகிய குழந்தைகள், எரிந்த வாழ்வுகள் என்று எது பற்றியும் கவலை இல்லை. அவைகள் எல்லாம் நடக்க வேண்டியவையே என்பது போலவே பேச்சைத் துவங்கினார்

அரசியல் தீர்வு தான் சரியான தீர்வு, ஆயுதந் தாங்கிய போராட்டம் அல்ல என்றார். மணி முத்தான வாசகம் அது. இரண்டாவதாக முகாம்களில் அடைக்கப் பட்டிருக்கிற தமிழர்களை அவர்களின் சொந்த வாழ்விடங்களுக்கு அனுப்ப வேண்டும் என்றார். வெறுமனே அனுப்பக் கூடாது அவர்களுக்கு மறுவாழ்விற்கான வழிவகைகளச் செய்து அனுப்ப வேண்டும் என்றார். மூன்றாவதாக இரண்டு இனங்களிலும் இருக்கிற ஜனநாயக சக்திகள் பேசி தீர்வு காண வேண்டும் என்றார்.

இதை பேசுவதற்கு அவர் எடுத்துக் கொண்ட நேரம் சரியாக பதினைந்து நிமிடம்.அது சரி அறுபது ஆண்டுகள் நடைபெற்று வருகிற இனப்படுகொலை வரலாற்றை அறுபது ஆண்டுகளா பேச முடியும்?

இவர் சொல்லி விட்டார். பிறகென்ன உலகம் அவர் சொல்படி நடக்கப் போகிறது. தன்கடமை முடிந்து விட்டதாக காரில் ஏறி சென்று விட்டார்.

இனிமேல் சிபிஎம் கட்சி ஈழப்பிரச்சினை குறித்து என்னென்ன செய்ய வேண்டும் என்று அறிவிப்பார் என்று எதிர்பார்த்தேன். எதுவும் செய்ய வேண்டாம் வழக்கம் போல் அமைதியாக இருங்கள். நாம் கடந்த காலத்தில் அமைதியாக இருக்க வேண்டும் என்று எடுத்த முடிவுதான் இப்பொழுதும் சரியான முடிவாக இருக்கிறது. எனவே தொடரந்து அந்தப் பணியை செய்யுங்கள் என்று சொல்லாமல் சொல்லி விட்டு சென்று விட்டார்.

இது போல உலகில் நடக்கிற எல்லா பிரச்சினைகள் குறித்தும் தீர்வுகளை சொல்லி விட்டு வீட்டிலிருக்க வேண்டியது தானே எதற்கு தினசரி கட்சி அலுவலகத்திற்கு வந்து உண்டக் கட்டி தின்று கொண்டிருக்கிறார்கள் என்று என் மனதில் கேள்வி எழுந்தது.

யாரை ஏமாற்ற இந்த நாடகம். எதற்காக அவசர அவசரமாக இந்த நாடகத்தின் அரங்கேற்றம். எதற்காக இந்த நாடகத்திற்கு ‘ இலங்கைத் தமிழர்கள் பிரச்சினைக்குத் தீர்வு ‘ என்றொரு பொய்த்தலைப்பு என்று எதுவும் புரியவில்லை.

நாங்கள் இதுவரை எதுவும் செய்யாமல் இருந்த துதான் இப்பொழுதும் சரியான காரியமாக இருக்கிறது என்று மார்தட்டிக்கொள்வதற்காகவே நடத்தப் பட்டக் கூட்டமாக இருந்தது.

Monday, May 3, 2010

ம க இ க பாதை! மடையர் பாதை! – 7.12

கம்யூனிஸ்ட்கள் என்றால் அறிவாளிகள் என்று ஒரு பொது எண்ணம் முன்பு சமூகத்தில் இருந்தது.

இப்போது கம்யூனிஸ்ட்களுக்கும் அறிவுக்கும் சம்பந்தம் இல்லாமல் போய் ஒரு மாமாங்கம் ஆகி விட்டது.

வெகுஜனப்பரப்பில் ஓரளவு வேலை செய்யும் கம்யூனிஸ்ட் கட்சிகளான சிபிஎம்மும் சிபிஐயும் முட்டாள்களாக ஆகியிருக்கிறார்கள் என்றால் மகஇக வினர் ஒரு படி மேலே போய் மடையன் சாம்பிராணி ஆகியிருக்கிறார்கள்.

மகஇக வினர் சமீப காலங்களில் இலக்கிய உலகை நோக்கி செய்து கொண்டிருக்கிற காரியங்கள் இவர்கள் மடையன் சாம்பிராணிகள் என்பதை உறுதி செய்கின்றன.
கவிஞர் சங்கர ராமசுப்பிரமணியன் வீட்டிற்கு மகஇக ரௌடிகளை அனுப்பி அவருடைய மனைவியிடம் ராமசுப்பிரமணியன் எழுதிய ஒரு கவிதையில் இருந்த பாலியல் சார்ந்த வார்த்தைகளை வாசித்துக் காட்டி விளக்கம் சொல்லும் படி கேட்டு அவரை பயமுறுத்தியிருக்கிறார்கள்.

கவிஞர் விக்கிரமாதித்தியனை ஆட்டோவில் அழைத்துச் சென்று துன்புறுத்தி அவமானப்படுத்தி அனுப்பியிருக்கிறார்கள்.

லீனா மணிமேகலையின் கூட்டத்தில் காட்டுமிராண்டிகள் போல் நடந்திருக்கிறார்கள்.அது மட்டுமில்லாமல் லீனா மணிமேகலையின் பாலியல் வார்த்தைகள் கொண்ட கவிதைகளை அச்சடித்து அவர் குடியிருக்கும் பகுதிகளில் விநியோகிப்போம் என்று பிளாக்மெயில் செய்கிறார்கள்.

முன்பு பிஜேபி ஆட்சியில் இருக்கும் போது ஆர்எஸ்எஸ் குண்டர்கள் ஒரு கூட்டமாக வந்து ஜெய் ராம் சொல்லச் சொல்வார்கள். நாம் சொல்ல மறுத்தால் மிரட்டுவார்கள். நம் வீட்டில் இருக்கும் பெண்களை பயமுறுத்துவார்கள். இன்று ஆர்எஸ்எஸ்ஸின் அபாயம் ஓரளவு நீங்கிய நிலையில் புதிய குண்டர்களாக மகஇக ரௌடிகள் உண்டாகியிருக்கிறார்கள்.

ஆண்டாண்டு காலமாக கம்யூனிஸ்ட் கட்சியை ஒரு தொற்று நோய் போல் தொற்றிக்கொண்டிருக்கும் விஷயங்களில் இந்தத் திமிர்தனமும் ஒன்று.
அவர்கள் தங்களை இந்த உலகை ரட்சிக்க வந்தவர்களாக நினைத்துக் கொள்வார்கள். சமூகத்திற்கு நல்லது செய்ய வந்தவர்கள் நாங்கள் என்ற மமதையில் அவர்களின் அறிவிற்கு எட்டாத விஷயங்களையெல்லாம் தவறான விஷயங்கள் என்று முடிவு செய்து அழிக்க முயற்சி செய்வார்கள்.

க்யூபாவில், புரட்சிக்குப் பின்னரான சமூகத்தில், அங்கே ஹோமோசெக்சுவல்ஸ் அதிகமாக இருக்கிறார்கள் என்பதை அறிந்து, அவர்களையெல்லாம் விரட்டி விரட்டி நாயைப் பிடிப்பது போல பிடித்து, அவர்களை ஒரு கப்பலில் ஏற்றி கனடாவிற்கு அனுப்பி வைத்தார்கள்.அவர்களில் நிறைய பேர் கவிஞர்கள் எழுத்தாளர்கள் பேராசிரியர்கள்.
இந்த நூற்றாண்டின் மகத்தான சிந்தனையான மார்க்ஸியம் , உலகின் பலநாடுகளில் இருந்தும் தூக்கி எறியப்பட்டதற்கு இவர்களைப் போன்ற குண்டர்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வந்ததே காரணம்.

எழுத்தாளர்கள் , கவிஞர்கள் என்பவர்கள் ஒரு சமூகத்தின் சிந்தனையாளர்கள். அவர்கள் எதைப்பற்றியும் சிந்திப்பதற்கும் அதை பதிவு செய்வதற்கும் இந்த ஜனநாயக சமூகம் உரிமை வழங்கியிருக்கிறது. அவர்கள் நாலாவிதமாகவும் யோசிப்பார்கள்.அவர்கள் யோசிப்பதன் கூட்டுமையே ஒரு சமூகத்தை ஒரு கட்டத்திலிருந்து மேலான இன்னொரு கட்டத்திற்கு இட்டுச் செல்லும்.

யாரோ சிலர் கீழ்மையானதாக யோசிப்பதால் அது ஒட்டு மொத்த சமூகத்தையும் கீழ் நிலைக்கு கொண்டு போய் விடாது. யாரோ சிலர் மிகவும் மேன்மையானதாக யோசித்து விடுவதால் அது ஒட்டு மொத்த சமூகத்தையும் மேலான நிலைக்கு கொண்டு சென்று விடாது. கீழான சிந்தனைகளை ஒரு சமூகம் அதுவே பரிசீலித்து கீழே தள்ளி விட்டு சென்று விடும். இப்படித்தான் பல்லாயிரம் ஆண்டுகளாக சமூகம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.இது தான் சமூக சிந்தனையின் செயல்பாடு. இதற்கிடையே ஒரு சிந்தனையாளனின் கடமை தான் சிந்திப்பதை பதிவு செயவதே.

ஒரு சமூகம் புறக்கணிக்கும் விஷயத்தை சிந்தித்தவர்களும் சமூக நன்மைக்காக செயல்பட்டவர்கள்தான்.ஒரு சமூகம் உள்ளெடுத்துக் கொண்ட விஷயத்தை சிந்தித்தவர்களும் சமூக நன்மைக்காக செயல்பட்டவர்கள் தான்.
இந்த அடிப்படை அறிவு இல்லாத காரணத்தால் தான் நாம் தான் இதற்கு ஜவாப்தவாரி என்று முடிவு செய்து இந்த மகஇக மடையர்கள் இப்படி யோசி அப்படி எழுது என்று கட்டளையிட்டு குண்டாந்தடியோடு அலைகிறார்கள்.

ஒரு பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு அரவாணிகள் ஹோமோசெக்சுவல்ஸ், லெஸ்பியன்ஸ் போன்ற வார்த்தைகளெல்லாம் அருவருப்பான வார்த்தைகளாக இருந்தன. அதை வாழ்க்கைமுறையாகக் கொண்டவர்கள் இழிவான மனிதர்கள் என்ற நிலை இருந்தது.சாருநிவேதிதா, ரமேஷ் பிரேம், சி.மோகன், இவர்களைப் போன்ற சில பத்து எழுத்தாளர்கள் அவர்களைப் பற்றி தொடர்ந்து எழுதியும் பேசியும் வந்தார்கள். இன்று ஹோமோசெக்சுவல்ஸ் ,லெஸ்பியன்ஸ், அரவாணிகள் இவர்கள் எல்லாம் விளிம்பு நிலை மனிதர்கள் என்றாகி அவர்களுக்கு ஒரு சமூக அந்தஸ்த்து உண்டாகத்துவங்கி இருக்கிறது. இந்த அளப்பரிய பணியை செய்தது எழுத்தாளர்களே அன்றி இந்த மகஇக மடையர்கள் இல்லை. உண்மையில் இந்த மகஇக மடையர்கள் சமூகத்தில் ஏற்படுத்திய மாற்றம் என்று எதுவும் இல்லை.

அரவாணிகள் ஹோமோசெக்சுவல்ஸ், லெஸ்பியன்ஸ் இவர்களுக்கு சமூக அந்தஸ்த்து உருவாகத்துவங்கிய வரலாற்று நிகழ்வு சாருநிவேதிதா மதுரையில் போட்ட ஒரு நாடகத்திலிருந்து துவங்கியது.அந்த நாடகத்தில் பாலியல் சார்ந்த காட்சிகள் இடம் பெற்றிருந்தன. அன்று அந்த நாடகத்தை நடைபெறவிடாமல் சிபிஎம் குண்டர்கள் தடுத்தார்கள். மேடையேறி நடிகர்களை இயக்குனரை அடித்தார்கள். இன்று அந்த காரியத்திற்காக வெட்கப் பட வேண்டியவர்களாக சிபிஎம் காரர்கள்தான் இருக்கிறார்களே தவிர சாருநிவேதிதா இல்லை.

சாருநிவேதிதா ரமேஷ் பிரேம் சி.மோகன் போன்ற எழுத்தாளர்கள் ஒரு பத்தாண்டுகளில் ஒரு மௌனப் புரட்சியை நடத்தியிருக்கிறார்கள். இந்த கலாச்சார குண்டர்களைப் போல வெறுமனே உண்டியலிடித்து வயிறு வளர்க்க வில்லை.

முன்பு ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும் போது யாருக்கேனும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றால் அதிமுக பெண் ரௌடிகளை அனுப்பி அவர்களை நோக்கி பாவாடையை தூக்கி காட்டச் செய்வார். அன்று லீனா மணிமேகலையின் கூட்டத்தில் மகஇக பெண் தோழர்கள் அந்த ஒரு காரியத்தை மட்டும் செய்யவில்லை. மகஇக இன்னும் அந்த உத்தரவை போடவில்லை போலிருக்கிறது. அடுத்த முறை அதையும் ஆவலுடன் எதிர்பார்க்கலாம்.
எந்தக் கட்சியாக இருந்தாலும் தொண்டர்கள் மட்டும் எப்பொழுதும் குண்டர்களாகவே பயன்படுத்தப் படுகிறார்கள்.அதிமுகவாக இருந்தாலும் அதுதான் உண்மை. மகஇக வாக இருந்தாலும் அதுதான் உண்மை.

யோனிக்கவிதை யோனிக்கவிதை என்று கூப்பாடு போடுகிறார்கள். ஏன் மகஇக கார ர்கள் யாரும் யோனியை பயன்படுத்துவதில்லையா? மகஇக பெண் தோழர்கள் யாருக்கும் யோனி இல்லையா?இவர்கள் யாரும் புணர்வதில்லையா? தோழர்கள் யாரும் சுயமைதுனம் செய்வதில்லையா? திருமணம் செய்து கொள்ளும் பெண்ணுக்கு யோனி இருந்தால் என்ன செய்வார்கள்? யோனியை அறுத்து எறியச் சொல்வார்களா?ஏன் யோனி இவர்களுக்கு இவ்வளவு அலர்ஜியாக இருக்கிறது?

எல்லோரும் யோனி வழியாகவே வருகிறோம்.யோனியைப் பார்க்க அலைகிறோம்.யோனி கிடைத்தால் சுவைக்கிறோம். யோனியைப் புனர்கிறோம். யோனியைக் கடிக்கிறோம். யோனியைக் குதர்கிறோம்.யோனியில் குண்டு வைத்து தகர்க்கிறோம். இவ்வளவு காரியங்கள் யோனியில் செய்யும் போது, யோனியை வைத்து கவிதை மட்டும் எழுதக்கூடாதா?
லீனாவின் கவிதையை விமர்சனம் செய்யக் கூடாது என்று யாரும் சொல்லவில்லை.விமர்சனம் செய்யுங்கள். பதில் கவிதை எழுதுங்கள்.லீனா கூட்டம் போட்டால் பதில் கூட்டம் போடுங்கள். ஏற்பாடு செய்திருக்கும் கூட்டத்திற்கு வந்து குழப்பம் உண்டாக்குவது உங்களின் திமிரையே காட்டுகிறது.

அது போதாது என்று லீனாவின் கவிதையை அச்சடித்து அவர் குடியிருக்கும் இடங்களில் இருக்கும் மக்களிடம் விநியோகிப்பார்களாம். ஏனென்றால் நம்மைச் சுற்றி இருக்கிற மக்கள் தான் அளவு கோளாம்.

லீனா மட்டும் அல்ல, மகஇக காரர்கள் உட்பட இங்கே பலரும் நம்மைச் சூழ்ந்திருப்பவர்கள் அங்கீகரிக்காத வாழ்க்கை முறைதான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.அவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதற்காக நாம் சாக முடியாது. அவர்கள் ஏற்றுக் கொள்ளும் விதமாக நாம் வாழவும் முடியாது.

ஒரு மகஇக தோழர் குடியிருக்கும் பகுதிக்குச் சென்று இவர் மகஇக வைச் சேர்ந்தவர் இன்னென்ன போராட்டங்களில் பங்கெடுத்திருக்கிறார். இன்னென்ன போராட்டங்கள் நடத்த திட்டமிட்டிருக்கிறார் என்று ஒரு நோட்டீஸ் அச்சடித்து கொடுத்தால் அவர் அந்த பகுதியில் வாழ முடியுமா?. அவர் குடியிருக்கும் வீட்டு உரிமையாளரால் உடனடியாக காலி செய்யப் படுவார்.

அப்படி செய்வேன் என்பது அப்பட்டமான மிரட்டல். கீழ்த்தரமான ரௌடிகளின் வேலை.
மிகவும் தீர்மானமாகவே மகஇக வினர் ரௌடிகளாக மாறிக் கொண்டிருக்கிறார்கள்.
குள்ளர்களை ஒருபோதும் தண்ணீர் ஊற்றி வளர்க்க முடியாது. அது போல மகஇக வினரையும் ஒரு போதும் விவாதித்து சரி செய்ய முடியாது. அவர்களுக்கு படிப்பறிவு குறைவு.பாட்டாளி வர்க்க சர்வதிகாரம் என்று மார்க்ஸிய புத்தகங்களில் வரும் வாக்கியத்தை படிக்காதவர்களின் சர்வதிகாரம் என்பதாக புரிந்து கொண்டு அதற்கு தன்னைத் தகவமைத்துக் கொள்வதற்காக படிப்பறிவில்லாமல் இருப்பவர்கள். முதியோர் கல்வித்திட்டம் போல ஒன்றில் சில புத்தகங்களை மட்டும் வாசித்து விட்டு உலக ஞானத்தை அடைந்து விட்டதாய் மதர்ப்பில் இருப்பவர்கள்.

ஒரு படிப்பறிவில்லாத கூட்டம் தனக்கு அறிவு இருப்பதாக நினைப்பது போல ஆபத்து உலகிற்கு வேறு எதுவும் இல்லை. ஹிட்டலர் முசலோனியில் துவங்கி பல சர்வதிகாரிகளும் இந்த நம்பிக்கையுடனே உலகத்திற்கு பெரும் கேட்டை விளைவித்தார்கள்.இன்று மகஇக வினர் சரியாக அந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.

தமிழக அரசியற் பரப்பில் .001% கூட அங்கீகாரம் இல்லாத இவர்கள், தமிழகத்தின் எந்த தளத்தாலும் அங்கீகாரிக்கப் படாதஇவர்கள் தனக்கு இந்த அதிகாரமெல்லாம் இருக்கிறது என்று நினைப்பது ரௌடிகள் தனக்குத் தானே பட்டம் சூட்டிக் கொள்வது போலத்தான் இருக்கிறது.
அதுவும் வினவின் சமீபகால நடவடிக்கைகளைப் பாருங்கள். அவர்கள் தம்மை ரௌடிகளாக மாற்றிக் கொண்டிருப்பது புரியும்.

வினவு தளத்தில் லீனாவைப் பற்றிய கட்டுரையில் கவிதை எழுதுவது பற்றி ஒருவர் சொல்லும் கருத்தைப் பாருங்கள்.

‘’மூளையின் இடது பகுதிக்கு அதிகம் வேலை கொடுக்காததால் சற்று ஊனமுற்றவர்கள், அதனை சரிக்கட்ட வலது பகுதியை சார்ந்திருக்கும் முயற்சி இது. யோனி, குறி என்று எழுதி புரட்சிப் பட்டம் வாங்கும் இந்த அறிவுத்துறை தப்பிலித்தனத்துக்கு கவிதை என்று பெயர் சூட்டிக் கொள்வதும், எனது வெளிப்பாட்டு மொழி கவிதை என்பதும் ஒரு தரம் தாழ்ந்த தந்திரம்.’’ - வினவு

எழுத்தாளர்கள் கவிஞர்களைப் பற்றிய எவ்வளவு வக்கிரமும் வெறுப்புணர்வும் கொண்ட வாக்கியம் இது என்பதைப் பாருங்கள்.

இந்தத் தப்பிலிகள் எல்லாம் ஒன்று சேர்ந்துதான் புரச்சீ நடத்தி அதிகாரத்தைக் கைப்பற்றி நம்மையெல்லாம் ஆளப் போகிறார்கள். இவர்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தால் இன்று இவர்கள் நடந்து கொள்வதைப் போன்ற தப்பிலித்தனம் தான் அன்று அவர்களின் ஆட்சி தர்மமாகவும் இருக்கும்

அன்பிற்குரிய எழுத்தாளர்களே !

மக இக ஃபாஸிஸத் தன்மை கொண்ட அமைப்பாக வெளிப்டத் தயாராகி விட்டதை உணருங்கள்.

அவர்களுடனான பகையை அறிவியுங்கள்.

உங்கள் நண்பர்களில் மகஇக வினர் இருந்தால் அவர்களை நட்பு வட்டத்தில் இருந்து வெளியேற்றுங்கள்.

அவர்களுக்கு நிதி கொடுப்பதை நிறுத்துங்கள்.

அவர்களின் அமைப்பை ஆய்வு செயவதையும் , அவர்களின் அமைப்பில் பெருக்கெடுத்து ஓடும் வக்கிரத்தையும் வெறுப்பையும் அம்பலப் படுத்துவதையும் தொடர் வேலையாக க் கொள்ளுங்கள்.

அன்பான மக இக பெண் தோழர்களே! உங்கள் யோனிகளைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். யோனி மீதி உங்கள் ஆண் தோழர்களுக்கு இருக்கிற வெறுப்பில் ஒரு நாள் உங்களது யோனிகளை இவர்கள் கிழித்தெறியக் கூடும்.! ஏனெனில் மகஇககாரர்களுக்கு அடிப்படையாய் இருப்பது அறிவின் மீதான வெறுப்பு, யோனியின் மீதான வெறுப்பு மட்டுமே.