Sunday, December 19, 2010

சாரு நிவேதிதா வெள்ளேந்தி ; மிஷ்கின் களவானி

இங்கிருக்கிற எழுத்தாளர்களில் மிகவும் வெள்ளேந்தி யார் என்று கேட்டால்,சாரு
நிவேதிதா என்று தான் நான் பதில் சொல்வேன்.

எனக்கு அவரை நேரடியாகத் தெரியாது. அவரும் நானும் ஒரு ஹலோ கூட சொல்லிக்
கொண்டதில்லை. ஆனாலும் சாரு நிவேதிதாவை அவரின் எழுத்தின் மூலமாகவும் உரையாடல் மூலமாகவும் நான் தொடர்ந்து பார்த்துக் கொண்டே வருகிறேன்.

எந்த பாவமும் செய்யாத அவர் மேல் எப்போதும் ஏதாவது பழி விழுந்து கொண்டே இருக்கும். எந்த காரணமும் இல்லாமல் அவரை யாராவது துவேஷித்துக் கொண்டே இருப்பார்கள்.அவருடைய கதையின் ஒரு அட்சரம் கூட வாசிக்காமல் அவரை ஆபாச எழுத்தாளர் என்பார்கள்.இன்டெர்னெட்டைப் பயன் படுத்தி இவரைக் காட்டிலும் அதிகப் பணம் வசூலித்தவர்கள் இவரை இன்டெர்னெட் பிச்சைக்காரன் என்பார்கள். எழுத்துக்கு இவரளவு நேர்மையில்லாதவர்கள் இவரை பொதுவாகவே நேர்மையில்லாதவர் என்பார்கள். மிஷ்கின் போன்ற தகுதி இல்லாத வழிப்போக்கர்கள் எல்லாம் இவர் மீது சானம் எறிந்து விட்டுப் போவார்கள்

ஆனால் இவர்கள் சொல்கிற எதுவுமே சாரு நிவேதிதா இல்லை என்பதை அவரை கூர்ந்து கவனிக்கிறவர்கள் மட்டுமே அறிய முடியும்.

காரணமில்லாமல் இவர் மீது பழி விழக் காரணம் சாரு தேர்ந்தெடுத்துக் கொண்ட கோட்பாடு.

காமத்தைப் பேசுதல் என்பதே சாருவின் இலக்கியக் கோட்பாடாக இருக்கிறது.சமூகம் காமத்தால் சிக்குண்டு கிடக்கிறது என்று சாரு தீவிரமாக நம்புகிறார்.மனிதன் காமத்தால் அவமானப்படுகிறான். பெண்கள் காமத்தால் கொலைகாரிகளாக மாறுகிறார்கள் என்று அவர் நம்புகிறார். இந்த சிக்கலில் இருந்து மனித குலம் விடுபட வேண்டும் என்பதே சாருவின் எழுத்தில் பேச்சில் பல சமயங்களில் முக்கியமான சரடாக இருந்து வந்திருக்கிறது.

இந்தியா மாதிரியான தேசத்தில் காமத்தைப் பேசுவதற்கு ஒரு சிந்தனையாளனுக்கு எழுத்தாளனுக்கு பெரிய தைரியம் இருக்க வேண்டும். ஏனென்றால் இங்கு பிஜேபிகாரர்கள் மட்டும் கலாச்சாரக் காவலர்கள் அல்ல. கம்யூனிஸ்ட் கட்சியினரும்,பெரியார் உருவாக்கிய திராவிட கலகத்தினருமே கலாச்சாரக் காவலர்கள் தான்.ஒவ்வொரு இந்தியனும் இங்கே கலாச்சாரக் காவலன்தான். இவர்கள் ஆதாரமாக நம்பி வாழும் காம நெறிக்கு(?) எதிரான கருத்தை சாரு பேசுகிறார் என்ற ஒன்றே, துரதிர்ஷ்டவசமாக இவர்கள் அனைவரும் சாருவுக்கு எதிரானவர்களாக அணி திரள்வதற்கு முதல் காரணமாக அமைந்து விட்டது.

மதுரையில் சாரு எழுதிய நாடகம் ஒன்று மேடையேற்றப் பட்டது. அதில் சாருவும் ஒரு பாத்திரத்தில் நடித்தார்.அந்த நாடகம் பாலியலை விவாதிக்கிற நாடகம். ஆனால் அந்த அரங்கில் அன்றைய தினத்தில் பார்வையாளர்களாக இடது சாரி மற்றும் அன்றைய தின சிறு பத்திரிக்கை சிந்தனையாளர்கள் என்கிற பத்தாம் பசலிகள் மேடையேறி சாரு நிவேதிதாவை தாக்கத் துவங்கினார்கள்.ஆனால் அவர்களில் பலர் இன்று அந்தக் காரியத்திற்காக வெட்கப்படுகிறவர்களாகவே இருக்கிறார்கள்.

ஆனால் காலத்தை என்ன செய்ய முடியும்? அவர்கள் உண்டாக்கிய துவேசத் தீ தொடர்ந்து எரிந்து பரவி சாருவின் பல செயல்பாடுகளை எரித்து கருக்கிக் கொண்டே இருக்கிறது.

இரண்டாவதாக சாருவின் ஜீரோ டிகிரி வெளி வந்த நேரம்.அந்தப் புத்தகம் பலரையும் ரத்தக் கொதிப்பிற்கு உள்ளாக்கியது. இன்று சாருவின் நெருங்கிய நட்பு வட்டத்தில் இருக்கிற ஒரு பெண் எழுத்தாளரே, ஒரு மேடையில் நான் அந்த புத்தகங்கள் மொத்தத்தையும் பணம் கொடுத்து வாங்கி தீ வைத்து கொளுத்தத் தயாராக இருக்கிறேன் என்று சூளுரைத்தார்.அந்த இலக்கிய அரங்கம் மொத்தமும் கைத்தட்டி அதை ஆமோதித்தது. ஆனால் ஜீரோ டிகிரி இன்று தமிழ் நாவல்களில் தவிர்க்க முடியாத இடத்தில் இருக்கிறது.

இப்படி யார் யாரோ போகிற போக்கில் சாருவின் வீட்டை நோக்கி ஒரு தீக்குச்சியை கொளுத்திப் போட்டுக் கொண்டே போவார்கள். சாரு மறுபடியும் மறுபடியும் இவர்களிடம் ஏமாந்து செய்வதறியாது நிற்பார்.

சாருவுக்குப் பெரிதாக தந்திரங்கள் கிடையாது. யாரையும் ஏமாற்றி பணம் சம்பாதித்து உயர்ந்த நிலைக்குப் போய் விடுகிற கணக்கு கிடையாது.தான் கொண்டிருக்கிற கொள்கைகளோடும் கோட்பாட்டுகளோடும் இந்த வாழ்க்கையை கௌரவமாக வாழ்ந்து முடித்து விட வேண்டும் என்பதைத் தவிர அவருக்கு வேறு ஆசைகள் இருப்பதாகத் தெரியவில்லை.
ஆனாலும் கெடுக்கிற கரங்கள் அவரை நோக்கி நீண்டு கொண்டே இருக்கின்றன.

எண்பதுகளின் துவக்கத்தில் தமிழகத்தின் இலக்கியத்தை தலைகீழாகப் புரட்டிப் போடுகிற ஆளுமைகளாக சில பேர் இலக்கிய உலகத்திற்குள் நுழைந்தார்கள்.

ஒருவர் கோணங்கி.மேஜிகல் ரியலிஸம் என்கிற மந்திர குச்சியோடு வந்தார். இன்னொருவர்
எஸ். ராமகிருஷ்ணன், தமிழில் நாவல்களே இல்லை, நான் எழுதினால் தான் உண்டு என்ற கோஷத்தோடு வந்தார்.மூன்றாவது சாரு, காமத்தைப் பேசு என்கிற அரசியில் மொழியோடு வந்தார். ஜெயமோகன் இந்திய ஞான மரபை முன் வைத்து வந்தார். தலித் அரசியலை முன் வைத்து ரவிக்குமார் வந்தார்.கவித்துவ தரிசனம், புதிய அழகியல் விதி பேசிக்கொண்டு மனுஷ்யபுத்திரன் வந்தார்.

இவர்கள் ஒவ்வொருவரும் காலத்தின் அலைக்கழிப்பைத் தாங்க முடியாமல் தன்னுடைய கொள்கைகளை மூட்டைக் கட்டி ஒரு ஓரத்தில் வைத்து விட்டு ஏதாவது செய்து லட்சாதிபதியாகிற முயற்ச்சியில் இறங்கினார்கள்.

எஸ். ராமகிருஷ்ணன் வெகுஜன கலாச்சாரத்தின் நாயகனான ரஜினிகாந்தை கடவுள் என்று துதிபாடி, சிறு பத்திரிக்கை இயக்கத்தின் அடையாளங்களில் ஒருவரான குட்டி ரேவதியை கேலிப் பொருளாக்கி பலி கொடுத்து, சினிமாக்கார ர்களின் நம்பிக்கையை பெற்று, சினிமாக்காரர்களுக்கு பல விதமான வேலைகள் செய்து கொடுத்து, இன்று சிலபல பத்து லட்சங்கள் சம்பாதித்தவராக உருவாகிவிட்டார்.அவர் வந்தால் தான் எழுத முடியும் என்றிருந்த தமிழ் நாவல் இன்னும் எழுதப் படாமலே இருக்கிறது.

இவரைப் பார்த்து ஜெயமோகனும் இந்திய ஞானமரபு, அறச்சீற்றம் போன்ற வசனங்களையெல்லாம் இணையதளத்திற்கு மட்டும் என்று வைத்துக் கொண்டு திரைத்துறைக்கு வந்து சேர்ந்தார். அவருடைய கருத்தியல்களோடு உடன்பாடில்லாத திரைத்துறையில் பணியாற்றுகிற போது வேறு தெருவுக்குள் நுழைந்து விட்ட நாய் போல் வாலை இரண்டு கால்களுக்கிடையே வைத்துக் கொண்டு பம்மி நடக்கிறவாராக தன்னை வைத்துக்கொண்டு வசன தொழில் செய்து லட்சம் லட்சமாய் சம்பாதிக்கிறவறாக மாறிக்கொண்டார்.

மனுஷ்யபுத்திரன், சுஜாதா தான் எழுத்துலகின் பீஷ்மர் என அறிவித்து சுஜாதா அவசர போக்கில் எழுதிய மாத நாவல்களுக்கெல்லாம் சிறு பத்திரிக்கையின் தரமான அச்சு மேன்மையை கொடுத்து ஒரு பதிப்பாளராக உயர்ந்து லட்சங்களைப் பார்க்கத் துவங்கி விட்டார்.

ரவிக்குமார் திருமாவளவனின் கரம் பட்டு எம் எல் ஏ, பிரமுகர் என்ற என்ற அந்தஸ்த்தை அடைந்து விட்டார்.

இப்படி ஏதாவது ஒரு சாமர்த்திய காரியம் செய்து பிழைப்பிற்கும் லட்சத்திற்கும் வழி
செய்து கொள்ளாமல் அல்லது செய்யத் தெரியாமல் நின்றவர்கள் இருவர்தான்.

ஒருவர் சாருநிவேதிதா. இன்னொருவர் கோணங்கி.

இதில் கோணங்கியின் நிலை பரவாயில்லை. அவர் எந்தப் பணமும் சம்பாதிக்காவிட்டாலும் அவருடைய குடும்ப சூழல் அவரை கை விட்டு விடாது.ஆனால் சாருவின் நிலை அப்படி இல்லை. எந்த மாதமும் வாழ்க்கை அவரை அகௌரவப் படுத்தி விடும் என்கிற சூழல். அதற்கிடையிலும் தான் கொண்ட கொள்கையில் மாற்றமில்லாமல் தொடர்ந்து அதே வழியில் இயங்கிக் கொண்டே இருக்கிறார்.

ஆனாலும் சாருவை விதியும் வீணர்களும் துரத்தி அடித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

சாருவின் பிரச்சினையே அவர் யாரையும் எளிதில் நம்பி மோசம் போகிறார் என்பதிலேயே இருக்கிறது.

ஒரு நண்பர் சொன்ன தகவல் இது.

ஒரு 'பிறபழ' எழுத்தாளர் இருக்கிறார். அவர் இலக்கியத்தில் போன சோரத்திற்காக, சாரு அவரை கடுமையாக விமர்சிப்பவராக இருந்தார். சாருவைப் பற்றித்தான் தெரியுமே. அவர் விமர்சனம் செய்ய இறங்கினால் பத்திரகாளியாகி விடுவார். அவருக்குப் பத்துக் கரங்கள் உண்டாகி விடும். சாரு அப்படித்தான் விஸ்வரூபம் கொண்டு அந்த எழுத்தாளரை விமர்சித்துக் கொண்டிருந்திருக்கிறார். அந்த விமர்சனத்தைத் தாங்க முடியாமல் அவர் வாயை எப்படி மூடுவது என்று யோசித்து, மிகத் தந்திரமாக ஒரு மேடையில் சாருவை தூக்குத் தூக்கென்று தூக்கி , புகழ் புகழ் என்று புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.அப்பாவி சாரு அந்த புகழுரைகளை அப்படியே நம்பி மறு நாளிலிருந்து அந்த எழுத்தாளரின் சம்பள மில்லாத அடியாளாக மாறி, இன்று யார் அந்த எழுத்தாளரை ஒரு வார்த்தை சொன்னாலும் பாய்ந்து சென்றுத் தாக்குகிறவராக தன்னை ஒப்புக் கொடுத்து விட்டார். சாருவின் இந்த செயல் பாட்டை, இன்றும், குறும்பு கலந்த கண் சிமிட்டலுடன் வேடிக்கைப் பார்க்கிறவராக அந்த பிறபழ எழுத்தாளர் இருக்கிறாராம்.

குணக்கேட்டை வாழ்க்கை முறையாகக் கொண்டிருக்கிற நபர்களின் எளிய நடிப்பில்
ஏமாந்து போகிற சிறு குழந்தையாகவே இன்னும் சாரு நிவேதிதா இருக்கிறார் என்பதற்கு
இதுதான் உதாரணம்.

இப்படித்தான் அவரை இன்டெர்நெட் பிச்சைக்காரன் என்று சொல்லி கேவலப்படித்திய சம்பவமும் ஒரு துவேஷமாக நிகழ்ந்தது.

சாரு இருபது வருடங்கள் தீவிரமாக எழுத்தை மட்டுமே தன் வாழ்க்கை முறையாக கொண்டு செயல்படுபவர் என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை அவர் இந்த எழுத்தினால் எதுவும் சம்பாதித்து விடவும் இல்லை என்பதும்.

அதனாலேயே அவர் பணத்திற்காக மிகக் கேவலமான நெருக்கடிகளை சந்திக்க வேண்டியிருக்கிறது. அந்த நெருக்கடிகளின் அடிப்படையில் அவர் அவருடைய இணைய வாசகர்களிடம் சில சமயம் பணம் கேட்டு கோரிக்கை வைக்கிறார். அதில் அவருக்கு சில பல ஆயிரங்கள் வந்து சேர்ந்திருக்கிறது என்பது உண்மைதான்.

ஆனால் அவரை விட இன்டெர்னெட்டில் சில பல லட்சங்களை சம்பாதித்த அமுங்குனிச் சாமியார்கள் எல்லாம் பல பேர் இருக்கிறார்கள்.

ஆனால் அவர்களை எல்லாம் விட்டு விட்டு ஞானி சாரு நிவேதிதாவை இன்டெர்னெட் பிச்சைக்காரன் என்று பெயர் சூட்டினார். அதன் பின் ஞானி 'நான் அமெரிக்கா வரத்தயாராக இருக்கிறேன். பிரான்ஸ் வரத் தயாராக இருக்கிறேன்' என்றெல்லாம் கோரிக்கை அனுப்பி வாசகர்கள் செலவில் உல்லாசப் பயணம் போனார்.

ஆனால் அவரை இன்டெர்நெட் கொள்ளைக்காரன் என்றோ வழிப்பறி என்றோ சாரு எங்கேயும் சொல்ல வில்லை.

அது மட்டும் இல்லாமல் ஞானி ஒரு புத்தக வெளியீட்டில் சாருவை ஆதவனுக்கு சமமான எழுத்தாளர் என்று பாராட்ட இருந்தார் என்ற ஒரு தகவலிலேயே சாரு குளிர்ந்து போனார்.

இந்த பெருந்தன்மைதான் சாரு. மற்ற சிறுதன்மை தான் மற்றவர்கள்.

இது போல் சாரு குறித்து உலாவும் துவேஷங்கள் ஒவ்வொன்றிலும் வேறு உண்மை இருக்கிறது. அந்த உண்மை அறியாதவர்களே சாருவை களங்கம் செய்து கொண்டே இருக்கிறார்கள்.இந்த துவேஷங்கள் சாருவுக்கு வாழ்க்கை நெருக்கடியை உண்டாக்கிக் கொண்டே இருக்கிறது.

அன்புள்ள சாரு, நான் உங்களைக் கேட்டுக்கொள்வதெல்லாம் இரண்டு விஷயங்கள் தான்.

பணம் தான் இங்கு எல்லா விஷயத்தையும் தீர்மானிக்கிறது.ஒரு தொலைபேசி அழைப்பு உங்களை பதட்டத்திற்கு உள்ளாக்கி உடனடியாக ஆட்டோ பிடித்து ஓட வைக்கிறது. உங்களை சில பேர் இன்று அலட்சியமாக பேசி விடுவதெல்லாம் கூட உங்களின் பணமற்ற நிலையினால் தான் ஏற்பட்டு விடுகிறது.

ஏதாவது ஒன்று செய்து பணத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள்.

காட்டாற்று வெள்ளம் போன்றது உங்கள் எழுத்து. எழுத்தாளர் சுஜாதாவும் எழுத்தாளர் பாலகுமாரனும் அமர்ந்திருந்த சிம்மாசனங்கள் இன்னும் வெகுஜன பத்திரிக்கைகளில் காலியாகவே கிடக்கிறது. நீங்கள் வெகுஜன பத்திரிக்கைகளில் நாவல்கள் தொடர்கதைகள் எழுதத் துவங்கினால் அந்த சிம்மாசனம் அடுத்து உங்களுக்கே. அதன் பின் உங்களை ஏளனமாய் பேசுகிறவர்கள் எல்லாம் யானையை எதிர்கொண்ட பன்றிக் கூட்டமாக சிதறி ஓடி விடுவார்கள்.

இரண்டாவதாக இந்த மிஷ்கின் போன்ற கதைக் களவானிகளை எப்பொழுதும் உயர்வான நபர்களாகக் கருதாதீர்கள்.

இங்கே சிறந்த படங்கள் எடுக்கிற யாரும் சிறந்தவர்கள் இல்லை.

மோசமான படங்கள் எப்படி இவர்களின் அறியாமையினால் நிகழ்கிறதோ, அதைப்போலவே நல்ல படங்களும் இவர்களின் அறியாமையிலிருந்தே உருவாகிறது என்பதை தமிழ் சினிமாவைத் தொடர்ந்து கவனித்து வந்தால் ஒருவர் உணரலாம்.

உங்களை ரெமி மார்டினுக்கு அலைகிறவர் என்றும், உங்கள் எழுத்து சரோஜாதேவி எழுத்து என்றும் அபத்தமாக புரிந்து வைத்திருப்பதைப் போலத்தான் மிஷ்கின், வாழ்க்கையை இலக்கியத்தை, சினிமாவை, மனித உறவுகளை, நட்பை, காதலை, கணவன் மனைவி உறவை என, எல்லாவற்றையும் அபத்தமாகப் புரிந்து வைத்திருக்கிறார். ஆனால் தான் இந்தியாவிலேயே சிறந்த இயக்குனர் என்ற எண்ணத்திலும் இருக்கிறார்.

வாசிப்பு, கலை ஆளுமை இவற்றை கணக்கில் எடுத்துக் கொண்டால் இவர் உங்களின் கால் தூசுக்குப் பெற மாட்டார்.

இவர்களின் நட்பை ஒரு போதும் தலையில் ஏற்றிக் கொள்ளாதீர்கள்!

மிக்க அன்புடன்
யோகராஜ்

Monday, December 13, 2010

பதிவர்களை திரையுலகம் விழுங்கப் பார்க்கிறது!

(இவை ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கேள்விகளுடன் மேலும் சில கேள்வி பதில்கள் சேர்க்கப் பட்ட பதிவு. இந்தக் கேள்வி பதில்களை ஏற்கனவே வாசித்திருப்பவர்கள் கடைசியில் சேர்க்கப் பட்டிருக்கும் புதிய கேள்வி பதில்களுக்குச் செல்லவும். வாசிக்காதவர்கள் துவக்கத்திலிருந்து வாசிக்கலாம்)

நந்தலாலா - அயோக்கியம் மிஷ்கின்

உலக சினிமாவிற்கும் திருட்டுத் தனத்திற்கும் அப்படி என்ன தான் நமக்கு எட்டாத படி ரகசிய உறவோ.. உலக சினிமா பார்ப்பவர்கள் பெரும்பாலும் திருடர்களாகவே இருக்கிறார்கள் . அதுவும் வெற்றிக்கான வெறி புழுத்து வழியும் இந்தியா மாதிரி தேசங்களில் இந்த திருடர்களின் எண்ணிக்கை சற்று அதிகமாகவே இருக்கிறது.

இந்த வரிசையில் நாம் புதிதாக மிஷ்கினை சேர்க்க வேண்டும்.

வாழும் சினிமா மேதையான டிக்கேசி கிட்டனோவின் கிகிஜிரோ தமிழாக்கம் செய்யப்பட்டு நந்தலாலா என்ற பெயரில் ஓடிக்கொண்டிருக்கிறது. டிக்கேசி கிட்டனோவை இருட்டடிப்பு செய்து விட்டு மிஷ்கின் அந்தப் படத்திற்கான புகழ் மாலைகளை முன் நின்று வாங்கிக் கொண்டிருக்கிறார். இதைத் தாண்டி ஒரு சினிமா மேதையை யாரும் அவமதிக்க முடியாது.
மிஷ்கினின் இந்தக் காரியம் தமிழ் சிந்தனையாளர்களிடம் பல்வேறு கேள்விகளை உண்டாக்கியிருக்கிறது.

எனவே கேள்வி பதிலாகவே நான் என் பதிவை பதிவு செய்கிறேன்.

நந்தலாலா தமிழில் ஒரு உலக சினிமா என்று சொல்கிறார்களே?

ஒரு உலக சினிமாவின் கதையை திருடி எடுத்து, அந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியையும் அதைப் போல இன்னொரு காட்சியால் மாற்றி அமைத்து ,ஒவ்வொரு ஷாட்டையும் டேப் வைத்து அளந்து, அடிக்கு அடி படமெடுத்தால் அது தமிழில் உலக சினிமா போலத்தான் இருக்கும்.

அப்படி ஒரு கதையை திருடி படம் எடுத்தால் என்ன தவறு? இதை ஏன் யாரும் பொருட்படுத்த வேண்டும்?

கதையை திருடுவதற்குப் பின்னால் பல அழுக்குகள் அசிங்கங்கள் இருக்கின்றன. அவைகள் என்னெவென்று பார்க்கலாம்.

1.கிகிஜிரோ அழகான கதை தான். ஆனால் அதே நேரத்தில் யாராலும் உருவாக்க முடியாத கதை கிடையாது.இங்கிருக்கிற எழுத்தாளர்களை வைத்தோ அல்லது உதவி இயக்குனர்களை வைத்தோ இதே போல் தாக்கம் உண்டாக்கும் ஒரு கதை வேண்டும் என்று சொல்லி அதற்கு சில லட்சங்களை செலவளித்தால் கிகிஜிரோவைக் காட்டிலும் அழகான கதையை உண்டாக்க முடியும்.ஆனால் இங்கிருக்கிற சில இயக்குனர்களுக்கு , குடிக்கு சில லட்சங்களை செலவளிக்க முடியும். கூத்தியாள்களுக்கு சில லட்சங்களை செலவளிக்க முடியும். ஆனால் கதை என்கிற வஸ்த்துக்கு மட்டும் நயா பைசை செலவளிக்க முடியாது. கதை ஓசியில் கிடைக்க வேண்டும்.அல்லது உதவி இயக்குனர் அசந்த நேரம் பார்த்து உதவி இயக்குனரின் கதையை எடுத்துக் கொள்ள வேண்டும். அல்லது திருட்டு சிடிக்கள் பார்த்து ஏதாவது ஒரு படத்தின் கதையை அல்லது சில படங்களின் கதையை ஒன்று சேர்த்து ஓசியிலேயே கதையை உருவாக்கி விட வேண்டும். ஆனால் தயாரிப்பாளரிடம் கதை என்னுடையது என்று சொல்லி சில பத்து லட்சங்களை வாங்கி பாக்கெட்டில் போட்டுக் கொள்ள வேண்டும். சினிமாவில் சில இயக்குனர்களிடம் ஆண்டாண்டு காலமாக இருக்கும் இந்த புத்தியே மிஷ்கினையும் திருட வைத்திருக்கிறது.

2.சினிமாவில் ஒரு இயக்குனரிடம் கதை இல்லாத போது ஒரு இடைவெளி உண்டாகும் . அதன் வழியாகவே இன்னொரு புதிய இயக்குனர் ஒரு புதிய கதையுடன் உள்ளே நுழைய முடியும். இது தான் சினிமாவின் சுழற்ச்சி. இப்படி உண்டான இடைவெளியில் தான் சென்ற வருடங்களில் சுப்பிரமணியபுரம் சசி, பசங்க பாண்டியராஜன், வெண்ணிலா கபடி குழு சுசீந்திரன் போன்ற உண்மையும் நேர்மையும் கொண்ட புதிய இயக்குனர்கள் திரையுலகிற்கு வந்தார்கள். இப்படி உலக சினிமாவின் கதைகளைத் திருடி ஒருவர் படம் செய்து கொள்ளமுடியும் என்றால் எல்லா இயக்குனர்களும் ஆளுக்கொரு கதையை திருடி தொடர்ந்து படம் செய்து கொண்டே இருப்பார்கள். புதியவர்களுக்கும் நேர்மையானவர்களுக்கும் இடம் இல்லாமல் போய் ஒரு கட்டத்தில் திருட்டு தடியர்கள் மட்டுமே திரையுலகில் இருப்பார்கள்.

3.இயக்குனர் வசந்த பாலன் வெயில் அங்காடித்தெரு போன்ற இரு படங்களின் வெற்றியைத் தொடர்ந்து தனது மூன்றாவது படத்திற்கு சு.வெங்கடேசனின் காவல் கோட்டம் நாவலை உரிமை வாங்கி படமாக்கிக் கொண்டிருக்கிறார். அவர் ஒரு நல்ல உதாரணம். கதை இல்லாத இயக்குனர்கள் தமிழின் மேன்மையான படைப்புகளை படமாக்க முயற்ச்சி செய்ய வேண்டும் . அப்படி செய்தால் எழுத்தாளர்கள் பிச்சை எடுக்க வேண்டியிருக்காது(சாரு நிவேதிதா கவனிக்க). அது மட்டுமல்லாமல் உலகின் தலைசிறந்த படங்களில் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளும் இடம் பெறும்.

4.கிகிஜிரோவைக் காட்டிலும் மேலான கதைகள் வைத்திருக்கும் , மிஷ்கினைக் காட்டிலும் திறமை மிக்க புதிய இயக்குனர்கள் சினிமா வாய்ப்புகளுக்காக அழைந்து கொண்டிருக்கிறார்கள். சரியான வாய்ப்பு கிடைக்காமல் அவர்களுடைய வாழ்க்கையை வறுமை தின்று கொண்டிருக்கிறது. அவர்கள் துர்மரணங்களை சந்திக்கிறார்கள். மிஷ்கினின் இந்தக் காரியம் அந்த துர்மரணங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.

இது போல் நூறு காரணங்கள் சொல்ல முடியும்.


கிகிஜிரோவை தமிழ் பார்வையாளர்கள் பார்க்கப் போவதில்லை. கிகிஜிரோவையும் அதன் இயக்குனர் டிக்கேஷி கிட்டனோவையும் மிஷ்கின் தமிழில் அறிமுகப் படுத்தியிருக்கிறார். இதை ஒரு கலை சேவையாக ஏன் கருதக்கூடாது?


இதை கலைச்சேவையாக கருத முடியாது. அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.

1.இன்றைய தினத்தில் மிஷ்கின் அருவருக்கும் இரண்டு வார்த்தைகள் கிகிஜிரோ என்பதும் டிக்கேஷி கிட்டனோ என்பதும் ஆகும். இதனை நேர்காணல்களில் அவர் இந்தக் கேள்வியை சந்திக்கும் போது அவருடைய முகத்தைப் பார்த்து புரிந்து கொள்ள முடியும்.அவர் நேர்காணலில் கற்பிக்க முயற்சிப்பதெல்லாம் மூலப்படம் இவ்வளவு சிறப்பான படமில்லை, நான் எனது அறிவினாலேயே இதை சிறப்பாக்கியிருக்கிறேன் என்பதைத்தான். இது டிக்கேஷி கிட்டனோவிற்கு செய்கிற அவமரியாதையே.

2.இதைப் போல உலக சினிமாவின் கதையை திருடுகிறவர்கள் மூலப் படத்தில் இருக்கிற மேன்மையான விஷயங்களை கொன்றொழிக்கிறார்கள்.தமிழ் சூழலுக்கு ஏற்றார்போல் மாற்றுகிறேன் என்று சொல்லி அதன் ஆன்மாவை சிதைக்கிறார்கள்.திருடியது தெரியாமலிருப்பதற்காக அதன் தோற்றத்தை மூழியாக்குகிறார்கள். இறுதியாக இவர்களின் சிந்தனையில் இருக்கிற கீழ்மைகளை அதனுள் ஏற்றுகிறார்கள். (உதாரணத்திற்கு மகனை விட்டுச் சென்ற தாய் இழிவானவள், விபச்சாரம் செய்கிற பெண் அழுக்கானவள்)ஆக மொத்த த்தில் மூல படத்தில் இருக்கிற கமர்ஷியல் அயிட்டங்களை மட்டும் சுருட்டி எடுத்து ஒரு படம் உண்டாக்குகிறார்கள்.

3.இது லட்சம் லட்சமான சம்பளத்திற்காகவும் , புகழ் மாலைகளுக்காகவும் செய்யப்பட்ட காரியம்.

4.தமிழ் நாட்டில் யாரும் அந்தப் படத்தையெல்லாம் பார்த்து விட மாட்டார்கள் , அப்படியே ஒன்றிரண்டு பேர் பார்த்தாலும் அவர்களையெல்லம் சரிக்கட்டி விடலாம் என்ற எண்ணத்திலேயே இந்த திருட்டு முயற்ச்சி மேற்கொள்ளப்பட்டது . இதில் கலைச் சேவை எங்கிருந்து வருகிறது.

எழுத்தாளர்களாகிய பிரபஞ்சன், மனுஷ்யபுத்திரன், சாருநிவேதிதா, ஷாஜி இவர்களெல்லாம் இந்தப் படத்தையும் இந்த இயக்குனரையும் வானளாவப் புகழ்கிறார்களே?


இந்த சமூகத்தின் எல்லா விதமான இழிவுகளோடும் , அழுக்கோடும் , கசடுகளோடும் இந்த எழுத்தாளர்கள் சமரசம் செய்து கொண்டு சில பல வருடங்கள் ஆகி விட்டது.எப்படியாவது சினிமா என்கிற பணக்கப்பலில் ஒரு இடத்தைப் பிடித்து சில லட்சங்களை அள்ளி விடுவது அவர்களுடைய லட்சியம். அதனால் இவர்கள் மிஷ்கினை வானளாவப் புகழ்வதில் ஆச்சர்யப் படத்தேவையில்லை.

நானும் இதைப்போல ஒரு உலக சினிமாவை காப்பி எடுத்து படம் எடுத்தால் இந்த எழுத்தாளர்கள் என்னையும் வானளாவப் புகழ்வார்களா? இதற்கு நான் எந்த எழுத்தாளருக்கு என்ன செய்ய வேண்டும்?

ஜெயமோகன் , எஸ்.ராமகிருஷ்ணனுக்கு வசனம் எழுதும் வாய்ப்பு. மனுஷ்ய புத்திரனுக்கு வசனம் எழுதும் வாய்ப்பு அல்லது பாடல் எழுதும் வாய்ப்பு மற்றும் திரைக்கதை புத்தகத்தை உயிர்மையில் வெளியிடும் அனுமதி, சாருநிவேதிதாவுக்கு அவ்வப்பொழுது ஐயாயிரம் பத்தாயிரம் ஏதாவது ஒரு காட்சியில் தலை காட்ட வாய்ப்பு.பிரபஞ்சனுக்கு கொஞ்சம் தேநீர் கொஞ்சம் நட்பு.

நான் இவைகளைச் செய்தால் அவர்கள் என்னென்ன பதில் சேவைகளை நமக்கு செய்வார்கள்?


நீங்கள் தமிழில் ஒரு அட்சரம் கூட வாசித்திருக்க வேண்டியதில்லை. இவர்கள் முதல் கட்டமாக தமிழ் சினிமாவில் இலக்கிய ஞானம் உள்ள இயக்குனர் என்ற பட்டத்தை தருவார்கள். இரண்டாவதாக நீங்கள் அழைக்கும் போதெல்லாம் வந்து, மிகவும் அரிதான சிறு பத்திரிக்கை வார்த்தைகளில் உங்களை மேதை, ஞானி என்றெல்லாம் புகழ்வார்கள். கதையைத் திருடியது பற்றி உங்களுக்கு ஏதேனும் குற்ற உணர்வு இருந்தால் அதை மனோத த்துவ ரீதியாக, ஆன்மீக ரீதியாக , இலக்கிய ரீதியாக தொடர்ந்து உரையாடி சரி செய்வார்கள். படம் வெளியாகும் சமயம் இவர்களுடை இணைய தளங்களில் உங்கள் படத்தை தமிழின் முதல் சினிமா , உலக சினிமா என்றெல்லாம் புகழ்ந்து எழுதுவார்கள். அவர்கள் எழுதிக்கொண்டிருக்கிற பத்திரிக்கைகளில் உங்கள் படத்தை பற்றி எழுதி மார்க்கெட் செய்வார்கள். டிவி ஷோக்களில் பங்கெடுத்து உங்களுக்கே கூசும் அளவுக்கு உங்களைப் புகழ்வார்கள்.

முட்டாளாக அமர்ந்து கொண்டு எதிரில் தமிழின் தலை சிறந்த எழுத்தாளர்களை அமர வைத்து அவர்கள் புகழ்வதை கேட்டுக் கொண்டிருப்பது இருக்கிறதே ..அந்த சுகமே தனி.

எழுத்தாளர்களின் இந்த மாதிரியான காரியங்களுக்கு முன்னோடி எழுத்தாளர் யார்?

எஸ்ரா என்று பலரும் சொல்கிறார்கள்.

வசனம் எழுதும் வேலைக்கு நம் சிறு பத்திரிக்கை எழுத்தாளர்கள் இவ்வளவு தவியாய் தவிப்பதேன்?

முதல் காரணம் அது உழைப்பற்ற ஊதியம்.ஒரு படத்தின் பெரும்பான்மையான வசனங்களை உதவி இயக்குனர் மற்றும் இயக்குனரே எழுதி விடுவார்கள். ஒரு எழுத்தாளர் டிஸ்கஸ்ஸனில் பங்கெடுத்து அந்த பிராஜக்டுக்கு சம்பந்தம் இல்லாத விஷயங்களை வாய் ஓயாமல் பேசிக்கொண்டிருக்கலாம்¢. அந்த இயக்குனரை அவ்வப்பொழுது கீஸ்லாவ்ஸ்கி , டிக்கஸி கிட்டனோ இவர்களுடன் ஓப்பிட்டுப் பேசிக்கொண்டிருந்தால் போதும். பிராஜக்டுக்கு பத்து லட்சம் வரை சம்பளம் கிடைக்கும். இப்படி ஒரு பணம் கிடைக்கும் போது ஒருவர் என்ன காரியத்திற்கும் தயாராவது இந்த உலகில் சகஜம் தானே.

தமிழ் சிறுபத்திரிக்கை எழுத்தாளர்கள் இப்படி சில்லரை வேலை செய்து தான் சினிமாவில் இடம் பெற முடியுமா? வேறு வழியே இல்லையா?

இருக்கிறது.இவர்கள்¢ மலையாளத்தில் எம்.டி.வாசுதேவன் செய்வதைப் போல ஒரு சினிமாவிற்கான முழுநீள கதையை உருவாக்கி அதற்கு திரைக்கதை வசனம் எழுதி பணம் சம்பாதிக்கலாம். ஆனால் இவர்களால் மக்கள் விரும்பும் ¢ கதையை ஒரு போதும் சிந்திக்க முடியாது. அதனால் இப்படி ஏதேனும் உப வேலை செய்தே பணம் சம்பாதிக்க சபிக்கப் பட்டவர்களாகி விட்டார்கள்.

பிளாக்கர்கள் நிறைய பேர் படத்தை புகழ்ந்து எழுதியிருக்கிறார்களே?

இன்று சமூகத்தில் நேர்மை ஓரளவேனும் குடிகொண்டிருக்கும் இடங்களில் பிளாக்கும் ஒன்று. பிளாக்கர்களில் இந்தப் படத்தை புகழ்கிறவர்களை மூன்று பிரிவாகப் பிரிக்கலாம். முதல் பிரிவினர் மூலப் படத்தை பார்க்காவதவர்கள். ஆகையானலேயே இந்தப் படம் கொடுக்கிற ஆச்சர்யத்தில் இது எந்தப் படத்தில் இருந்து எடுக்கப் பட்டிருந்தால் என்ன எனக்கு இது சந்தோஷம் தருகிறது என்ற எண்ணத்தில் எழுதுகிறார்கள். இரண்டாவது பிரிவினர் திருடுவதுதான் இன்று எல்லோரும் செய்கிற காரியமாக ஆகி விட்டதே பின் ஏன் இன்னமும் நாம் அதைப் பொருட்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். அடுத்த வேலையைப் பார்ப்போம் என்ற முடிவிற்கு வந்தவர்கள். மூன்றாவது பிரிவினர் அது திருடப்பட்டது என்ற தகவலே தெரியாதவர்கள்.

இடதுசாரி எழுத்தாளர் பவா செல்லத்துரை கூட இந்தப் படத்தை வானளாவப் புகழ்ந்தாரே?

இடது சாரிகளிடம் இருந்தும் நேர்மை போய் விட்டது என்பதற்கான அடையாளம் தான் அது.அவர்கள் அவ்வப்போது நடத்துகிற கலை விழாவிற்கு சினிமா பிரபலங்கள் தேவைப் படுகிறார்கள். நேர்மை கீர்மை என்றெல்லாம் ஸ்ட்ரிக்டாக இருந்தால் அப்புறம் விழா நடத்த முடியாது. அதனாலேயே அவர்கள் கொஞ்சம் ஈவு சோவாக நடந்து கொள்ள முடிவு செய்திருக்கலாம்.

உதவி இயக்குனர்கள் நிறைய படிக்க வேண்டும் என்று மிஷ்கின் மீண்டும் மீண்டும் வலியுறுத்தகிறாரே.. பின்னணி என்னவாக இருக்கும்?

இரண்டு பின்னணிகளை நான் யூகிக்கிறேன்.

1. அவர்கள் புத்தகம் வாசிக்காமல் டிவிடி பார்த்துக் கொண்டிருப்பதால் தான் இவர் எடுக்கிற படங்கள் எல்லாம் எந்தப் படத்தின் மூலம் என்பதை கண்டு பிடித்து விடுகிறார்கள். அதைத் தவிர்ப்பதற்காக இருக்கலாம்.

2. இயக்கனர் ஆவதற்கு புத்தகம் வாசிக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி விட்டால் சினிமாவில் சாதிக்கலாம் என்று வருகிறவர்கள் தடி தடி புத்தகங்களைப் பார்த்து விட்டு இயக்குனராவது இவ்வளவு கடினமான காரியமா என்று யோசித்து வராமலே போக க் கூடும். இதன் மூலம் போட்டியாளர்களைத் தவிர்க்கலாம்.

நந்தலாலா ; அயோக்கியம்-மிஷ்கின் என்று தலைப்பு போட்டிருக்கிறீர்களே! அது என்ன அயோக்கியம்?

உலக சினிமாவின் கதையை அயோக்கியத் தனமாய் திருடி இயக்குபவர்கள் இனிமேல் வெறும் இயக்கம் என்று போடாமல் அயோக்கியம் என்று போட்டால் படம் பார்ப்பவர்கள் புரிந்து கொள்ள வசதியாக இருக்கும். இல்லையென்றால் பசங்க பட இயக்குனர் பாண்டியராஜன், வெண்ணிலா கபடி குழு சுசிந்திரன் போன்ற நேர்மையானவர்கள் வரியையிலேயே மிஷ்கினும் இடம் பெறும் ஆபத்து இருக்கிறது.அப்புறம் நல்லவர்களுக்கான எல்லா மரியாதையும் மிஷ்கினுக்கும் கிடைக்கும்

இப்படி செய்வதை தவறு என்று உணர்ந்து மிஷ்கினோ அல்லது அவருடன் இருக்கும் எழுத்தாளர்களோ தங்களை மாற்றிக் கொள்வதற்கு வாய்ப்பிருக்கிறதா?

மிஷ்கின் மாற மாட்டார். அவர் இதில் ருஷி கண்டு விட்டார். அவருடை முந்தைய படத்திற்கும் மூலப் படமாக ஒன்றைச் சொல்கிறார்கள். அவர் இப்பொழுது இயக்கி முடித்திருக்கும் யுத்தம் செய்க்கும் மூலப்படமாக ஒரு படத்தை சொல்லியிருக்கிறார்கள். அவர் கமலுக்கு இரண்டு மூன்று கதைகள் சொன்ன போது கூட , கமல் நீங்களே யோசித்து உருவாக்கும் கதை இருந்தால் சொல்லுங்கள், டிவிடி கதைகள் வேண்டாம் என்று சொல்லி அனுப்பியதாக பத்திரிக்கை கிசு கிசுக்களில் செய்தி வந்தது. எனவே பார்வையாளர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்காத வரை மிஷ்கின் மாறிக்கொள்ள வாய்ப்பில்லை.

எழுத்தாளர்கள் மாற்றிக் கொள்ள மாட்டார்கள்.

இங்கு யாருக்கும் வெட்கம் இல்லை.

ஆனந்த விகடனில் நந்தலாலா படத்திற்கு 45 மதிப்பெண்கள் கொடுத்திருக்கிறார்களே?

நான் படித்த பள்ளியில் ஒரு மாணவன் இன்னொரு மாணவனைப் பார்த்து எழுதி , அவன் கண்டுபிடிக்கப் பட்டால், ஆசிரியர் பேப்பரின் எல்லா பக்கங்களையும் அடித்து விட்டு malpractice என்று எழுதி முட்டை போட்டு விடுவார்கள்.அதன்பின் அந்த மாணவன் யாரையும் பார்த்து எழுதுவே மாட்டான்.

ஆபாசமாக இருந்தது என்பதற்காக பாய்ஸ் படத்திற்கு ச்சீ என்று விமர்சனம் எழுதி சினிமா படைப்பாளிகளுக்கு எச்சரிக்கை வழங்கியது ஆனந்த விகடன்.

அப்படி ஒரு முறையேனும் ஒரு படத்திற்கு malpractice என்று போட்டு பூச்சியம் போடுவதை ஆனந்த விகடன் செய்தால் இந்தக் கதைத் திருடர்களிடம் இருந்து சினிமா தப்பிக்கும்.

நந்தலாலவிற்கே malpractice என்று போட்டு பூச்சியம் மார்க் கொடுத்திருக்க வேண்டும் என்று தான் நான் விரும்புகிறேன்.

'சினிமாவிற்கு போன சிற்றிதழ் ஆட்கள்' உலக சினிமா திருட்டிற்கு என்ன ரியாகட் பண்ணுகிறார்கள்?

ஒரு 'பிறபழ' சிற்றிதழ் எழுத்தாளர் இருக்கிறார்.அவர் உலக சினிமாவின் அத்தாரிட்டி.

என் நண்பன் ஒருவன் உதவி இயக்குனன்.

அவன் அடிக்கடி அந்த எழுத்தாளரைப் பார்க்கப் போவான். போகும் போதெல்லாம் ' இந்தப் படத்தை அப்படியே தமிழில் எடுக்கலாம் ' 'இந்தப் படத்தை அப்படியே தமிழில் எடுக்கலாம் 'என்று ஏதாவது ஒரு டிவிடியை எடுத்துக் காட்டுவாராம்.

அவருடைய ரகசிய அறையில் டிவிடியை மூன்று பிரிவாகப் பிரித்து வைத்திருப்பாராம். ஒன்று கதை திருடுவதற்கு எடுத்துக் கொடுத்து வசனம் எழுதும் வாய்ப்பைப் பெற்றுக் கொள்வதற்கான படங்கள்.இரண்டு தான் இயக்குனராகும் போது எடுத்துப் பயன் படுத்திக் கொள்வதற்கான படங்கள். மூன்று நாவலாகத் தழுவி எழுதிக் கொள்வதற்கான படங்கள்.

அவன் அந்தப் பிரிவைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறான்.

ஆக சினிமாவிற்குப் போன சிற்றிதழ் ஆட்களில் சிலர் முதல் காரியமாக செய்வது உலக சினிமாவைக் காட்டிக் கொடுப்பது என்பதாகும். இரண்டாவதாக அந்த இயக்குனர் அந்தக் கதையை கற்பழிக்கும் விதமாக கூட்டிக் கொடுப்பது என்பதாகும். மூன்றாவதாக அதற்கு ஒரு சன்மானம் பெற்று பெருமிதமான வாழ்வு வாழ்வது என்பதாகும்.

சமீபத்தில் அந்த எழுத்தாளர் உலக சினிமா பற்றி எழுதிய ஒரு புத்தகத்தை புத்தகக் கடையில் பார்த்தேன். வசன வாய்ப்பிற்காக செய்து வைக்கப் பட்ட ஒரு பெரிய பிச்சைப் பாத்திரம் போல் இருந்தது அந்தப் புத்தகம்.

இயக்குனர் சேரன் மக்களை வாசிப்பவர், கதைகளை மக்களின் வாழ்க்கையிலிருந்து உருவாக்குபவர், ஆனால் அவரே மிஷ்கின் தமிழர்கள் கொண்டாட வேண்டிய இயக்குனர் என்கிறாரே! ஒருவேளை கதை திருட்டிற்கு அவரும் உடந்தையோ?

ஊர் பக்கம் செய்முறை அல்லது மொய் என்று ஒரு வழக்கம் இருக்கும். உங்கள் வீட்டு விஷேசத்திற்கு நான் வந்து 1001 மொய் செய்வேன்.நீங்கள் என் வீட்டின் விஷேசத்திற்கு வந்து 2001 மொய் செய்ய வேண்டும். அது போல ஒரு வழக்கம் இப்பொழுது சினிமாவிலும் உண்டாகியிருக்கிறது. சேரன் அவர்கள் படத்திற்கு போய் கும்மி அடிப்பார். அவர்கள் சேரன் படத்திற்கு வந்து கும்மி அடிப்பார்கள்.

இன்னொன்று சேரன் மக்களின் வாழ்க்கையிலிருந்து கதை உருவாக்குபவர் என்பதெல்லாம் தவமாய் தவமிருந்து க்கு முன்..அவருடைய வீட்டையும் அவருடைய சிந்தனையையும் இப்பொழுது திருட்டு டிவிடிக்கள் முற்றுகையிட ஆரம்பித்து விட்டன..அதனுடைய எச்சங்கள் தான் மாயக்கண்ணாடியும்.. பொக்கிஷமும்.

இப்பொழுதெல்லாம் பதிவர்கள் ப்ரி வியூ ஷோக்களுக்கு அழைக்கப் படுகிறார்கள்,சினிமாவைப் பற்றி பேச டிவி நிகழ்ச்சிகளுக்கு அழைக்கப் படுகிறார்கள்..இவையெல்லாம் எதைக் காட்டுகிறது?

பதிவர்கள் ஒரு நேர்மையான சமூகமாக அறியப்பட்டு வருகிறார்கள்.

ஊழல் அரசியல் வாதிகளிலிருருந்து ,போலிச் சாமியார்கள், பொய் இலக்கிய வாதிகள், பத்திரிக்கையாளர்கள், என சகலரும் இன்று பதிவர்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை விட பார்த்து அஞ்சிக் கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை.

யாருக்கும் அஞ்சாமல், யாருடைய அரசியலுக்கும் ஆட்படாமல் மனதில் பட்டதை உடனுக்குடன் எழுதி வரும் அவர்களுடைய பணி பலருக்கு கலக்கம் ஊட்டுவதாகவே இருந்து வருக்கிறது.

நம் சமூகத்தினுடைய காலக் கண்ணாடியாக பதிவுலகம் இருந்து கொண்டிருக்கிறது.

யார் கண் பட்டதோ, ஒரு தெளிந்த நன்னீரோடையாக இருந்த பதிலவுலகத்தில் விஷம் கலக்கும் விதமாக உண்மைத் தமிழன் அவர்கள் ப்ரிவ்யூ என்பதைத் துவக்கி வைத்தார். அவர் உண்மையில் நல்ல நோக்கத்தோடு தான் துவங்கி வைத்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக பதிவுலகத்தின் சீரழிவின் முதல் புள்ளி அது.

இப்பொழுது நந்தலாலா பற்றி பேசுவதற்கு மறுபடியும் பதிவர்கள் விஜய் டிவிக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.

பதிவர்களின் நேர்மையை தனது வியாபாரத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கும் திரையுலகின் முயற்ச்சி இது.

நாளை பதிவர்களும் தொடரந்து ப்ரிவ்யூ ஷோக்களுக்கு அழைக்கப் படலாம்.அவர்களுக்கும் கவர் வழங்கப் படலாம்.அவர்களும் படங்களின் குறைகளை குறை கூறுவதைக் குறைத்துக் கொண்டு புகழ் பாடத்துவங்கலாம்.

திரையுலகம் பதிவர்களை விழுங்கப் பார்க்கிறது. பதிவர்கள் இதைத் தவிர்ப்பது நல்லது.

விஜய் டிவியில், நமக்கு ஜப்பானிய சினிமா உலக சினிமா, ஜப்பானுக்கு நம்முடைய தமிழ் சினிமா உலக சினிமா என்ற ஒரு அரிய பொன்மொழியை பதிவர் கேபிள் சங்கர் உதிர்த்தாரே கவனித்தீர்களா?

அவர் சினிமா கட்டுரைகள் நிறைய எழுதுவதைப் பார்த்து, சினிமாவை கரைத்துக் குடித்தவர் போல என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.

அவருடைய உலக சினிமா பற்றிய பொன்மொழியை நேற்று டிவியில் பார்த்ததும் அவர் ஹோட்டல் ஹோட்டலாகப் போய் தின்பதற்குத்தான் லாயக்கு என்று தோன்றியது.

உலக சினிமா பற்றி எதுவும் அறியாதவர் அவர்.

உலக சினிமா என்றால் என்ன என்று பலர் பல கருத்துக்களை சொல்லியிருந்த போதிலும் இயக்குனர் அமீர் சொன்ன ஒரு வாசகம் என் மனதில் இன்னமும் மின்னிக் கொண்டிருக்கிறது.

ஒரு சினிமா, உலகில் யார் பார்த்தாலும் ஒரே தாக்கத்தை உண்டாக்க வேண்டும் . அப்படி ஒரு தாக்கத்தை உண்டாக்கினால் அது உலக சினிமா . பை சைக்கிள் தீவ்ஸ் திரைப்படத்தை உலகில் யார் பார்க்கும் போதும் அழவே செய்கிறார்கள். எனவே அது உலக சினிமா.

கேபிள் சங்கரால் இதைப் புரிந்து கொள்ள முடியாது.

Wednesday, December 8, 2010

நந்தலாலா- கேள்விகளும் பதில்களும்

(இவை ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கேள்விகளுடன் மேலும் சில கேள்வி பதில்கள் சேர்க்கப் பட்ட பதிவு. இந்தக் கேள்வி பதில்களை ஏற்கனவே வாசித்திருப்பவர்கள் கடைசியில் சேர்க்கப் பட்டிருக்கும் புதிய கேள்வி பதில்களுக்குச் செல்லவும். வாசிக்காதவர்கள் துவக்கத்திலிருந்து வாசிக்கலாம்)

நந்தலாலா - அயோக்கியம் மிஷ்கின்

உலக சினிமாவிற்கும் திருட்டுத் தனத்திற்கும் அப்படி என்ன தான் நமக்கு எட்டாத படி ரகசிய உறவோ.. உலக சினிமா பார்ப்பவர்கள் பெரும்பாலும் திருடர்களாகவே இருக்கிறார்கள் . அதுவும் வெற்றிக்கான வெறி புழுத்து வழியும் இந்தியா மாதிரி தேசங்களில் இந்த திருடர்களின் எண்ணிக்கை சற்று அதிகமாகவே இருக்கிறது.

இந்த வரிசையில் நாம் புதிதாக மிஷ்கினை சேர்க்க வேண்டும்.

வாழும் சினிமா மேதையான டிக்கேசி கிட்டனோவின் கிகிஜிரோ தமிழாக்கம் செய்யப்பட்டு நந்தலாலா என்ற பெயரில் ஓடிக்கொண்டிருக்கிறது. டிக்கேசி கிட்டனோவை இருட்டடிப்பு செய்து விட்டு மிஷ்கின் அந்தப் படத்திற்கான புகழ் மாலைகளை முன் நின்று வாங்கிக் கொண்டிருக்கிறார். இதைத் தாண்டி ஒரு சினிமா மேதையை யாரும் அவமதிக்க முடியாது.
மிஷ்கினின் இந்தக் காரியம் தமிழ் சிந்தனையாளர்களிடம் பல்வேறு கேள்விகளை உண்டாக்கியிருக்கிறது.

எனவே கேள்வி பதிலாகவே நான் என் பதிவை பதிவு செய்கிறேன்.

நந்தலாலா தமிழில் ஒரு உலக சினிமா என்று சொல்கிறார்களே?

ஒரு உலக சினிமாவின் கதையை திருடி எடுத்து, அந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியையும் அதைப் போல இன்னொரு காட்சியால் மாற்றி அமைத்து ,ஒவ்வொரு ஷாட்டையும் டேப் வைத்து அளந்து, அடிக்கு அடி படமெடுத்தால் அது தமிழில் உலக சினிமா போலத்தான் இருக்கும்.

அப்படி ஒரு கதையை திருடி படம் எடுத்தால் என்ன தவறு? இதை ஏன் யாரும் பொருட்படுத்த வேண்டும்?

கதையை திருடுவதற்குப் பின்னால் பல அழுக்குகள் அசிங்கங்கள் இருக்கின்றன. அவைகள் என்னெவென்று பார்க்கலாம்.

1.கிகிஜிரோ அழகான கதை தான். ஆனால் அதே நேரத்தில் யாராலும் உருவாக்க முடியாத கதை கிடையாது.இங்கிருக்கிற எழுத்தாளர்களை வைத்தோ அல்லது உதவி இயக்குனர்களை வைத்தோ இதே போல் தாக்கம் உண்டாக்கும் ஒரு கதை வேண்டும் என்று சொல்லி அதற்கு சில லட்சங்களை செலவளித்தால் கிகிஜிரோவைக் காட்டிலும் அழகான கதையை உண்டாக்க முடியும்.ஆனால் இங்கிருக்கிற சில இயக்குனர்களுக்கு , குடிக்கு சில லட்சங்களை செலவளிக்க முடியும். கூத்தியாள்களுக்கு சில லட்சங்களை செலவளிக்க முடியும். ஆனால் கதை என்கிற வஸ்த்துக்கு மட்டும் நயா பைசை செலவளிக்க முடியாது. கதை ஓசியில் கிடைக்க வேண்டும்.அல்லது உதவி இயக்குனர் அசந்த நேரம் பார்த்து உதவி இயக்குனரின் கதையை எடுத்துக் கொள்ள வேண்டும். அல்லது திருட்டு சிடிக்கள் பார்த்து ஏதாவது ஒரு படத்தின் கதையை அல்லது சில படங்களின் கதையை ஒன்று சேர்த்து ஓசியிலேயே கதையை உருவாக்கி விட வேண்டும். ஆனால் தயாரிப்பாளரிடம் கதை என்னுடையது என்று சொல்லி சில பத்து லட்சங்களை வாங்கி பாக்கெட்டில் போட்டுக் கொள்ள வேண்டும். சினிமாவில் சில இயக்குனர்களிடம் ஆண்டாண்டு காலமாக இருக்கும் இந்த புத்தியே மிஷ்கினையும் திருட வைத்திருக்கிறது.

2.சினிமாவில் ஒரு இயக்குனரிடம் கதை இல்லாத போது ஒரு இடைவெளி உண்டாகும் . அதன் வழியாகவே இன்னொரு புதிய இயக்குனர் ஒரு புதிய கதையுடன் உள்ளே நுழைய முடியும். இது தான் சினிமாவின் சுழற்ச்சி. இப்படி உண்டான இடைவெளியில் தான் சென்ற வருடங்களில் சுப்பிரமணியபுரம் சசி, பசங்க பாண்டியராஜன், வெண்ணிலா கபடி குழு சுசீந்திரன் போன்ற உண்மையும் நேர்மையும் கொண்ட புதிய இயக்குனர்கள் திரையுலகிற்கு வந்தார்கள். இப்படி உலக சினிமாவின் கதைகளைத் திருடி ஒருவர் படம் செய்து கொள்ளமுடியும் என்றால் எல்லா இயக்குனர்களும் ஆளுக்கொரு கதையை திருடி தொடர்ந்து படம் செய்து கொண்டே இருப்பார்கள். புதியவர்களுக்கும் நேர்மையானவர்களுக்கும் இடம் இல்லாமல் போய் ஒரு கட்டத்தில் திருட்டு தடியர்கள் மட்டுமே திரையுலகில் இருப்பார்கள்.

3.இயக்குனர் வசந்த பாலன் வெயில் அங்காடித்தெரு போன்ற இரு படங்களின் வெற்றியைத் தொடர்ந்து தனது மூன்றாவது படத்திற்கு சு.வெங்கடேசனின் காவல் கோட்டம் நாவலை உரிமை வாங்கி படமாக்கிக் கொண்டிருக்கிறார். அவர் ஒரு நல்ல உதாரணம். கதை இல்லாத இயக்குனர்கள் தமிழின் மேன்மையான படைப்புகளை படமாக்க முயற்ச்சி செய்ய வேண்டும் . அப்படி செய்தால் எழுத்தாளர்கள் பிச்சை எடுக்க வேண்டியிருக்காது(சாரு நிவேதிதா கவனிக்க). அது மட்டுமல்லாமல் உலகின் தலைசிறந்த படங்களில் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளும் இடம் பெறும்.

4.கிகிஜிரோவைக் காட்டிலும் மேலான கதைகள் வைத்திருக்கும் , மிஷ்கினைக் காட்டிலும் திறமை மிக்க புதிய இயக்குனர்கள் சினிமா வாய்ப்புகளுக்காக அழைந்து கொண்டிருக்கிறார்கள். சரியான வாய்ப்பு கிடைக்காமல் அவர்களுடைய வாழ்க்கையை வறுமை தின்று கொண்டிருக்கிறது. அவர்கள் துர்மரணங்களை சந்திக்கிறார்கள். மிஷ்கினின் இந்தக் காரியம் அந்த துர்மரணங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.

இது போல் நூறு காரணங்கள் சொல்ல முடியும்.


கிகிஜிரோவை தமிழ் பார்வையாளர்கள் பார்க்கப் போவதில்லை. கிகிஜிரோவையும் அதன் இயக்குனர் டிக்கேஷி கிட்டனோவையும் மிஷ்கின் தமிழில் அறிமுகப் படுத்தியிருக்கிறார். இதை ஒரு கலை சேவையாக ஏன் கருதக்கூடாது?


இதை கலைச்சேவையாக கருத முடியாது. அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.

1.இன்றைய தினத்தில் மிஷ்கின் அருவருக்கும் இரண்டு வார்த்தைகள் கிகிஜிரோ என்பதும் டிக்கேஷி கிட்டனோ என்பதும் ஆகும். இதனை நேர்காணல்களில் அவர் இந்தக் கேள்வியை சந்திக்கும் போது அவருடைய முகத்தைப் பார்த்து புரிந்து கொள்ள முடியும்.அவர் நேர்காணலில் கற்பிக்க முயற்சிப்பதெல்லாம் மூலப்படம் இவ்வளவு சிறப்பான படமில்லை, நான் எனது அறிவினாலேயே இதை சிறப்பாக்கியிருக்கிறேன் என்பதைத்தான். இது டிக்கேஷி கிட்டனோவிற்கு செய்கிற அவமரியாதையே.

2.இதைப் போல உலக சினிமாவின் கதையை திருடுகிறவர்கள் மூலப் படத்தில் இருக்கிற மேன்மையான விஷயங்களை கொன்றொழிக்கிறார்கள்.தமிழ் சூழலுக்கு ஏற்றார்போல் மாற்றுகிறேன் என்று சொல்லி அதன் ஆன்மாவை சிதைக்கிறார்கள்.திருடியது தெரியாமலிருப்பதற்காக அதன் தோற்றத்தை மூழியாக்குகிறார்கள். இறுதியாக இவர்களின் சிந்தனையில் இருக்கிற கீழ்மைகளை அதனுள் ஏற்றுகிறார்கள். (உதாரணத்திற்கு மகனை விட்டுச் சென்ற தாய் இழிவானவள், விபச்சாரம் செய்கிற பெண் அழுக்கானவள்)ஆக மொத்த த்தில் மூல படத்தில் இருக்கிற கமர்ஷியல் அயிட்டங்களை மட்டும் சுருட்டி எடுத்து ஒரு படம் உண்டாக்குகிறார்கள்.

3.இது லட்சம் லட்சமான சம்பளத்திற்காகவும் , புகழ் மாலைகளுக்காகவும் செய்யப்பட்ட காரியம்.

4.தமிழ் நாட்டில் யாரும் அந்தப் படத்தையெல்லாம் பார்த்து விட மாட்டார்கள் , அப்படியே ஒன்றிரண்டு பேர் பார்த்தாலும் அவர்களையெல்லம் சரிக்கட்டி விடலாம் என்ற எண்ணத்திலேயே இந்த திருட்டு முயற்ச்சி மேற்கொள்ளப்பட்டது . இதில் கலைச் சேவை எங்கிருந்து வருகிறது.

எழுத்தாளர்களாகிய பிரபஞ்சன், மனுஷ்யபுத்திரன், சாருநிவேதிதா, ஷாஜி இவர்களெல்லாம் இந்தப் படத்தையும் இந்த இயக்குனரையும் வானளாவப் புகழ்கிறார்களே?


இந்த சமூகத்தின் எல்லா விதமான இழிவுகளோடும் , அழுக்கோடும் , கசடுகளோடும் இந்த எழுத்தாளர்கள் சமரசம் செய்து கொண்டு சில பல வருடங்கள் ஆகி விட்டது.எப்படியாவது சினிமா என்கிற பணக்கப்பலில் ஒரு இடத்தைப் பிடித்து சில லட்சங்களை அள்ளி விடுவது அவர்களுடைய லட்சியம். அதனால் இவர்கள் மிஷ்கினை வானளாவப் புகழ்வதில் ஆச்சர்யப் படத்தேவையில்லை.

நானும் இதைப்போல ஒரு உலக சினிமாவை காப்பி எடுத்து படம் எடுத்தால் இந்த எழுத்தாளர்கள் என்னையும் வானளாவப் புகழ்வார்களா? இதற்கு நான் எந்த எழுத்தாளருக்கு என்ன செய்ய வேண்டும்?

ஜெயமோகன் , எஸ்.ராமகிருஷ்ணனுக்கு வசனம் எழுதும் வாய்ப்பு. மனுஷ்ய புத்திரனுக்கு வசனம் எழுதும் வாய்ப்பு அல்லது பாடல் எழுதும் வாய்ப்பு மற்றும் திரைக்கதை புத்தகத்தை உயிர்மையில் வெளியிடும் அனுமதி, சாருநிவேதிதாவுக்கு அவ்வப்பொழுது ஐயாயிரம் பத்தாயிரம் ஏதாவது ஒரு காட்சியில் தலை காட்ட வாய்ப்பு.பிரபஞ்சனுக்கு கொஞ்சம் தேநீர் கொஞ்சம் நட்பு.

நான் இவைகளைச் செய்தால் அவர்கள் என்னென்ன பதில் சேவைகளை நமக்கு செய்வார்கள்?


நீங்கள் தமிழில் ஒரு அட்சரம் கூட வாசித்திருக்க வேண்டியதில்லை. இவர்கள் முதல் கட்டமாக தமிழ் சினிமாவில் இலக்கிய ஞானம் உள்ள இயக்குனர் என்ற பட்டத்தை தருவார்கள். இரண்டாவதாக நீங்கள் அழைக்கும் போதெல்லாம் வந்து, மிகவும் அரிதான சிறு பத்திரிக்கை வார்த்தைகளில் உங்களை மேதை, ஞானி என்றெல்லாம் புகழ்வார்கள். கதையைத் திருடியது பற்றி உங்களுக்கு ஏதேனும் குற்ற உணர்வு இருந்தால் அதை மனோத த்துவ ரீதியாக, ஆன்மீக ரீதியாக , இலக்கிய ரீதியாக தொடர்ந்து உரையாடி சரி செய்வார்கள். படம் வெளியாகும் சமயம் இவர்களுடை இணைய தளங்களில் உங்கள் படத்தை தமிழின் முதல் சினிமா , உலக சினிமா என்றெல்லாம் புகழ்ந்து எழுதுவார்கள். அவர்கள் எழுதிக்கொண்டிருக்கிற பத்திரிக்கைகளில் உங்கள் படத்தை பற்றி எழுதி மார்க்கெட் செய்வார்கள். டிவி ஷோக்களில் பங்கெடுத்து உங்களுக்கே கூசும் அளவுக்கு உங்களைப் புகழ்வார்கள்.

முட்டாளாக அமர்ந்து கொண்டு எதிரில் தமிழின் தலை சிறந்த எழுத்தாளர்களை அமர வைத்து அவர்கள் புகழ்வதை கேட்டுக் கொண்டிருப்பது இருக்கிறதே ..அந்த சுகமே தனி.

எழுத்தாளர்களின் இந்த மாதிரியான காரியங்களுக்கு முன்னோடி எழுத்தாளர் யார்?

எஸ்ரா என்று பலரும் சொல்கிறார்கள்.

வசனம் எழுதும் வேலைக்கு நம் சிறு பத்திரிக்கை எழுத்தாளர்கள் இவ்வளவு தவியாய் தவிப்பதேன்?

முதல் காரணம் அது உழைப்பற்ற ஊதியம்.ஒரு படத்தின் பெரும்பான்மையான வசனங்களை உதவி இயக்குனர் மற்றும் இயக்குனரே எழுதி விடுவார்கள். ஒரு எழுத்தாளர் டிஸ்கஸ்ஸனில் பங்கெடுத்து அந்த பிராஜக்டுக்கு சம்பந்தம் இல்லாத விஷயங்களை வாய் ஓயாமல் பேசிக்கொண்டிருக்கலாம்¢. அந்த இயக்குனரை அவ்வப்பொழுது கீஸ்லாவ்ஸ்கி , டிக்கஸி கிட்டனோ இவர்களுடன் ஓப்பிட்டுப் பேசிக்கொண்டிருந்தால் போதும். பிராஜக்டுக்கு பத்து லட்சம் வரை சம்பளம் கிடைக்கும். இப்படி ஒரு பணம் கிடைக்கும் போது ஒருவர் என்ன காரியத்திற்கும் தயாராவது இந்த உலகில் சகஜம் தானே.

தமிழ் சிறுபத்திரிக்கை எழுத்தாளர்கள் இப்படி சில்லரை வேலை செய்து தான் சினிமாவில் இடம் பெற முடியுமா? வேறு வழியே இல்லையா?

இருக்கிறது.இவர்கள்¢ மலையாளத்தில் எம்.டி.வாசுதேவன் செய்வதைப் போல ஒரு சினிமாவிற்கான முழுநீள கதையை உருவாக்கி அதற்கு திரைக்கதை வசனம் எழுதி பணம் சம்பாதிக்கலாம். ஆனால் இவர்களால் மக்கள் விரும்பும் ¢ கதையை ஒரு போதும் சிந்திக்க முடியாது. அதனால் இப்படி ஏதேனும் உப வேலை செய்தே பணம் சம்பாதிக்க சபிக்கப் பட்டவர்களாகி விட்டார்கள்.

பிளாக்கர்கள் நிறைய பேர் படத்தை புகழ்ந்து எழுதியிருக்கிறார்களே?

இன்று சமூகத்தில் நேர்மை ஓரளவேனும் குடிகொண்டிருக்கும் இடங்களில் பிளாக்கும் ஒன்று. பிளாக்கர்களில் இந்தப் படத்தை புகழ்கிறவர்களை மூன்று பிரிவாகப் பிரிக்கலாம். முதல் பிரிவினர் மூலப் படத்தை பார்க்காவதவர்கள். ஆகையானலேயே இந்தப் படம் கொடுக்கிற ஆச்சர்யத்தில் இது எந்தப் படத்தில் இருந்து எடுக்கப் பட்டிருந்தால் என்ன எனக்கு இது சந்தோஷம் தருகிறது என்ற எண்ணத்தில் எழுதுகிறார்கள். இரண்டாவது பிரிவினர் திருடுவதுதான் இன்று எல்லோரும் செய்கிற காரியமாக ஆகி விட்டதே பின் ஏன் இன்னமும் நாம் அதைப் பொருட்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். அடுத்த வேலையைப் பார்ப்போம் என்ற முடிவிற்கு வந்தவர்கள். மூன்றாவது பிரிவினர் அது திருடப்பட்டது என்ற தகவலே தெரியாதவர்கள்.

இடதுசாரி எழுத்தாளர் பவா செல்லத்துரை கூட இந்தப் படத்தை வானளாவப் புகழ்ந்தாரே?

இடது சாரிகளிடம் இருந்தும் நேர்மை போய் விட்டது என்பதற்கான அடையாளம் தான் அது.அவர்கள் அவ்வப்போது நடத்துகிற கலை விழாவிற்கு சினிமா பிரபலங்கள் தேவைப் படுகிறார்கள். நேர்மை கீர்மை என்றெல்லாம் ஸ்ட்ரிக்டாக இருந்தால் அப்புறம் விழா நடத்த முடியாது. அதனாலேயே அவர்கள் கொஞ்சம் ஈவு சோவாக நடந்து கொள்ள முடிவு செய்திருக்கலாம்.

உதவி இயக்குனர்கள் நிறைய படிக்க வேண்டும் என்று மிஷ்கின் மீண்டும் மீண்டும் வலியுறுத்தகிறாரே.. பின்னணி என்னவாக இருக்கும்?

இரண்டு பின்னணிகளை நான் யூகிக்கிறேன்.

1. அவர்கள் புத்தகம் வாசிக்காமல் டிவிடி பார்த்துக் கொண்டிருப்பதால் தான் இவர் எடுக்கிற படங்கள் எல்லாம் எந்தப் படத்தின் மூலம் என்பதை கண்டு பிடித்து விடுகிறார்கள். அதைத் தவிர்ப்பதற்காக இருக்கலாம்.

2. இயக்கனர் ஆவதற்கு புத்தகம் வாசிக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி விட்டால் சினிமாவில் சாதிக்கலாம் என்று வருகிறவர்கள் தடி தடி புத்தகங்களைப் பார்த்து விட்டு இயக்குனராவது இவ்வளவு கடினமான காரியமா என்று யோசித்து வராமலே போக க் கூடும். இதன் மூலம் போட்டியாளர்களைத் தவிர்க்கலாம்.

நந்தலாலா ; அயோக்கியம்-மிஷ்கின் என்று தலைப்பு போட்டிருக்கிறீர்களே! அது என்ன அயோக்கியம்?

உலக சினிமாவின் கதையை அயோக்கியத் தனமாய் திருடி இயக்குபவர்கள் இனிமேல் வெறும் இயக்கம் என்று போடாமல் அயோக்கியம் என்று போட்டால் படம் பார்ப்பவர்கள் புரிந்து கொள்ள வசதியாக இருக்கும். இல்லையென்றால் பசங்க பட இயக்குனர் பாண்டியராஜன், வெண்ணிலா கபடி குழு சுசிந்திரன் போன்ற நேர்மையானவர்கள் வரியையிலேயே மிஷ்கினும் இடம் பெறும் ஆபத்து இருக்கிறது.அப்புறம் நல்லவர்களுக்கான எல்லா மரியாதையும் மிஷ்கினுக்கும் கிடைக்கும்

இப்படி செய்வதை தவறு என்று உணர்ந்து மிஷ்கினோ அல்லது அவருடன் இருக்கும் எழுத்தாளர்களோ தங்களை மாற்றிக் கொள்வதற்கு வாய்ப்பிருக்கிறதா?

மிஷ்கின் மாற மாட்டார். அவர் இதில் ருஷி கண்டு விட்டார். அவருடை முந்தைய படத்திற்கும் மூலப் படமாக ஒன்றைச் சொல்கிறார்கள். அவர் இப்பொழுது இயக்கி முடித்திருக்கும் யுத்தம் செய்க்கும் மூலப்படமாக ஒரு படத்தை சொல்லியிருக்கிறார்கள். அவர் கமலுக்கு இரண்டு மூன்று கதைகள் சொன்ன போது கூட , கமல் நீங்களே யோசித்து உருவாக்கும் கதை இருந்தால் சொல்லுங்கள், டிவிடி கதைகள் வேண்டாம் என்று சொல்லி அனுப்பியதாக பத்திரிக்கை கிசு கிசுக்களில் செய்தி வந்தது. எனவே பார்வையாளர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்காத வரை மிஷ்கின் மாறிக்கொள்ள வாய்ப்பில்லை.

எழுத்தாளர்கள் மாற்றிக் கொள்ள மாட்டார்கள்.

இங்கு யாருக்கும் வெட்கம் இல்லை.

ஆனந்த விகடனில் நந்தலாலா படத்திற்கு 45 மதிப்பெண்கள் கொடுத்திருக்கிறார்களே?

நான் படித்த பள்ளியில் ஒரு மாணவன் இன்னொரு மாணவனைப் பார்த்து எழுதி , அவன் கண்டுபிடிக்கப் பட்டால், ஆசிரியர் பேப்பரின் எல்லா பக்கங்களையும் அடித்து விட்டு malpractice என்று எழுதி முட்டை போட்டு விடுவார்கள்.அதன்பின் அந்த மாணவன் யாரையும் பார்த்து எழுதுவே மாட்டான்.

ஆபாசமாக இருந்தது என்பதற்காக பாய்ஸ் படத்திற்கு ச்சீ என்று விமர்சனம் எழுதி சினிமா படைப்பாளிகளுக்கு எச்சரிக்கை வழங்கியது ஆனந்த விகடன்.

அப்படி ஒரு முறையேனும் ஒரு படத்திற்கு malpractice என்று போட்டு பூச்சியம் போடுவதை ஆனந்த விகடன் செய்தால் இந்தக் கதைத் திருடர்களிடம் இருந்து சினிமா தப்பிக்கும்.

நந்தலாலவிற்கே malpractice என்று போட்டு பூச்சியம் மார்க் கொடுத்திருக்க வேண்டும் என்று தான் நான் விரும்புகிறேன்.

'சினிமாவிற்கு போன சிற்றிதழ் ஆட்கள்' உலக சினிமா திருட்டிற்கு என்ன ரியாகட் பண்ணுகிறார்கள்?

ஒரு 'பிறபழ' சிற்றிதழ் எழுத்தாளர் இருக்கிறார்.அவர் உலக சினிமாவின் அத்தாரிட்டி.

என் நண்பன் ஒருவன் உதவி இயக்குனன்.

அவன் அடிக்கடி அந்த எழுத்தாளரைப் பார்க்கப் போவான். போகும் போதெல்லாம் ' இந்தப் படத்தை அப்படியே தமிழில் எடுக்கலாம் ' 'இந்தப் படத்தை அப்படியே தமிழில் எடுக்கலாம் 'என்று ஏதாவது ஒரு டிவிடியை எடுத்துக் காட்டுவாராம்.

அவருடைய ரகசிய அறையில் டிவிடியை மூன்று பிரிவாகப் பிரித்து வைத்திருப்பாராம். ஒன்று கதை திருடுவதற்கு எடுத்துக் கொடுத்து வசனம் எழுதும் வாய்ப்பைப் பெற்றுக் கொள்வதற்கான படங்கள்.இரண்டு தான் இயக்குனராகும் போது எடுத்துப் பயன் படுத்திக் கொள்வதற்கான படங்கள். மூன்று நாவலாகத் தழுவி எழுதிக் கொள்வதற்கான படங்கள்.

அவன் அந்தப் பிரிவைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறான்.

ஆக சினிமாவிற்குப் போன சிற்றிதழ் ஆட்களில் சிலர் முதல் காரியமாக செய்வது உலக சினிமாவைக் காட்டிக் கொடுப்பது என்பதாகும். இரண்டாவதாக அந்த இயக்குனர் அந்தக் கதையை கற்பழிக்கும் விதமாக கூட்டிக் கொடுப்பது என்பதாகும். மூன்றாவதாக அதற்கு ஒரு சன்மானம் பெற்று பெருமிதமான வாழ்வு வாழ்வது என்பதாகும்.

சமீபத்தில் அந்த எழுத்தாளர் உலக சினிமா பற்றி எழுதிய ஒரு புத்தகத்தை புத்தக க் கடையில் பார்த்தேன். வசன வாய்ப்பிற்காக செய்து வைக்கப் பட்ட ஒரு பெரிய பிச்சைப் பாத்திரம் போல் இருந்தது.

Wednesday, December 1, 2010

நந்தலாலா-அயோக்கியம் மிஷ்கின்

உலக சினிமாவிற்கும் திருட்டுத் தனத்திற்கும் அப்படி என்ன தான் நமக்கு எட்டாத படி ரகசிய உறவோ.. உலக சினிமா பார்ப்பவர்கள் பெரும்பாலும் திருடர்களாகவே இருக்கிறார்கள் . அதுவும் வெற்றிக்கான வெறி புழுத்து வழியும் இந்தியா மாதிரி தேசங்களில் இந்த திருடர்களின் எண்ணிக்கை சற்று அதிகமாகவே இருக்கிறது.

இந்த வரிசையில் நாம் புதிதாக மிஷ்கினை சேர்க்க வேண்டும்.

வாழும் சினிமா மேதையான டிக்கேசி கிட்டனோவின் கிகிஜிரோ தமிழாக்கம் செய்யப்பட்டு நந்தலாலா என்ற பெயரில் ஓடிக்கொண்டிருக்கிறது. டிக்கேசி கிட்டனோவை இருட்டடிப்பு செய்து விட்டு மிஷ்கின் அந்தப் படத்திற்கான புகழ் மாலைகளை முன் நின்று வாங்கிக் கொண்டிருக்கிறார். இதைத் தாண்டி ஒரு சினிமா மேதையை யாரும் அவமதிக்க முடியாது.
மிஷ்கினின் இந்தக் காரியம் தமிழ் சிந்தனையாளர்களிடம் பல்வேறு கேள்விகளை உண்டாக்கியிருக்கிறது.

எனவே கேள்வி பதிலாகவே நான் என் பதிவை பதிவு செய்கிறேன்.

நந்தலாலா தமிழில் ஒரு உலக சினிமா என்று சொல்கிறார்களே?

ஒரு உலக சினிமாவின் கதையை திருடி எடுத்து, அந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியையும் அதைப் போல இன்னொரு காட்சியால் மாற்றி அமைத்து ,ஒவ்வொரு ஷாட்டையும் டேப் வைத்து அளந்து, அடிக்கு அடி படமெடுத்தால் அது தமிழில் உலக சினிமா போலத்தான் இருக்கும்.

அப்படி ஒரு கதையை திருடி படம் எடுத்தால் என்ன தவறு? இதை ஏன் யாரும் பொருட்படுத்த வேண்டும்?

கதையை திருடுவதற்குப் பின்னால் பல அழுக்குகள் அசிங்கங்கள் இருக்கின்றன.

1.கிகிஜிரோ அழகான கதை தான். ஆனால் அதே நேரத்தில் யாராலும் உருவாக்க முடியாத கதை கிடையாது.இங்கிருக்கிற எழுத்தாளர்களை வைத்தோ அல்லது உதவி இயக்குனர்களை வைத்தோ இதே போல் தாக்கம் உண்டாக்கும் ஒரு கதை வேண்டும் என்று சொல்லி அதற்கு சில லட்சங்களை செலவளித்தால் கிகிஜிரோவைக் காட்டிலும் அழகான கதையை உண்டாக்க முடியும்.ஆனால் இங்கிருக்கிற சில இயக்குனர்களுக்கு , குடிக்கு சில லட்சங்களை செலவளிக்க முடியும். கூத்தியாள்களுக்கு சில லட்சங்களை செலவளிக்க முடியும். ஆனால் கதை என்கிற வஸ்த்துக்கு மட்டும் நயா பைசை செலவளிக்க முடியாது. கதை ஓசியில் கிடைக்க வேண்டும்.அல்லது உதவி இயக்குனர் அசந்த நேரம் பார்த்து உதவி இயக்குனரின் கதையை எடுத்துக் கொள்ள வேண்டும். அல்லது திருட்டு சிடிக்கள் பார்த்து ஏதாவது ஒரு படத்தின் கதையை அல்லது சில படங்களின் கதையை ஒன்று சேர்த்து ஓசியிலேயே கதையை உருவாக்கி விட வேண்டும். ஆனால் தயாரிப்பாளரிடம் கதை என்னுடையது என்று சொல்லி சில பத்து லட்சங்களை வாங்கி பாக்கெட்டில் போட்டுக் கொள்ள வேண்டும். சினிமாவில் சில இயக்குனர்களிடம் ஆண்டாண்டு காலமாக இருக்கும் இந்த புத்தியே மிஷ்கினையும் திருட வைத்திருக்கிறது.

2.சினிமாவில் ஒரு இயக்குனரிடம் கதை இல்லாத போது ஒரு இடைவெளி உண்டாகும் . அதன் வழியாகவே இன்னொரு புதிய இயக்குனர் ஒரு புதிய கதையுடன் உள்ளே நுழைய முடியும். இது தான் சினிமாவின் சுழற்ச்சி. இப்படி உண்டான இடைவெளியில் தான் சென்ற வருடங்களில் சுப்பிரமணியபுரம் சசி, பசங்க பாண்டியராஜன், வெண்ணிலா கபடி குழு சுசீந்திரன் போன்ற உண்மையும் நேர்மையும் கொண்ட புதிய இயக்குனர்கள் திரையுலகிற்கு வந்தார்கள். இப்படி உலக சினிமாவின் கதைகளைத் திருடி ஒருவர் படம் செய்து கொள்ளமுடியும் என்றால் எல்லா இயக்குனர்களும் ஆளுக்கொரு கதையை திருடி தொடர்ந்து படம் செய்து கொண்டே இருப்பார்கள். புதியவர்களுக்கும் நேர்மையானவர்களுக்கும் இடம் இல்லாமல் போய் ஒரு கட்டத்தில் திருட்டு தடியர்கள் மட்டுமே திரையுலகில் இருப்பார்கள்.

3.இயக்குனர் வசந்த பாலன் வெயில் அங்காடித்தெரு போன்ற இரு படங்களின் வெற்றியைத் தொடர்ந்து தனது மூன்றாவது படத்திற்கு சு.வெங்கடேசனின் காவல் கோட்டம் நாவலை படமாக்கிக் கொண்டிருக்கிறார். அவர் ஒரு நல்ல உதாரணம். கதை இல்லாத இயக்குனர்கள் தமிழின் மேன்மையான படைப்புகளை படமாக்க முயற்ச்சி செய்ய வேண்டும் . அப்படி செய்தால் எழுத்தாளர்கள் பிச்சை எடுக்க வேண்டியிருக்காது(சாரு நிவேதிதா கவனிக்க). அது மட்டுமல்லாமல் உலகின் தலைசிறந்த படங்களில் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளும் இடம் பெறும்.

4.கிகிஜிரோவைக் காட்டிலும் மேலான கதைகள் வைத்திருக்கும் , மிஷ்கினைக் காட்டிலும் திறமை மிக்க புதிய இயக்குனர்கள் சினிமா வாய்ப்புகளுக்காக அழைந்து கொண்டிருக்கிறார்கள். சரியான வாய்ப்பு கிடைக்காமல் அவர்களுடைய வாழ்க்கையை வறுமை தின்று கொண்டிருக்கிறது. அவர்கள் துர்மரணங்களை சந்திக்கிறார்கள். மிஷ்கினின் இந்தக் காரியம் அந்த துர்மரணங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.

இது போல் நூறு காரணங்கள் சொல்ல முடியும்.

கிகிஜிரோவை தமிழ் பார்வையாளர்கள் பார்க்கப் போவதில்லை. கிகிஜிரோவையும் அதன் இயக்குனர் டிக்கேஷி கிட்டனோவையும் மிஷ்கின் தமிழில் அறிமுகப் படுத்தியிருக்கிறார். இதை ஒரு கலை சேவையாக ஏன் கருதக்கூடாது?

இதை கலைச்சேவையாக கருத முடியாது. அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.

1.மிஷ்கின் இன்று அருவருக்கும் இரண்டு வார்த்தைகள் கிகிஜிரோ என்பதும் டிக்கேஷி கிட்டனோ என்பதும் ஆகும். இதனை நேர்காணல்களில் அவர் இந்தக் கேள்வியை சந்திக்கும் போது அவருடைய முகத்தைப் பார்த்து புரிந்து கொள்ள முடியும்.அவர் நேர்காணலில் கற்பிக்க முயற்சிப்பதெல்லாம் மூலப்படம் இவ்வளவு சிறப்பான படமில்லை, நான் எனது அறிவினாலேயே இதை சிறப்பாக்கியிருக்கிறேன் என்பதைத்தான். இது டிக்கேஷி கிட்டனோவிற்கு செய்கிற அவமரியாதையே.

2.இதைப் போல உலக சினிமாவின் கதையை திருடுகிறவர்கள் மூலப் படத்தில் இருக்கிற மேன்மையான விஷயங்களை கொன்றொழிக்கிறார்கள்.தமிழ் சூழலுக்கு ஏற்றார்போல் மாற்றுகிறேன் என்று சொல்லி கொஞ்சம் சிதைக்கிறார்கள்.திருடியது தெரியாமலிருப்பதற்காக சில விஷயங்களை மூழியாக்குகிறார்கள். இறுதியாக இவர்களின் சிந்தனையில் இருக்கிற கீழ்மைகளை அதனுள் ஏற்றுகிறார்கள். (உதாரணத்திற்கு மகனை விட்டுச் சென்ற தாய் இழிவானவள், விபச்சாரம் செய்கிற பெண் அழுக்கானவள்)ஆக மொத்த த்தில் மூல படத்தில் இருக்கிற கமர்ஷியல் அயிட்டங்களை மட்டும் சுருட்டி எடுத்து ஒரு படம் உண்டாக்குகிறார்கள்.

3.இது லட்சம் லட்சமான சம்பளத்திற்காகவும் , புகழ் மாலைகளுக்காகவும் செய்யப்பட்ட காரியம்.

4.தமிழ் நாட்டில் யாரும் அந்தப் படத்தையெல்லாம் பார்த்து விட மாட்டார்கள் , அப்படியே ஒன்றிரண்டு பேர் பார்த்தாலும் அவர்களையெல்லம் சரிக்கட்டி விடலாம் என்ற எண்ணத்திலேயே இந்த திருட்டு முயற்ச்சி மேற்கொள்ளப்பட்டது . இதில் கலைச் சேவை எங்கிருந்து வருகிறது.

எழுத்தாளர்களாகிய பிரபஞ்சன், மனுஷ்யபுத்திரன், சாருநிவேதிதா, ஷாஜி இவர்களெல்லாம் இந்தப் படத்தையும் இந்த இயக்குனரையும் வானளாவப் புகழ்கிறார்களே?

இந்த சமூகத்தின் எல்லா விதமான இழிவுகளோடும் , அழுக்கோடும் , கசடுகளோடும் இந்த எழுத்தாளர்கள் சமரசம் செய்து கொண்டு சில பல வருடங்கள் ஆகி விட்டது.எப்படியாவது சினிமா என்கிற பணக்கப்பலில் ஒரு இடத்தைப் பிடித்து சில லட்சங்களை அள்ளி விடுவது அவர்களுடைய லட்சியம். அதனால் இவர்கள் மிஷ்கினை வானளாவப் புகழ்வதில் ஆச்சர்யப் படத்தேவையில்லை.

நானும் இதைப்போல ஒரு உலக சினிமாவை காப்பி எடுத்து படம் எடுத்தால் இந்த எழுத்தாளர்கள் என்னையும் வானளாவப் புகழ்வார்களா? இதற்கு நான் எந்த எழுத்தாளருக்கு என்ன செய்ய வேண்டும்?

ஜெயமோகன் , எஸ்.ராமகிருஷ்ணனுக்கு வசனம் எழுதும் வாய்ப்பு. மனுஷ்ய புத்திரனுக்கு வசனம் எழுதும் வாய்ப்பு அல்லது பாடல் எழுதும் வாய்ப்பு மற்றும் திரைக்கதை புத்தகத்தை உயிர்மையில் வெளியிடும் அனுமதி, சாருநிவேதிதாவுக்கு அவ்வப்பொழுது ஐயாயிரம் பத்தாயிரம் ஏதாவது ஒரு காட்சியில் தலை காட்ட வாய்ப்பு.பிரபஞ்சனுக்கு கொஞ்சம் தேநீர் கொஞ்சம் நட்பு.

நான் இவைகளைச் செய்தால் அவர்கள் என்னென்ன பதில் சேவைகளை நமக்கு செய்வார்கள்?

நீங்கள் தமிழில் ஒரு அட்சரம் கூட வாசித்திருக்க வேண்டியதில்லை. இவர்கள் முதல் கட்டமாக தமிழ் சினிமாவில் இலக்கிய ஞானம் உள்ள இயக்குனர் என்ற பட்டத்தை தருவார்கள். இரண்டாவதாக நீங்கள் அழைக்கும் போதெல்லாம் வந்து, மிகவும் அரிதான சிறு பத்திரிக்கை வார்த்தைகளில் உங்களை மேதை, ஞானி என்றெல்லாம் புகழ்வார்கள். கதையைத் திருடியது பற்றி உங்களுக்கு ஏதேனும் குற்ற உணர்வு இருந்தால் அதை மனோத த்துவ ரீதியாக, ஆன்மீக ரீதியாக , இலக்கிய ரீதியாக தொடர்ந்து உரையாடி சரி செய்வார்கள். படம் வெளியாகும் சமயம் இவர்களுடை இணைய தளங்களில் உங்கள் படத்தை தமிழின் முதல் சினிமா , உலக சினிமா என்றெல்லாம் புகழ்ந்து எழுதுவார்கள். அவர்கள் எழுதிக்கொண்டிருக்கிற பத்திரிக்கைகளில் உங்கள் படத்தை பற்றி எழுதி மார்க்கெட் செய்வார்கள். டிவி ஷோக்களில் பங்கெடுத்து உங்களுக்கே கூசும் அளவுக்கு உங்களைப் புகழ்வார்கள்.

முட்டாளாக அமர்ந்து கொண்டு எதிரில் தமிழின் தலை சிறந்த எழுத்தாளர்களை அமர வைத்து அவர்கள் புகழ்வதை கேட்டுக் கொண்டிருப்பது இருக்கிறதே ..அந்த சுகமே தனி.

எழுத்தாளர்களின் இந்த மாதிரியான காரியங்களுக்கு முன்னோடி எழுத்தாளர் யார்?

எஸ்ரா என்று பலரும் சொல்கிறார்கள்.

வசனம் எழுதும் வேலைக்கு நம் சிறு பத்திரிக்கை எழுத்தாளர்கள் இவ்வளவு தவியாய் தவிப்பதேன்?

முதல் காரணம் அது உழைப்பற்ற ஊதியம்.ஒரு படத்தின் பெரும்பான்மையான வசனங்களை உதவி இயக்குனர் மற்றும் இயக்குனரே எழுதி விடுவார்கள். ஒரு எழுத்தாளர் டிஸ்கஸ்ஸனில் பங்கெடுத்து அந்த பிராஜக்டுக்கு சம்பந்தம் இல்லாத விஷயங்களை வாய் ஓயாமல் பேசிக்கொண்டிருக்கலாம்¢. அந்த இயக்குனரை அவ்வப்பொழுது கீஸ்லாவ்ஸ்கி , டிக்கஸி கிட்டனோ இவர்களுடன் ஓப்பிட்டுப் பேசிக்கொண்டிருந்தால் போதும். பிராஜக்டுக்கு பத்து லட்சம் வரை சம்பளம் கிடைக்கும். இப்படி ஒரு பணம் கிடைக்கும் போது ஒருவர் என்ன காரியத்திற்கும் தயாராவது இந்த உலகில் சகஜம் தானே.

தமிழ் சிறுபத்திரிக்கை எழுத்தாளர்கள் இப்படி சில்லரை வேலை செய்து தான் சினிமாவில் இடம் பெற முடியுமா? வேறு வழியே இல்லையா?

இருக்கிறது.இவர்கள்¢ மலையாளத்தில் எம்.டி.வாசுதேவன் செய்வதைப் போல ஒரு சினிமாவிற்கான முழுநீள கதையை உருவாக்கி அதற்கு திரைக்கதை வசனம் எழுதி பணம் சம்பாதிக்கலாம். ஆனால் இவர்களால் மக்கள் விரும்பும் ¢ கதையை ஒரு போதும் சிந்திக்க முடியாது. அதனால் இப்படி ஏதேனும் உப வேலை செய்தே பணம் சம்பாதிக்க சபிக்கப் பட்டவர்களாகி விட்டார்கள்.

பிளாக்கர்கள் நிறைய பேர் படத்தை புகழ்ந்து எழுதியிருக்கிறார்களே?

இன்று சமூகத்தில் நேர்மை ஓரளவேனும் குடிகொண்டிருக்கும் இடங்களில் பிளாக்கும் ஒன்று. பிளாக்கர்களில் இந்தப் படத்தை புகழ்கிறவர்களை மூன்று பிரிவாகப் பிரிக்கலாம். முதல் பிரிவினர் மூலப் படத்தை பார்க்காவதவர்கள். ஆகையானலேயே இந்தப் படம் கொடுக்கிற ஆச்சர்யத்தில் இது எந்தப் படத்தில் இருந்து எடுக்கப் பட்டிருந்தால் என்ன எனக்கு இது சந்தோஷம் தருகிறது என்ற எண்ணத்தில் எழுதுகிறார்கள். இரண்டாவது பிரிவினர் திருடுவதுதான் இன்று எல்லோரும் செய்கிற காரியமாக ஆகி விட்டதே பின் ஏன் இன்னமும் நாம் அதைப் பொருட்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். அடுத்த வேலையைப் பார்ப்போம் என்ற முடிவிற்கு வந்தவர்கள். மூன்றாவது பிரிவினர் அது திருடப்பட்டது என்ற தகவலே தெரியாதவர்கள்.

இடதுசாரி எழுத்தாளர் பவா செல்லத்துரை கூட இந்தப் படத்தை வானளாவப் புகழ்ந்தாரே?

இடது சாரிகளிடம் இருந்தும் நேர்மை போய் விட்டது என்பதற்கான அடையாளம் தான் அது.அவர்கள் அவ்வப்போது நடத்துகிற கலை விழாவிற்கு சினிமா பிரபலங்கள் தேவைப் படுகிறார்கள். நேர்மை கீர்மை என்றெல்லாம் ஸ்ட்ரிக்டாக இருந்தால் அப்புறம் விழா நடத்த முடியாது. அதனாலேயே அவர்கள் கொஞ்சம் ஈவு சோவாக நடந்து கொள்ள முடிவு செய்திருக்கலாம்.

உதவி இயக்குனர்கள் நிறைய படிக்க வேண்டும் என்று மிஷ்கின் மீண்டும் மீண்டும் வலியுறுத்தகிறாரே.. பின்னணி என்னவாக இருக்கும்?

இரண்டு பின்னணிகளை நான் யூகிக்கிறேன்.

1. அவர்கள் புத்தகம் வாசிக்காமல் டிவிடி பார்த்துக் கொண்டிருப்பதால் தான் இவர் எடுக்கிற படங்கள் எல்லாம் எந்தப் படத்தின் மூலம் என்பதை கண்டு பிடித்து விடுகிறார்கள். அதைத் தவிர்ப்பதற்காக இருக்கலாம்.

2. இயக்கனர் ஆவதற்கு புத்தகம் வாசிக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி விட்டால் சினிமாவில் சாதிக்கலாம் என்று வருகிறவர்கள் தடி தடி புத்தகங்களைப் பார்த்து விட்டு இயக்குனராவது இவ்வளவு கடினமான காரியமா என்று யோசித்து வராமலே போக க் கூடும். இதன் மூலம் போட்டியாளர்களைத் தவிர்க்கலாம்.

நந்தலாலா ; அயோக்கியம்-மிஷ்கின் என்று தலைப்பு போட்டிருக்கிறீர்களே! அது என்ன அயோக்கியம்?

உலக சினிமாவின் கதையை அயோக்கியத் தனமாய் திருடி இயக்குபவர்கள் இனிமேல் வெறும் இயக்கம் என்று போடாமல் அயோக்கியம் என்று போட்டால் படம் பார்ப்பவர்கள் புரிந்து கொள்ள வசதியாக இருக்கும். இல்லையென்றால் பசங்க பட இயக்குனர் பாண்டியராஜன், வெண்ணிலா கபடி குழு சுசிந்திரன் போன்ற நேர்மையானவர்கள் வரியையிலேயே மிஷ்கினும் இடம் பெறும் ஆபத்து இருக்கிறது.அப்புறம் நல்லவர்களுக்கான எல்லா மரியாதையும் மிஷ்கினுக்கும் கிடைக்கும்

இப்படி செய்வதை தவறு என்று உணர்ந்து மிஷ்கினோ அல்லது அவருடன் இருக்கும் எழுத்தாளர்களோ தங்களை மாற்றிக் கொள்வதற்கு வாய்ப்பிருக்கிறதா?

மிஷ்கின் மாற மாட்டார். அவர் இதில் ருஷி கண்டு விட்டார். அவருடை முந்தைய படத்திற்கும் மூலப் படமாக ஒன்றைச் சொல்கிறார்கள். அவர் இப்பொழுது இயக்கி முடித்திருக்கும் யுத்தம் செய்க்கும் மூலப்படமாக ஒரு படத்தை சொல்லியிருக்கிறார்கள். அவர் கமலுக்கு இரண்டு மூன்று கதைகள் சொன்ன போது கூட , கமல் நீங்களே யோசித்து உருவாக்கும் கதை இருந்தால் சொல்லுங்கள், டிவிடி கதைகள் வேண்டாம் என்று சொல்லி அனுப்பியதாக பத்திரிக்கை கிசு கிசுக்களில் செய்தி வந்தது. எனவே பார்வையாளர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்காத வரை மிஷ்கின் மாறிக்கொள்ள வாய்ப்பில்லை.

எழுத்தாளர்கள் மாற்றிக் கொள்ள மாட்டார்கள்.

இங்கு யாருக்கும் வெட்கம் இல்லை.

Monday, May 31, 2010

இலங்கைத்தமிழர் பிரச்சினைக்கு 15 நிமிடத்தில் தீர்வு; பிரகாஷ் காரட்டின் சாகசம்

கடந்த நான்கு ஐந்து தினங்களாக சென்னை அரசியல் ஆர்வலர்களிடையே பெரும் பரபரப்பு நிலவிக் கொண்டிருந்தது.எஸ் எம் எஸ்களும் இமெயில்களும் பறந்த வண்ணம் இருந்தன.
சிபிஎம்மின் தமிழ் மாநிலக்குழு ‘ இலங்கைத்தமிழர் பிரச்சினைக்கு தீர்வு’ என்ற தலைப்பில் ஒரு கருந்தரங்கம் நடத்த இருப்பதாக அறிவித்தது தான் இந்த பரப்பிற்கு காரணம். அதிலும் அவர்களுடைய பொதுச்செயலாளர் பிரகாஷ்காரட்டே நேரடியாக வந்து அந்தத் தீர்வை உரையாக வழங்கப் போகிறார் என்ற தகவலும் பரபரப்பிற்கு கூடுதல் காரணம்.

என்னையும் இந்த பரபரப்பு தொற்றிக் கொண்டது.

ஏனென்றால் இதுவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை ஈழத்தமிழர் பிரச்சினை சம்பந்தமாக எதையும் தெளிவாக பதிவு செயததில்லை. ஆங்காங்கே கிடைக்கிற பதிவுகள் எல்லாம் மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியதர வர்க்க தொழிற்சங்கத் தலைவர்கள் கட்சித் தலைமையின் விருப்பத்திற்கேற்ப தான்தோன்றிகளாக தனக்குத் தோன்றும் எல்லாவற்றையும் பதிவு செய்ததுதான். அவர்களில் பலர் சிங்கள அரசு உலகின் புனிதமான அரசுகளில் ஒன்று , இந்த விடுதலைப் புலிகள்தான் அங்கிருக்கிற அனைத்துப் பிரச்சினைகளுக்கும் காரணம் என்ற ரீதியிலேயே தங்களுடைய பதிவுகளை செய்திருக்கிறார்கள்.

அவர்களை குறை சொல்லி ஒன்றும் பயனில்லை. அவர்கள் அப்படியே வளர்ந்து விட்டார்கள்.

கட்சி ஒரு முடிவை தீர்க்கமாக சொல்லி விட்டால் அதையே கிளிப்பிள்ளைப் போல சொல்லிக் கொண்டிருப்பார்கள். கட்சி எதையும் திட்டவட்டமாக சொல்லாத கால கட்டத்தில் கட்சியின் உள் மனதை புரிந்து கொண்டு ஆளுக்கொன்றாக கத்திக் கொண்டிருப்பார்கள். ஈழப் பிரச்சினையிலும் அவர்கள் அவ்வாறுதான் ஒரு கையறு நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். பாவம் சிங்கள அரசை ஒரு இனவாத அரசு என்றாவது சொல்லலாமா என்பது கூட அவர்களுக்குத் தெரியவில்லை. விடுதலைப் புலிகளை எதிர்க்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் ராஜபக்ஷேவை இயேசு கிறிஸ்த்து என்று சொல்லும் இடம் வரை சென்றார்கள். இரயாகரனையும் ஷோபாசக்தியையும் மார்க்ஸ் ஏங்கெல்ஸ் இடத்தில் வைத்துப் பார்த்தார்கள்.
முதன்முறையாக மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமை ஒரு விஷயத்தை பதிவு செய்கிறது. அது என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலில் நானும் எனது நண்பர்களும் சென்றிருந்தோம்.

மிகவும் கசப்பான அனுபவமாக இருந்தது அந்தக் கூட்டம். தமிழர்கள் மீதான துரோக அரசியலை அவர்கள் ஒரு போதும் மாற்றிக் கொள்ள மாட்டார்கள் என்ற முடிவிற்கே நாங்கள் மறுபடியும் வர நேர்ந்தது.

முதலில் டி.கே.ரங்கராஜன் பேசினார். அவர் ஏன் இந்த சமயத்தில்இந்தக் கூட்டம் நடத்தப் படுகிறது என்பதற்கு சொன்ன காரணம் ஆச்சர்யமாக இருந்தது. போர் முடிந்து ஒரு வருடம் ஆகி விட்டது. போர் முடிந்தப் பின் ராஜபக்ஷே செய்வதாக சொன்ன வாக்குறுதிகள் எதையும் இந்த ஒரு வருட காலத்தில் நிறைவேற்ற வில்லை. அதனால் தான் அது குறித்து என்ன செய்யலாம் என்று கலந்து பேசி இங்கே வந்திருக்கிறோம் என்றார். அவர் பேச்சையே இப்படித்தான் துவங்கினார்.

அவருக்கு அங்கே நடந்த போர் ஒரு விஷயமாக இல்லை. அந்தப் போரில் லட்சம் பேர் வரை கொல்லப்பட்டது அவருக்கு விஷயமாக இல்லை. அவர்கள் மீது தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள் எல்லாம் பயன்படுத்தப் பட்டது அவருக்கு விஷயமாக இல்லை. ராஜபக்ஷே புரிந்த போர்க்குற்றங்கள் விஷயமாக இல்லை. நிகழ்ந்த கற்பழிப்புகள், கருகிய குழந்தைகள், இடிந்த வீடுகள், எரிந்த வாழ்வுகள் என்று எதுவும் விஷயமாக இல்லை.

அங்கு நடந்த போர் சரியான போரே. போர் என்றால் அப்படித்தான் இருக்கும் அதை நாம் குறை சொல்ல முடியாது. அதிலெல்லாம் எங்களுக்கும் ராஜபக்ஷேக்கும் ஒரு கருத்து வேறுபாடும் இல்லை. ஆனால் போர் முடிந்தப் பின் அவர் தமிழ் மக்களுக்கு செய்வதாக சொன்ன வாக்குறுதிகள் எதையும் அவர் பின்பற்ற வில்லை. அந்த ஒரு விஷயத்தில் தான் எங்களுக்கும் அவருக்கும் சிறு மன வேறுபாடு ஏறபட்டிருக்கிறது என்பதாக இருந்தது அந்தத் தொனி.

பேச்சின் இடையே மிகவும் சாமர்த்தியமாக கவனமாக விஷமாக டி.கே ரங்கராஜன் ஒரு வாக்கியத்தைச் சொன்னார். ‘ எனக்குக் கிடைத்த தகவலின் படி பத்தாயிரம் பொதுமக்கள் போரின் போது கொல்லப் பட்டிருக்கிறார்கள் ‘ என்றார். இந்த பத்தாயிரம் என்ற எண்ணிக்கை ராஜபக்க்ஷே, பொன்சேகா சொல்லும் எண்ணிக்கையைக் காட்டிலும் குறைவான எண்ணிக்கை.

உலகெங்கும் ஈழ ஆதரவாளர்கள் போரில் 1 லட்சம் பேர் இறந்து போனதாக ஆதாரங்கள் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். கவிஞர் மனுஷ்யபுத்திரன் அந்த எண்ணிக்கையைப் பற்றி எழுதும் போது, ‘’இன்றுவரை முள்ளிவாய்க்கால் படுகொலை தினங்களில் அழிக்கப்பட்டவருக்குக் குறைந்த பட்ச நியாயம் கூட வழங்கப்படவில்லை என்பது மட்டுமல்ல, அவர்களுக்கு ஒரு சரியான எண்ணிக்கை கூட இல்லை. அவர்கள் இந்த உலகத்தின் கண்களிலிருந்து முழுமையாக மறைக்கப்பட்டு விட்டார்கள். அவர்களது சடலங்கள் எங்கே இருக்கின்றன என்று யாருக்கும் தெரியாது. இன்றும் ஹிட்லரின் மரண முகாம்களைப் பற்றி நாம் நெஞ்சுருகப் படிக்கிறோம். ஆனால் நம் கண்ணெதிரே இந்த யுத்தத்துடன் தொடர்பில்லாத பல்லாயிரக்கணக்கான மக்கள் மிகக் கொடூரமாக, எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்க அழிக்கப்பட்டதைப் பற்றி யாருக்கும் எந்த மன அதிர்ச்சியும் இல்லை. மாறாக, பட்டப்பகலில் இவ்வளவு வெளிச்சத்தில் இந்தக் கொலைகளை நிகழ்த்தியவர்கள், அவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்கள் எந்தக் கேள்விக்கும் பதில் சொல்ல அவசியம் இல்லாதவர்களாக அமர்ந்திருக்கிறார்கள். அவர்களது அரியணைகள் மேலும் பொலிவு பெற்றுள்ளன.’’ என்று எழுதுகிறார்.

தமிழர் எதிரிகளில் கடைந்தெடுத்த எதிரிகளான ராஜபக்ஷேவும் பொன்சேகாவும் எண்ணிக்கையை சொல்லாமல் குறைந்த உயிர்களைப் பலி கொண்டு இந்த போரில் வென்றோம் என்கிறார்கள். டிகே ரங்கராஜன் போரில் நடுவில் நின்று பிணங்களை எண்ணியவர் போல பத்தாயிரம் என்று ஒரு எண்ணிக்கை சொல்கிறார்.

ஈழ ஆதரவாளர்கள் இறந்தவர்களின் எண்ணிக்கையை கூட்டிச் சொல்லலாம். நீங்கள் விரும்பிய படி நாங்கள் சொல்ல முடியுமா என்று ச.தமிழ்செல்வன் போன்றவர்கள் அடிக்கடி கேட்கிறார்கள்.

ஈழ ஆதரவாளர்கள் இந்த எண்ணிக்கையை கூடுதலாகச் சொல்லாம். உலக கவனத்தை ஈழத்தின் பால் ஈர்ப்பதற்காக. ராஜபக்ஷே மற்றும் அவரின் ஆதரவாளர்கள் இந்த எண்ணிக்கையை குறைத்துத்தான் சொல்வார்கள்.போர்க்குற்றங்களிலிருந்து தப்பிப்பதற்காக.
ஆனால் நடுநிலையாளர்களும் மனிதாபிமானிகளும் கவிஞர் மனுஷ்யபுத்திரன் சொன்ன வாக்கியத்தைத்தான் சொல்வார்கள். ’இன்றுவரை முள்ளிவாய்க்கால் படுகொலை தினங்களில் அழிக்கப்பட்டவருக்குக் குறைந்த பட்ச நியாயம் கூட வழங்கப்படவில்லை என்பது மட்டுமல்ல, அவர்களுக்கு ஒரு சரியான எண்ணிக்கை கூட இல்லை. அவர்கள் இந்த உலகத்தின் கண்களிலிருந்து முழுமையாக மறைக்கப்பட்டு விட்டார்கள். அவர்களது சடலங்கள் எங்கே இருக்கின்றன என்று யாருக்கும் தெரியாது.’

டிகே ரங்கராஜனைப் போல சிங்கள இனவாத அரசின் மனம் குளிரும்படியான பத்தாயிரம் என்ற எண்ணிக்கையை சொல்ல மாட்டார்கள்.

உலகந்தழுவிய மனித நேயம் பேசுகிற இவர்களுக்கு ஈழ விஷயம் குறித்து மட்டும் இப்படி விஷப்பிரச்சாரம் செய்யும்படி எங்கிருந்து யாரால் நஞ்சூட்டப்படுகிறது என்பதுதான் புரியாத மர்மமாக இருக்கிறது.

கடைசியாக பிரகாஷ் காரட் பேச வந்தார். அவர் இலங்கைத்தமிழர் பிரச்சினைக்கு என்ன தீர்வு சொல்லப் போகிறார் என்று எல்லோரும் பதைபதைப்பில் இருந்தார்கள்.
அவருக்கும் அங்க நடந்த போர் பற்றி கவலை இல்லை. போர்க்குற்றங்கள் பற்றி கவலை இல்லை. இடிந்த வீடுகள், கருகிய குழந்தைகள், எரிந்த வாழ்வுகள் என்று எது பற்றியும் கவலை இல்லை. அவைகள் எல்லாம் நடக்க வேண்டியவையே என்பது போலவே பேச்சைத் துவங்கினார்

அரசியல் தீர்வு தான் சரியான தீர்வு, ஆயுதந் தாங்கிய போராட்டம் அல்ல என்றார். மணி முத்தான வாசகம் அது. இரண்டாவதாக முகாம்களில் அடைக்கப் பட்டிருக்கிற தமிழர்களை அவர்களின் சொந்த வாழ்விடங்களுக்கு அனுப்ப வேண்டும் என்றார். வெறுமனே அனுப்பக் கூடாது அவர்களுக்கு மறுவாழ்விற்கான வழிவகைகளச் செய்து அனுப்ப வேண்டும் என்றார். மூன்றாவதாக இரண்டு இனங்களிலும் இருக்கிற ஜனநாயக சக்திகள் பேசி தீர்வு காண வேண்டும் என்றார்.

இதை பேசுவதற்கு அவர் எடுத்துக் கொண்ட நேரம் சரியாக பதினைந்து நிமிடம்.அது சரி அறுபது ஆண்டுகள் நடைபெற்று வருகிற இனப்படுகொலை வரலாற்றை அறுபது ஆண்டுகளா பேச முடியும்?

இவர் சொல்லி விட்டார். பிறகென்ன உலகம் அவர் சொல்படி நடக்கப் போகிறது. தன்கடமை முடிந்து விட்டதாக காரில் ஏறி சென்று விட்டார்.

இனிமேல் சிபிஎம் கட்சி ஈழப்பிரச்சினை குறித்து என்னென்ன செய்ய வேண்டும் என்று அறிவிப்பார் என்று எதிர்பார்த்தேன். எதுவும் செய்ய வேண்டாம் வழக்கம் போல் அமைதியாக இருங்கள். நாம் கடந்த காலத்தில் அமைதியாக இருக்க வேண்டும் என்று எடுத்த முடிவுதான் இப்பொழுதும் சரியான முடிவாக இருக்கிறது. எனவே தொடரந்து அந்தப் பணியை செய்யுங்கள் என்று சொல்லாமல் சொல்லி விட்டு சென்று விட்டார்.

இது போல உலகில் நடக்கிற எல்லா பிரச்சினைகள் குறித்தும் தீர்வுகளை சொல்லி விட்டு வீட்டிலிருக்க வேண்டியது தானே எதற்கு தினசரி கட்சி அலுவலகத்திற்கு வந்து உண்டக் கட்டி தின்று கொண்டிருக்கிறார்கள் என்று என் மனதில் கேள்வி எழுந்தது.

யாரை ஏமாற்ற இந்த நாடகம். எதற்காக அவசர அவசரமாக இந்த நாடகத்தின் அரங்கேற்றம். எதற்காக இந்த நாடகத்திற்கு ‘ இலங்கைத் தமிழர்கள் பிரச்சினைக்குத் தீர்வு ‘ என்றொரு பொய்த்தலைப்பு என்று எதுவும் புரியவில்லை.

நாங்கள் இதுவரை எதுவும் செய்யாமல் இருந்ததுதான் இப்பொழுதும் சரியான காரியமாக இருக்கிறது என்று மார்தட்டிக்கொள்வதற்காகவே நடத்தப்பட்டக் கூட்டமாக இருந்தது.

Saturday, May 29, 2010

இலங்கைத்தமிழர் பிரச்சினைக்கு 15 நிமிடத்தில் தீர்வு;மோடிமஸ்தான் பிரகாஷ் காரட்டின் சாகசம்

கடந்த நான்கு ஐந்து தினங்களாக சென்னை அரசியல் ஆர்வலர்களிடையே பெரும் பரபரப்பு நிலவிக் கொண்டிருந்தது.எஸ் எம் எஸ்களும் இமெயில்களும் பறந்த வண்ணம் இருந்தன.
சிபிஎம்மின் தமிழ் மாநிலக்குழு ‘ இலங்கைத்தமிழர் பிரச்சினைக்கு தீர்வு’ என்ற தலைப்பில் ஒரு கருந்தரங்கம் நடத்த இருப்பதாக அறிவித்தது தான் இந்த பரப்பிற்கு காரணம். அதிலும் அவர்களுடைய பொதுச்செயலாளர் பிரகாஷ்காரட்டே நேரடியாக வந்து அந்தத் தீர்வை உரையாக வழங்கப் போகிறார் என்ற தகவலும் பரபரப்பிற்கு கூடுதல் காரணம்.

என்னையும் இந்த பரபரப்பு தொற்றிக் கொண்டது.

ஏனென்றால் இதுவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை ஈழத்தமிழர் பிரச்சினை சம்பந்தமாக எதையும் தெளிவாக பதிவு செயததில்லை. ஆங்காங்கே கிடைக்கிற பதிவுகள் எல்லாம் மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியதர வர்க்க தொழிற்சங்கத் தலைவர்கள் கட்சித் தலைமையின் விருப்பத்திற்கேற்ப தான்தோன்றிகளாக தனக்குத் தோன்றும் எல்லாவற்றையும் பதிவு செய்ததுதான். அவர்களில் பலர் சிங்கள அரசு உலகின் புனிதமான அரசுகளில் ஒன்று , இந்த விடுதலைப் புலிகள்தான் அங்கிருக்கிற அனைத்துப் பிரச்சினைகளுக்கும் காரணம் என்ற ரீதியிலேயே தங்களுடைய பதிவுகளை செய்திருக்கிறார்கள்.

அவர்களை குறை சொல்லி ஒன்றும் பயனில்லை. அவர்கள் அப்படியே வளர்ந்து விட்டார்கள்.

கட்சி ஒரு முடிவை தீர்க்கமாக சொல்லி விட்டால் அதையே கிளிப்பிள்ளைப் போல சொல்லிக் கொண்டிருப்பார்கள். கட்சி எதையும் திட்டவட்டமாக சொல்லாத கால கட்டத்தில் கட்சியின் உள் மனதை புரிந்து கொண்டு ஆளுக்கொன்றாக கத்திக் கொண்டிருப்பார்கள். ஈழப் பிரச்சினையிலும் அவர்கள் அவ்வாறுதான் ஒரு கையறு நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். பாவம் சிங்கள அரசை ஒரு இனவாத அரசு என்றாவது சொல்லலாமா என்பது கூட அவர்களுக்குத் தெரியவில்லை. விடுதலைப் புலிகளை எதிர்க்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் ராஜபக்ஷேவை இயேசு கிறிஸ்த்து என்று சொல்லும் இடம் வரை சென்றார்கள். இரயாகரனையும் ஷோபாசக்தியையும் மார்க்ஸ் ஏங்கெல்ஸ் இடத்தில் வைத்துப் பார்த்தார்கள்.
முதன்முறையாக மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமை ஒரு விஷயத்தை பதிவு செய்கிறது. அது என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலில் நானும் எனது நண்பர்களும் சென்றிருந்தோம்.

மிகவும் கசப்பான அனுபவமாக இருந்தது அந்தக் கூட்டம். தமிழர்கள் மீதான துரோக அரசியலை அவர்கள் ஒரு போதும் மாற்றிக் கொள்ள மாட்டார்கள் என்ற முடிவிற்கே நாங்கள் மறுபடியும் வர நேர்ந்தது.

முதலில் டி.கே.ரங்கராஜன் பேசினார். அவர் ஏன் இந்த சமயத்தில்இந்தக் கூட்டம் நடத்தப் படுகிறது என்பதற்கு சொன்ன காரணம் ஆச்சர்யமாக இருந்தது. போர் முடிந்து ஒரு வருடம் ஆகி விட்டது. போர் முடிந்தப் பின் ராஜபக்ஷே செய்வதாக சொன்ன வாக்குறுதிகள் எதையும் இந்த ஒரு வருட காலத்தில் நிறைவேற்ற வில்லை. அதனால் தான் அது குறித்து என்ன செய்யலாம் என்று கலந்து பேசி இங்கே வந்திருக்கிறோம் என்றார். அவர் பேச்சையே இப்படித்தான் துவங்கினார்.

அவருக்கு அங்கே நடந்த போர் ஒரு விஷயமாக இல்லை. அந்தப் போரில் லட்சம் பேர் வரை கொல்லப்பட்டது அவருக்கு விஷயமாக இல்லை. அவர்கள் மீது தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள் எல்லாம் பயன்படுத்தப் பட்டது அவருக்கு விஷயமாக இல்லை. ராஜபக்ஷே புரிந்த போர்க்குற்றங்கள் விஷயமாக இல்லை. நிகழ்ந்த கற்பழிப்புகள், கருகிய குழந்தைகள், இடிந்த வீடுகள், எரிந்த வாழ்வுகள் என்று எதுவும் விஷயமாக இல்லை.

அங்கு நடந்த போர் சரியான போரே. போர் என்றால் அப்படித்தான் இருக்கும் அதை நாம் குறை சொல்ல முடியாது. அதிலெல்லாம் எங்களுக்கும் ராஜபக்ஷேக்கும் ஒரு கருத்து வேறுபாடும் இல்லை. ஆனால் போர் முடிந்தப் பின் அவர் தமிழ் மக்களுக்கு செய்வதாக சொன்ன வாக்குறுதிகள் எதையும் அவர் பின்பற்ற வில்லை. அந்த ஒரு விஷயத்தில் தான் எங்களுக்கும் அவருக்கும் சிறு மன வேறுபாடு ஏறபட்டிருக்கிறது என்பதாக இருந்தது அந்தத் தொனி.

பேச்சின் இடையே மிகவும் சாமர்த்தியமாக கவனமாக விஷமாக டி.கே ரங்கராஜன் ஒரு வாக்கியத்தைச் சொன்னார். ‘ எனக்குக் கிடைத்த தகவலின் படி பத்தாயிரம் பொதுமக்கள் போரின் போது கொல்லப் பட்டிருக்கிறார்கள் ‘ என்றார். இந்த பத்தாயிரம் என்ற எண்ணிக்கை ராஜபக்க்ஷே, பொன்சேகா சொல்லும் எண்ணிக்கையைக் காட்டிலும் குறைவான எண்ணிக்கை.

உலகெங்கும் ஈழ ஆதரவாளர்கள் போரில் 1 லட்சம் பேர் இறந்து போனதாக ஆதாரங்கள் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். கவிஞர் மனுஷ்யபுத்திரன் அந்த எண்ணிக்கையைப் பற்றி எழுதும் போது, ‘’இன்றுவரை முள்ளிவாய்க்கால் படுகொலை தினங்களில் அழிக்கப்பட்டவருக்குக் குறைந்த பட்ச நியாயம் கூட வழங்கப்படவில்லை என்பது மட்டுமல்ல, அவர்களுக்கு ஒரு சரியான எண்ணிக்கை கூட இல்லை. அவர்கள் இந்த உலகத்தின் கண்களிலிருந்து முழுமையாக மறைக்கப்பட்டு விட்டார்கள். அவர்களது சடலங்கள் எங்கே இருக்கின்றன என்று யாருக்கும் தெரியாது. இன்றும் ஹிட்லரின் மரண முகாம்களைப் பற்றி நாம் நெஞ்சுருகப் படிக்கிறோம். ஆனால் நம் கண்ணெதிரே இந்த யுத்தத்துடன் தொடர்பில்லாத பல்லாயிரக்கணக்கான மக்கள் மிகக் கொடூரமாக, எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்க அழிக்கப்பட்டதைப் பற்றி யாருக்கும் எந்த மன அதிர்ச்சியும் இல்லை. மாறாக, பட்டப்பகலில் இவ்வளவு வெளிச்சத்தில் இந்தக் கொலைகளை நிகழ்த்தியவர்கள், அவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்கள் எந்தக் கேள்விக்கும் பதில் சொல்ல அவசியம் இல்லாதவர்களாக அமர்ந்திருக்கிறார்கள். அவர்களது அரியணைகள் மேலும் பொலிவு பெற்றுள்ளன.’’ என்று எழுதுகிறார்.

தமிழர் எதிரிகளில் கடைந்தெடுத்த எதிரிகளான ராஜபக்ஷேவும் பொன்சேகாவும் எண்ணிக்கையை சொல்லாமல் குறைந்த உயிர்களைப் பலி கொண்டு இந்த போரில் வென்றோம் என்கிறார்கள். டிகே ரங்கராஜன் போரில் நடுவில் நின்று பிணங்களை எண்ணியவர் போல பத்தாயிரம் என்று ஒரு எண்ணிக்கை சொல்கிறார்.

ஈழ ஆதரவாளர்கள் இறந்தவர்களின் எண்ணிக்கையை கூட்டிச் சொல்லலாம். நீங்கள் விரும்பிய படி நாங்கள் சொல்ல முடியுமா என்று ச.தமிழ்செல்வன் போன்றவர்கள் அடிக்கடி கேட்கிறார்கள்.

ஈழ ஆதரவாளர்கள் இந்த எண்ணிக்கையை கூடுதலாகச் சொல்லாம். உலக கவனத்தை ஈழத்தின் பால் ஈர்ப்பதற்காக. ராஜபக்ஷே மற்றும் அவரின் ஆதரவாளர்கள் இந்த எண்ணிக்கையை குறைத்துத்தான் சொல்வார்கள்.போர்க்குற்றங்களிலிருந்து தப்பிப்பதற்காக.
ஆனால் நடுநிலையாளர்களும் மனிதாபிமானிகளும் கவிஞர் மனுஷ்யபுத்திரன் சொன்ன வாக்கியத்தைத்தான் சொல்வார்கள். ’இன்றுவரை முள்ளிவாய்க்கால் படுகொலை தினங்களில் அழிக்கப்பட்டவருக்குக் குறைந்த பட்ச நியாயம் கூட வழங்கப்படவில்லை என்பது மட்டுமல்ல, அவர்களுக்கு ஒரு சரியான எண்ணிக்கை கூட இல்லை. அவர்கள் இந்த உலகத்தின் கண்களிலிருந்து முழுமையாக மறைக்கப்பட்டு விட்டார்கள். அவர்களது சடலங்கள் எங்கே இருக்கின்றன என்று யாருக்கும் தெரியாது.’

டிகே ரங்கராஜனைப் போல சிங்கள இனவாத அரசின் மனம் குளிரும்படியான பத்தாயிரம் என்ற எண்ணிக்கையை சொல்ல மாட்டார்கள்.

உலகந்தழுவிய மனித நேயம் பேசுகிற இவர்களுக்கு ஈழ விஷயம் குறித்து மட்டும் இப்படி விஷப்பிரச்சாரம் செய்யும்படி எங்கிருந்து யாரால் நஞ்சூட்டப்படுகிறது என்பதுதான் புரியாத மர்மமாக இருக்கிறது.

கடைசியாக பிரகாஷ் காரட் பேச வந்தார். அவர் இலங்கைத்தமிழர் பிரச்சினைக்கு என்ன தீர்வு சொல்லப் போகிறார் என்று எல்லோரும் பதைபதைப்பில் இருந்தார்கள்.
அவருக்கும் அங்க நடந்த போர் பற்றி கவலை இல்லை. போர்க்குற்றங்கள் பற்றி கவலை இல்லை. இடிந்த வீடுகள், கருகிய குழந்தைகள், எரிந்த வாழ்வுகள் என்று எது பற்றியும் கவலை இல்லை. அவைகள் எல்லாம் நடக்க வேண்டியவையே என்பது போலவே பேச்சைத் துவங்கினார்

அரசியல் தீர்வு தான் சரியான தீர்வு, ஆயுதந் தாங்கிய போராட்டம் அல்ல என்றார். மணி முத்தான வாசகம் அது. இரண்டாவதாக முகாம்களில் அடைக்கப் பட்டிருக்கிற தமிழர்களை அவர்களின் சொந்த வாழ்விடங்களுக்கு அனுப்ப வேண்டும் என்றார். வெறுமனே அனுப்பக் கூடாது அவர்களுக்கு மறுவாழ்விற்கான வழிவகைகளச் செய்து அனுப்ப வேண்டும் என்றார். மூன்றாவதாக இரண்டு இனங்களிலும் இருக்கிற ஜனநாயக சக்திகள் பேசி தீர்வு காண வேண்டும் என்றார்.

இதை பேசுவதற்கு அவர் எடுத்துக் கொண்ட நேரம் சரியாக பதினைந்து நிமிடம்.அது சரி அறுபது ஆண்டுகள் நடைபெற்று வருகிற இனப்படுகொலை வரலாற்றை அறுபது ஆண்டுகளா பேச முடியும்?

இவர் சொல்லி விட்டார். பிறகென்ன உலகம் அவர் சொல்படி நடக்கப் போகிறது. தன்கடமை முடிந்து விட்டதாக காரில் ஏறி சென்று விட்டார்.

இனிமேல் சிபிஎம் கட்சி ஈழப்பிரச்சினை குறித்து என்னென்ன செய்ய வேண்டும் என்று அறிவிப்பார் என்று எதிர்பார்த்தேன். எதுவும் செய்ய வேண்டாம் வழக்கம் போல் அமைதியாக இருங்கள். நாம் கடந்த காலத்தில் அமைதியாக இருக்க வேண்டும் என்று எடுத்த முடிவுதான் இப்பொழுதும் சரியான முடிவாக இருக்கிறது. எனவே தொடரந்து அந்தப் பணியை செய்யுங்கள் என்று சொல்லாமல் சொல்லி விட்டு சென்று விட்டார்.

இது போல உலகில் நடக்கிற எல்லா பிரச்சினைகள் குறித்தும் தீர்வுகளை சொல்லி விட்டு வீட்டிலிருக்க வேண்டியது தானே எதற்கு தினசரி கட்சி அலுவலகத்திற்கு வந்து உண்டக் கட்டி தின்று கொண்டிருக்கிறார்கள் என்று என் மனதில் கேள்வி எழுந்தது.

யாரை ஏமாற்ற இந்த நாடகம். எதற்காக அவசர அவசரமாக இந்த நாடகத்தின் அரங்கேற்றம். எதற்காக இந்த நாடகத்திற்கு ‘ இலங்கைத் தமிழர்கள் பிரச்சினைக்குத் தீர்வு ‘ என்றொரு பொய்த்தலைப்பு என்று எதுவும் புரியவில்லை.

நாங்கள் இதுவரை எதுவும் செய்யாமல் இருந்த துதான் இப்பொழுதும் சரியான காரியமாக இருக்கிறது என்று மார்தட்டிக்கொள்வதற்காகவே நடத்தப் பட்டக் கூட்டமாக இருந்தது.

Monday, May 3, 2010

ம க இ க பாதை! மடையர் பாதை! – 7.12

கம்யூனிஸ்ட்கள் என்றால் அறிவாளிகள் என்று ஒரு பொது எண்ணம் முன்பு சமூகத்தில் இருந்தது.

இப்போது கம்யூனிஸ்ட்களுக்கும் அறிவுக்கும் சம்பந்தம் இல்லாமல் போய் ஒரு மாமாங்கம் ஆகி விட்டது.

வெகுஜனப்பரப்பில் ஓரளவு வேலை செய்யும் கம்யூனிஸ்ட் கட்சிகளான சிபிஎம்மும் சிபிஐயும் முட்டாள்களாக ஆகியிருக்கிறார்கள் என்றால் மகஇக வினர் ஒரு படி மேலே போய் மடையன் சாம்பிராணி ஆகியிருக்கிறார்கள்.

மகஇக வினர் சமீப காலங்களில் இலக்கிய உலகை நோக்கி செய்து கொண்டிருக்கிற காரியங்கள் இவர்கள் மடையன் சாம்பிராணிகள் என்பதை உறுதி செய்கின்றன.
கவிஞர் சங்கர ராமசுப்பிரமணியன் வீட்டிற்கு மகஇக ரௌடிகளை அனுப்பி அவருடைய மனைவியிடம் ராமசுப்பிரமணியன் எழுதிய ஒரு கவிதையில் இருந்த பாலியல் சார்ந்த வார்த்தைகளை வாசித்துக் காட்டி விளக்கம் சொல்லும் படி கேட்டு அவரை பயமுறுத்தியிருக்கிறார்கள்.

கவிஞர் விக்கிரமாதித்தியனை ஆட்டோவில் அழைத்துச் சென்று துன்புறுத்தி அவமானப்படுத்தி அனுப்பியிருக்கிறார்கள்.

லீனா மணிமேகலையின் கூட்டத்தில் காட்டுமிராண்டிகள் போல் நடந்திருக்கிறார்கள்.அது மட்டுமில்லாமல் லீனா மணிமேகலையின் பாலியல் வார்த்தைகள் கொண்ட கவிதைகளை அச்சடித்து அவர் குடியிருக்கும் பகுதிகளில் விநியோகிப்போம் என்று பிளாக்மெயில் செய்கிறார்கள்.

முன்பு பிஜேபி ஆட்சியில் இருக்கும் போது ஆர்எஸ்எஸ் குண்டர்கள் ஒரு கூட்டமாக வந்து ஜெய் ராம் சொல்லச் சொல்வார்கள். நாம் சொல்ல மறுத்தால் மிரட்டுவார்கள். நம் வீட்டில் இருக்கும் பெண்களை பயமுறுத்துவார்கள். இன்று ஆர்எஸ்எஸ்ஸின் அபாயம் ஓரளவு நீங்கிய நிலையில் புதிய குண்டர்களாக மகஇக ரௌடிகள் உண்டாகியிருக்கிறார்கள்.

ஆண்டாண்டு காலமாக கம்யூனிஸ்ட் கட்சியை ஒரு தொற்று நோய் போல் தொற்றிக்கொண்டிருக்கும் விஷயங்களில் இந்தத் திமிர்தனமும் ஒன்று.
அவர்கள் தங்களை இந்த உலகை ரட்சிக்க வந்தவர்களாக நினைத்துக் கொள்வார்கள். சமூகத்திற்கு நல்லது செய்ய வந்தவர்கள் நாங்கள் என்ற மமதையில் அவர்களின் அறிவிற்கு எட்டாத விஷயங்களையெல்லாம் தவறான விஷயங்கள் என்று முடிவு செய்து அழிக்க முயற்சி செய்வார்கள்.

க்யூபாவில், புரட்சிக்குப் பின்னரான சமூகத்தில், அங்கே ஹோமோசெக்சுவல்ஸ் அதிகமாக இருக்கிறார்கள் என்பதை அறிந்து, அவர்களையெல்லாம் விரட்டி விரட்டி நாயைப் பிடிப்பது போல பிடித்து, அவர்களை ஒரு கப்பலில் ஏற்றி கனடாவிற்கு அனுப்பி வைத்தார்கள்.அவர்களில் நிறைய பேர் கவிஞர்கள் எழுத்தாளர்கள் பேராசிரியர்கள்.
இந்த நூற்றாண்டின் மகத்தான சிந்தனையான மார்க்ஸியம் , உலகின் பலநாடுகளில் இருந்தும் தூக்கி எறியப்பட்டதற்கு இவர்களைப் போன்ற குண்டர்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வந்ததே காரணம்.

எழுத்தாளர்கள் , கவிஞர்கள் என்பவர்கள் ஒரு சமூகத்தின் சிந்தனையாளர்கள். அவர்கள் எதைப்பற்றியும் சிந்திப்பதற்கும் அதை பதிவு செய்வதற்கும் இந்த ஜனநாயக சமூகம் உரிமை வழங்கியிருக்கிறது. அவர்கள் நாலாவிதமாகவும் யோசிப்பார்கள்.அவர்கள் யோசிப்பதன் கூட்டுமையே ஒரு சமூகத்தை ஒரு கட்டத்திலிருந்து மேலான இன்னொரு கட்டத்திற்கு இட்டுச் செல்லும்.

யாரோ சிலர் கீழ்மையானதாக யோசிப்பதால் அது ஒட்டு மொத்த சமூகத்தையும் கீழ் நிலைக்கு கொண்டு போய் விடாது. யாரோ சிலர் மிகவும் மேன்மையானதாக யோசித்து விடுவதால் அது ஒட்டு மொத்த சமூகத்தையும் மேலான நிலைக்கு கொண்டு சென்று விடாது. கீழான சிந்தனைகளை ஒரு சமூகம் அதுவே பரிசீலித்து கீழே தள்ளி விட்டு சென்று விடும். இப்படித்தான் பல்லாயிரம் ஆண்டுகளாக சமூகம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.இது தான் சமூக சிந்தனையின் செயல்பாடு. இதற்கிடையே ஒரு சிந்தனையாளனின் கடமை தான் சிந்திப்பதை பதிவு செயவதே.

ஒரு சமூகம் புறக்கணிக்கும் விஷயத்தை சிந்தித்தவர்களும் சமூக நன்மைக்காக செயல்பட்டவர்கள்தான்.ஒரு சமூகம் உள்ளெடுத்துக் கொண்ட விஷயத்தை சிந்தித்தவர்களும் சமூக நன்மைக்காக செயல்பட்டவர்கள் தான்.
இந்த அடிப்படை அறிவு இல்லாத காரணத்தால் தான் நாம் தான் இதற்கு ஜவாப்தவாரி என்று முடிவு செய்து இந்த மகஇக மடையர்கள் இப்படி யோசி அப்படி எழுது என்று கட்டளையிட்டு குண்டாந்தடியோடு அலைகிறார்கள்.

ஒரு பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு அரவாணிகள் ஹோமோசெக்சுவல்ஸ், லெஸ்பியன்ஸ் போன்ற வார்த்தைகளெல்லாம் அருவருப்பான வார்த்தைகளாக இருந்தன. அதை வாழ்க்கைமுறையாகக் கொண்டவர்கள் இழிவான மனிதர்கள் என்ற நிலை இருந்தது.சாருநிவேதிதா, ரமேஷ் பிரேம், சி.மோகன், இவர்களைப் போன்ற சில பத்து எழுத்தாளர்கள் அவர்களைப் பற்றி தொடர்ந்து எழுதியும் பேசியும் வந்தார்கள். இன்று ஹோமோசெக்சுவல்ஸ் ,லெஸ்பியன்ஸ், அரவாணிகள் இவர்கள் எல்லாம் விளிம்பு நிலை மனிதர்கள் என்றாகி அவர்களுக்கு ஒரு சமூக அந்தஸ்த்து உண்டாகத்துவங்கி இருக்கிறது. இந்த அளப்பரிய பணியை செய்தது எழுத்தாளர்களே அன்றி இந்த மகஇக மடையர்கள் இல்லை. உண்மையில் இந்த மகஇக மடையர்கள் சமூகத்தில் ஏற்படுத்திய மாற்றம் என்று எதுவும் இல்லை.

அரவாணிகள் ஹோமோசெக்சுவல்ஸ், லெஸ்பியன்ஸ் இவர்களுக்கு சமூக அந்தஸ்த்து உருவாகத்துவங்கிய வரலாற்று நிகழ்வு சாருநிவேதிதா மதுரையில் போட்ட ஒரு நாடகத்திலிருந்து துவங்கியது.அந்த நாடகத்தில் பாலியல் சார்ந்த காட்சிகள் இடம் பெற்றிருந்தன. அன்று அந்த நாடகத்தை நடைபெறவிடாமல் சிபிஎம் குண்டர்கள் தடுத்தார்கள். மேடையேறி நடிகர்களை இயக்குனரை அடித்தார்கள். இன்று அந்த காரியத்திற்காக வெட்கப் பட வேண்டியவர்களாக சிபிஎம் காரர்கள்தான் இருக்கிறார்களே தவிர சாருநிவேதிதா இல்லை.

சாருநிவேதிதா ரமேஷ் பிரேம் சி.மோகன் போன்ற எழுத்தாளர்கள் ஒரு பத்தாண்டுகளில் ஒரு மௌனப் புரட்சியை நடத்தியிருக்கிறார்கள். இந்த கலாச்சார குண்டர்களைப் போல வெறுமனே உண்டியலிடித்து வயிறு வளர்க்க வில்லை.

முன்பு ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும் போது யாருக்கேனும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றால் அதிமுக பெண் ரௌடிகளை அனுப்பி அவர்களை நோக்கி பாவாடையை தூக்கி காட்டச் செய்வார். அன்று லீனா மணிமேகலையின் கூட்டத்தில் மகஇக பெண் தோழர்கள் அந்த ஒரு காரியத்தை மட்டும் செய்யவில்லை. மகஇக இன்னும் அந்த உத்தரவை போடவில்லை போலிருக்கிறது. அடுத்த முறை அதையும் ஆவலுடன் எதிர்பார்க்கலாம்.
எந்தக் கட்சியாக இருந்தாலும் தொண்டர்கள் மட்டும் எப்பொழுதும் குண்டர்களாகவே பயன்படுத்தப் படுகிறார்கள்.அதிமுகவாக இருந்தாலும் அதுதான் உண்மை. மகஇக வாக இருந்தாலும் அதுதான் உண்மை.

யோனிக்கவிதை யோனிக்கவிதை என்று கூப்பாடு போடுகிறார்கள். ஏன் மகஇக கார ர்கள் யாரும் யோனியை பயன்படுத்துவதில்லையா? மகஇக பெண் தோழர்கள் யாருக்கும் யோனி இல்லையா?இவர்கள் யாரும் புணர்வதில்லையா? தோழர்கள் யாரும் சுயமைதுனம் செய்வதில்லையா? திருமணம் செய்து கொள்ளும் பெண்ணுக்கு யோனி இருந்தால் என்ன செய்வார்கள்? யோனியை அறுத்து எறியச் சொல்வார்களா?ஏன் யோனி இவர்களுக்கு இவ்வளவு அலர்ஜியாக இருக்கிறது?

எல்லோரும் யோனி வழியாகவே வருகிறோம்.யோனியைப் பார்க்க அலைகிறோம்.யோனி கிடைத்தால் சுவைக்கிறோம். யோனியைப் புனர்கிறோம். யோனியைக் கடிக்கிறோம். யோனியைக் குதர்கிறோம்.யோனியில் குண்டு வைத்து தகர்க்கிறோம். இவ்வளவு காரியங்கள் யோனியில் செய்யும் போது, யோனியை வைத்து கவிதை மட்டும் எழுதக்கூடாதா?
லீனாவின் கவிதையை விமர்சனம் செய்யக் கூடாது என்று யாரும் சொல்லவில்லை.விமர்சனம் செய்யுங்கள். பதில் கவிதை எழுதுங்கள்.லீனா கூட்டம் போட்டால் பதில் கூட்டம் போடுங்கள். ஏற்பாடு செய்திருக்கும் கூட்டத்திற்கு வந்து குழப்பம் உண்டாக்குவது உங்களின் திமிரையே காட்டுகிறது.

அது போதாது என்று லீனாவின் கவிதையை அச்சடித்து அவர் குடியிருக்கும் இடங்களில் இருக்கும் மக்களிடம் விநியோகிப்பார்களாம். ஏனென்றால் நம்மைச் சுற்றி இருக்கிற மக்கள் தான் அளவு கோளாம்.

லீனா மட்டும் அல்ல, மகஇக காரர்கள் உட்பட இங்கே பலரும் நம்மைச் சூழ்ந்திருப்பவர்கள் அங்கீகரிக்காத வாழ்க்கை முறைதான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.அவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதற்காக நாம் சாக முடியாது. அவர்கள் ஏற்றுக் கொள்ளும் விதமாக நாம் வாழவும் முடியாது.

ஒரு மகஇக தோழர் குடியிருக்கும் பகுதிக்குச் சென்று இவர் மகஇக வைச் சேர்ந்தவர் இன்னென்ன போராட்டங்களில் பங்கெடுத்திருக்கிறார். இன்னென்ன போராட்டங்கள் நடத்த திட்டமிட்டிருக்கிறார் என்று ஒரு நோட்டீஸ் அச்சடித்து கொடுத்தால் அவர் அந்த பகுதியில் வாழ முடியுமா?. அவர் குடியிருக்கும் வீட்டு உரிமையாளரால் உடனடியாக காலி செய்யப் படுவார்.

அப்படி செய்வேன் என்பது அப்பட்டமான மிரட்டல். கீழ்த்தரமான ரௌடிகளின் வேலை.
மிகவும் தீர்மானமாகவே மகஇக வினர் ரௌடிகளாக மாறிக் கொண்டிருக்கிறார்கள்.
குள்ளர்களை ஒருபோதும் தண்ணீர் ஊற்றி வளர்க்க முடியாது. அது போல மகஇக வினரையும் ஒரு போதும் விவாதித்து சரி செய்ய முடியாது. அவர்களுக்கு படிப்பறிவு குறைவு.பாட்டாளி வர்க்க சர்வதிகாரம் என்று மார்க்ஸிய புத்தகங்களில் வரும் வாக்கியத்தை படிக்காதவர்களின் சர்வதிகாரம் என்பதாக புரிந்து கொண்டு அதற்கு தன்னைத் தகவமைத்துக் கொள்வதற்காக படிப்பறிவில்லாமல் இருப்பவர்கள். முதியோர் கல்வித்திட்டம் போல ஒன்றில் சில புத்தகங்களை மட்டும் வாசித்து விட்டு உலக ஞானத்தை அடைந்து விட்டதாய் மதர்ப்பில் இருப்பவர்கள்.

ஒரு படிப்பறிவில்லாத கூட்டம் தனக்கு அறிவு இருப்பதாக நினைப்பது போல ஆபத்து உலகிற்கு வேறு எதுவும் இல்லை. ஹிட்டலர் முசலோனியில் துவங்கி பல சர்வதிகாரிகளும் இந்த நம்பிக்கையுடனே உலகத்திற்கு பெரும் கேட்டை விளைவித்தார்கள்.இன்று மகஇக வினர் சரியாக அந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.

தமிழக அரசியற் பரப்பில் .001% கூட அங்கீகாரம் இல்லாத இவர்கள், தமிழகத்தின் எந்த தளத்தாலும் அங்கீகாரிக்கப் படாதஇவர்கள் தனக்கு இந்த அதிகாரமெல்லாம் இருக்கிறது என்று நினைப்பது ரௌடிகள் தனக்குத் தானே பட்டம் சூட்டிக் கொள்வது போலத்தான் இருக்கிறது.
அதுவும் வினவின் சமீபகால நடவடிக்கைகளைப் பாருங்கள். அவர்கள் தம்மை ரௌடிகளாக மாற்றிக் கொண்டிருப்பது புரியும்.

வினவு தளத்தில் லீனாவைப் பற்றிய கட்டுரையில் கவிதை எழுதுவது பற்றி ஒருவர் சொல்லும் கருத்தைப் பாருங்கள்.

‘’மூளையின் இடது பகுதிக்கு அதிகம் வேலை கொடுக்காததால் சற்று ஊனமுற்றவர்கள், அதனை சரிக்கட்ட வலது பகுதியை சார்ந்திருக்கும் முயற்சி இது. யோனி, குறி என்று எழுதி புரட்சிப் பட்டம் வாங்கும் இந்த அறிவுத்துறை தப்பிலித்தனத்துக்கு கவிதை என்று பெயர் சூட்டிக் கொள்வதும், எனது வெளிப்பாட்டு மொழி கவிதை என்பதும் ஒரு தரம் தாழ்ந்த தந்திரம்.’’ - வினவு

எழுத்தாளர்கள் கவிஞர்களைப் பற்றிய எவ்வளவு வக்கிரமும் வெறுப்புணர்வும் கொண்ட வாக்கியம் இது என்பதைப் பாருங்கள்.

இந்தத் தப்பிலிகள் எல்லாம் ஒன்று சேர்ந்துதான் புரச்சீ நடத்தி அதிகாரத்தைக் கைப்பற்றி நம்மையெல்லாம் ஆளப் போகிறார்கள். இவர்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தால் இன்று இவர்கள் நடந்து கொள்வதைப் போன்ற தப்பிலித்தனம் தான் அன்று அவர்களின் ஆட்சி தர்மமாகவும் இருக்கும்

அன்பிற்குரிய எழுத்தாளர்களே !

மக இக ஃபாஸிஸத் தன்மை கொண்ட அமைப்பாக வெளிப்டத் தயாராகி விட்டதை உணருங்கள்.

அவர்களுடனான பகையை அறிவியுங்கள்.

உங்கள் நண்பர்களில் மகஇக வினர் இருந்தால் அவர்களை நட்பு வட்டத்தில் இருந்து வெளியேற்றுங்கள்.

அவர்களுக்கு நிதி கொடுப்பதை நிறுத்துங்கள்.

அவர்களின் அமைப்பை ஆய்வு செயவதையும் , அவர்களின் அமைப்பில் பெருக்கெடுத்து ஓடும் வக்கிரத்தையும் வெறுப்பையும் அம்பலப் படுத்துவதையும் தொடர் வேலையாக க் கொள்ளுங்கள்.

அன்பான மக இக பெண் தோழர்களே! உங்கள் யோனிகளைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். யோனி மீதி உங்கள் ஆண் தோழர்களுக்கு இருக்கிற வெறுப்பில் ஒரு நாள் உங்களது யோனிகளை இவர்கள் கிழித்தெறியக் கூடும்.! ஏனெனில் மகஇககாரர்களுக்கு அடிப்படையாய் இருப்பது அறிவின் மீதான வெறுப்பு, யோனியின் மீதான வெறுப்பு மட்டுமே.